புதன், 10 ஜனவரி, 2018

RK Nagar தினகரன் வெற்றி பெற்றால் இந்த ஆட்சிக்கு வேட்டு வந்துவிடும் என்று மக்கள்? ஸ்டாலின் இளைஞரணி,,,,

tamilthehindu :ஆர்.கே.நகரில் திமுகவின் கணக்கு எப்படி தவறானது, ஏன் தோற்றோம் என திமுக இளைஞரணி கூட்டத்தில் மனம் திறந்து மு.க.ஸ்டாலின் பேசினார்.
செவ்வாய்க்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
''அண்மையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கினோம். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்திருக்கிறது, அவர்களுடைய வாக்குகள் இரண்டாகப் பிரியும். திமுக அந்தத் தொகுதியில் இரண்டொருமுறை வெற்றிகளையும், பலமுறை தோல்விகளையும் கண்டிருக்கிறது என்று கணக்கிட்டு பணியாற்றினோம்.
வெற்றி பெற்ற நேரத்திலும், தோல்வியுற்றபோதும் திமுக பெற்றிருந்த வாக்குகளை இப்போது பெற்றால் நாம் வெற்றியடைவோம் என்று எண்ணியிருந்தோம். போதாக்குறைக்கு நம்முடன் ஒரு மெகா கூட்டணியும் இருந்தது. அவர்களின் வாக்குகளை எவ்வுளவுதான் குறைத்தாலும், குறைந்தது எல்லா கட்சிகளும் சேர்ந்து 5000 வாக்குகள் கிடைக்கும் என்று கணக்கிட்டோம்.

இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம்!

விகடன் தினேஷ் ராமையா :  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான
இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த கே. சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ள ஏ.எஸ்.கிரண்குமாரின் மூன்றாண்டுகள் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவராக திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள கே. சிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982 இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார். சென்னை எம்.ஐ.டி. கல்விநிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் கடந்த 1980-ல் பட்டம்பெற்ற சிவன், கடந்த 2006-ம் ஆண்டில் மும்பை ஐ.ஐ.டி-யில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

2.44 மடங்கு ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்வதாக தொமுச அறிவிப்பு

tamilthehindu : 2.44 மடங்கு ஊதிய உயர்வை நிபந்தனையுடன் ஏற்று போராட்டத்தை விலக்கி கொள்ளத் தயார் என முக்கிய சங்கமான தொமுச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை சிஐடியூ தரப்பும் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்விலிருந்து நீதிபதி மணிக்குமார் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

வேலை நிறுத்தம் தொடரும் ... தொழிற்சங்கங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை ... உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்

மாலைமலர் :நாளை ஐகோர்ட் உத்தரவுக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சென்னை: ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ரூ.750 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்த நிலையில், 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ள நிலையில், 750 கோடி ரூபாய் ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர். இந்நிலையில், வேலை நிறுத்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம் என்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது.

முசுலீம்களை நேசித்ததற்காக மாணவியை தற்கொலை செய்த இந்துமதவெறியர்கள் !

பாஜக -வின் இளைஞர் அணித் தலைவரான அனில்ராஜ், அந்த பெண்ணின் (தன்யாஸ்ரீ) வீட்டிற்கு சென்று நேரிலேயே மிரட்டியிருக்கிறார். முசுலீம்களோடு எவ்வித நட்பும் பாராட்டக் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.
நான் முசுலீம்களை நேசிக்கிறேன்” என்று ஒரு வாட்ஸ் அப் செய்தி அனுப்பியதற்காக ஒரு இளம்பெண் தற்கொலை செய்திருக்கிறார். தன்யாஸ்ரீ, வயது 20, இளங்கலை வணிகவியல் மாணவர். கடந்த சனிக்கிழமை 6.01.2018 அன்று அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து போனார்.
இந்தியாவின் காஃபி கோப்பை என அழைக்கப்படும் சிக்மகளரூ நகருக்கு அருகே உள்ள முடிகிரி நகரில் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது.
தற்கொலை செய்து கொண்ட மாணவி தன்யாஸ்ரீ
அந்த இளம்பெண் தனது நண்பரான சந்தோஷுடன் கடந்த வெள்ளியன்று சாட் மூலம் சாதி – மதம் குறித்து விவாதித்திருக்கிறார். அதில்தான் அவர் “நான் முசுலீம்களை நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
மதவெறி ஏறியிருந்த சந்தோஷ் அந்த செய்தியால் எரிச்சலுற்று, உடனே அந்த தகவலை உள்ளூர் பஜ்ரங் தள் மற்றும் விசுவ இந்து பரிஷத் உறுப்பினர்களுக்கு பகிர்ந்திருக்கிறார். பிறகு அந்த செய்தி வைரலானது. கூடவே தன்யாஸ்ரீ மற்றும் அவரது தாயார் மீது உளவியல் சித்திரவதை ஆரம்பமானது.

மலேசியா போன கோடீஸ்வர தமிழ் சினிமா பிச்சைக்காரர்கள் !

வினவு :எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து நடிகர் சங்க கட்டடம் கட்டுறேன்னு சொல்லி பிச்சையெடுப்பதையே பொழப்பா வச்சிருக்கானுங்க தமிழ்சினிமா நடிகர்கள். மலேசியா சிங்கப்பூர், துபாய், லண்டன் என கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள் பணம் மட்டும் தேறவில்லை.

சென்னையில் நடிகர்சங்க கட்டடத்துக்காக நட்சத்திர கிரிக்கெட் நடத்தி அடிக்கடி பிச்சை எடுப்பது வழக்கம், அதிலும் தேறலை போல சிவாஜி – MGR காலம், ரஜினி – கமல் காலம் அஜீத் – விஜய் காலம் தனுஷ் – சிம்பு வரை 4 தலைமுறையைக் கடந்துவிட்டது. இதில் MGR & ஜெயா, கருணாநிதியென சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்தும் நடிகர்சங்கத்துக்கு கட்டடம் கட்ட முடியவில்லை.
அப்படி என்னடா அந்த நடிகர்சங்க கட்டடம், எகிப்து பிரமிடுகூட இவ்வளவு காலம் கட்டி இருக்கமாட்டாய்ங்க போல. எவ்வளவு பட்ஜெட்டுனா 25 கோடி அல்லது 30 கோடி என்கிறார்கள் MGR காலத்தில் 25லட்சமாக இருந்தது ஆனால் நட்சத்திர நடிகர்கள் மற்றும் முன்னணி 10 நடிகர்கள் நினைத்தால் MGRகாலத்துலேயே முடிந்திருக்கும்.

ஏன் நடக்கவில்லை காரணம் பிச்சைக்காரப் புத்திதான் 10,000 கோடி ரஜினி, MGR 500கோடி (அன்று) கமல் 2,000 கோடி, ஜெயா 75,000கோடி, சிவக்குமார், சத்யராஜ், த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், அம்பிகா, ராதா எல்லோரும் 2% தந்தாலே ஒரு தாஜ்மகாலே கட்டலாம் இதில் சத்தமில்லாத பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள் சொத்தில் ரஜினியைவே தாண்டும் நடிகர் ராஜேஷ், அடுத்தது ராதிகா, குஷ்பு , ஜெயராம், அரவிந்தசாமி போன்ற நில முதலைகள் வேறு இருக்கிறது.

1758 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் கோட்டையை காப்பாற்ற போரிட்ட தலித்துகள்

சென்னைBBC : 1818 ல் பீமா நதிக்கரையில் மஹர்கள் எப்படி வீரஞ்செறிந்த போரில் பங்கேற்றார்களோ, போரை நடத்தி வென்றார்களோ அப்படி ஒரு வீர வரலாறு தமிழ்நாட்டு தலித் சமூகத்தவருக்கும் உண்டு. 1758 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையால் சென்னை முற்றுகையிடப்பட்டது.
பல மாதங்கள் முற்றுகையிட்டும் சென்னையை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் துருப்புகளுக்குப் பறையர் சமூகத்தினர் உதவியாக இருந்ததுதான்.
சென்னைக்கு வயசு எத்தனை?18 ஆம் நூற்றாண்டில் காலனி ஆதிக்கப் போட்டியில் பிரிட்டிஷ் படைகளும் பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டன. 1756 ல் ஆரம்பித்து 1763 வரை ஏழு ஆண்டுகள் உலகின் பல்வேறு நாடுகளில் இந்தப் போர்கள் நடந்தன. அதில் சென்னையைக் கைப்பற்றுவதற்காக நடந்த யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் பெற்ற வெற்றியின் மூலம்தான் பிரெஞ்சு காலனி ஆதிக்க முயற்சிகள் முறியடிக்கப்பட்டு பிரிட்டிஷ் மேலாதிக்கம் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டது.
சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ரா/ ஜெனரல் லாலி தலைமையில் கடலூரிலிருந்த செயின்ட் டேவிட் கோட்டையைக் கைப்பற்றியபின் 1758 டிசம்பர் மாதத்தில் சென்னைக்குள் பிரெஞ்சுப் படைகள் நுழைந்தன. அதைக் கண்டதும் சென்னையிலிருந்த பெரும்பாலோர் ஊரைக் காலிசெய்துவிட்டு வேறு ஊர்களுக்குப் போய்விட்டனர்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுப் படை முற்றுகையிட்ட நிலையில் போதுமான துருப்புகள் இல்லாமல் கல்கத்தாவிலிருந்து வரவேண்டிய கப்பல்படையின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத் தளபதி ஜெனரல் பிகோட் என்பவர் தனது துபாஷியான ரஞ்சேஸ்ரீ முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவரை அழைத்துக்கொண்டு பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்ட தலித் குடியிருப்புக்கு வந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பாதுகாக்க உதவுமாறு அங்கிருந்த பறையர் சமூகத்துத் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.

தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதை தீட்டு என்று ஒதுக்கிய வரலாறு


சாந்தி நாராயணன்: தீட்டாயிடுத்து ! தீட்டாயிடுத்து !
கலைஞர் கருணாநிதி - குடியரசு-09-02-1946
தீட்டாயிடுத்து!
1946ல் திருவையாற்றில் நடை பெற்ற தியாகராஜ அய்யர் உற் சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் சித்தி விநாயகனே என்று பாடினாராம்.
அடுத்தப்படி கச்சேரி செய்ய வந்த அரியக்குடி ராமானு அய்யங்கார் " தேசிகர்
தமிழ் பாடி சன்னிதானத்தைத் தீட்டுப் படுத்திவிட்டார். நான் இந்த மேடை யில் பாட மாட்டேன் " என்று கூச்ச லிட்டு தாம்தோம் எனத் தாண்டிக் குதித்தாராம்.
இது இன்றுநேற்றல்ல, மனுமந் தாதா காலத்திலிருந்து "தமிழ் பாஷை நீச்ச பாஷை" என்றும் "பிராமணாள் ஸ்நானம் செய்து விட்டு சாப்பிடும் வரை தமிழ் பேசக் கூடாது " என்றும், வீட்டில் விசேஷ காலங்களில் தமிழ் வாயில் நுழையக் கூடாதென்றும் கூறி வந்ததோடு அனுஷ்டானத்திலும் இருந்து வருகிறது. அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்து வந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்து விட்டது.
தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை!

போக்குவரத்து ஊழியர்கள் பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் குதித்தனர்


மின்னம்பலம்: போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் 6ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதிப்பு கணிசமாகக் கூடியுள்ளது.. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்னும் கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்துவருகின்றனர். கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வலியுறுத்திப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துக் கோட்ட தலைமை அலுவலகங்கள் முன்பும் குடும்பத்துடன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். விருதுநகர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். பயணிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஏன் மறுக்கிறது என்று போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 154 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தமிழிசையின் விலகல் கடிதத்தை அமித் ஷா ஏற்கவில்லை ... பொன்.ராதா குடைச்சல்

மின்னம்பலம் :தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல் கடந்த இரண்டு நாட்களாகவே வைரலாக பரவி வருகிறது. ஆனால், இதுவரை பிஜேபி தரப்பில் இருந்தோ, தமிழிசை தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. மறுப்பும் இல்லை. என்ன நடந்தது என பிஜேபி வட்டாரத்தில் விசாரித்தோம்.
‘ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழிசை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். நோட்டாவைவிட குறைவான வாக்குகளை ஆர்.கே.நகரில் வாங்கியிருந்தாலும் அதையும் சமாளித்துக் கொண்டு மீடியாவில் பேசி வந்தார். ஆனால், தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி அரசியலை சமாளிக்க முடியாமல்தான் தமிழிசை ரொம்பவே திணற ஆரம்பித்துவிட்டாராம். தமிழிசைக்கும், மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் ஆரம்பத்தில் இருந்தே சில மன வருத்தங்கள் இருந்து வருகிறது. தமிழிசை தரப்பில் இருந்து எந்த தகவல் சொன்னாலும் அதை பொன்னார் ஆட்கள் கேட்பதே இல்லையாம்.

தகுதி நீக்க வழக்கு 18 எம் எல் ஏக்கள் மட்டுமல்ல பன்னீரின் 11 எம் எல் ஏக்களையும் ஏன் தகுதி நீக்க கூடாது? நீதிபதி கேட்ட கேள்வி!

மின்னம்பலம் :தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு இன்று (ஜனவரி 9) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீதிபதி சுந்தரின் கேள்விக் கணைகள் அரசுத் தரப்பை உலுக்கி எடுத்திருக்கின்றன.
இந்த வழக்கில் டிடிவி தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் இறுதி வாதம் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று முதல்வர் தரப்பின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழக சட்டமன்றம் 8ஆம் தேதி தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கின் விசாரணை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ‘’தினகரன் தரப்பின் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநரைச் சந்தித்து முதல்வருக்கு எதிராக மனு அளித்ததன் மூலம் அவர்கள் அரசுக்கு எதிராகச் செயல்பட்டது தெளிவாகிறது. கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக அவர்கள் செயல்பட்டனர்’’ என்று வாதிட்டனர்.
முதல்வர் தரப்பின் வாதங்களின்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமைதிகாத்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர் அடிக்கடி கேள்விகள் கேட்டபடி இருந்தார்.

ராமகோபாலன் கனிமொழி, வைரமுத்துவுக்கு கண்டனம் ! இந்து மதத்தை இழிவு படுத்துவதை...

tamilthehindu :வைரமுத்து, ராமகோபாலன்   –  கோப்புப் படம்

ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாளைப்பற்றி அவதூறாகப் பேசியதாக கவிஞர் வைரமுத்துவுக்கு இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”பாவை நோன்பு மாதமாகிய மார்கழி மாதத்தில், திருப்பாவை இயற்றிய, ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாள் நாச்சியாரை கொண்டாட ராஜபாளையம் திருக்கோயிலில் விழா நடைபெற்றது. இவ்விழாவானது, பாரம்பரியமிக்க தனியார் நாளிதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு பேசிய, வைரமுத்து, ஆண்டாள் பற்றி அவதூறாகப் பேசியது பக்தர்களின் மனங்களை புண்படுத்தும் செயல். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. வயிற்றுப் பிழைப்பிற்காக தமிழ் மொழியைப் பேசித் திரியும் வைரமுத்துவிற்கு, ஆண்டாள் நாச்சியாரைப் பற்றி பேச தகுதி உண்டா? நிச்சயம் கிடையாது. இதுபோன்ற அவதூறான கருத்தினைப் பேசிட எது இவருக்கு துணை நிற்கிறது, எது காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

செவ்வாய், 9 ஜனவரி, 2018

எச்.ராஜாவின் படு மோசமான .... சண்டையை தூண்டும் வன்முறை பேச்சு .. ...


Sankar Ganesh : · கலைஞரில்லை! தமிழகமே கடவுளை கழுவி ஊற்றிய/ஊற்றும்/ஊற்ற போகும் மாநிலம் தான். இராமன் பெயரில் கொத்து கொத்தாக பிணம் விழுகும் 20ஆம் நூற்றாண்டில் அந்த இராமனுக்கே செருப்பு மாலையிட்ட மண், தமிழ் மண்! ஒரு பேச்சிற்காகவே சொல்வோம், கடவுளை நிந்தித்த கலைஞரின் பேச்சை கடவுள் நிறுத்திவிட்டார்! கடவுளை மணி நேரம் தவறாமல் தொழுத, அதிலும் தீவிர இராம பக்தரான காந்தி அவர்களை சுட்டுக் கொன்ற RSS அமைப்பிற்கு இராமன் ஏன் தண்டனை தரவில்லை? பக்தனை காக்காமல் பக்தனை  கொன்ற தீவிரவாத கூட்டத்தை காக்கும் கடவுளின் நேர்மையா இது!
Anbukkarasan Shanmugam :1949-ஆம் ஆண்டு ரமண ரிஷி.இடது புஜத்தின் கீழ்பாகத்தில் 'சர்கோமா' எனப்படும் ஒரு விதப் புற்று நோய்க் கட்டி புறப்பட்டது. ஆரம்பத்தில் சிறியதாக இருந்த அது இரண்டு முறை அறுவைச் கிச்சை செய்யப்பட்ட பிறகும் மீண்டும் பெரியதாக வளர்ந்து உடம்பின் இரத்த மெல்லாம் உறிஞ்சி ஊற்றாக வெளியிற் பெருக்க ஆரம்பித்தது. ரேடியம் சிகிச்சை போன்ற பல்வேறு வைத்திய முறைகளுங் கையாளப்பட்டன.

சபா கச்சேரிகள் மட்டுமே ’சங்கீதம்’ என்பதை தகர்த்தெறிந்த கானா விழா

Govi Lenin  : சென்னையை பாரம்பரிய இசை நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள நிலையில், மார்கழி சீசன் சபா கச்சேரிகள் மட்டுமே ’சங்கீதம்’ என நிறுவப்பட்டதை தகர்த்தெறியும் முயற்சிகளில் ஒன்றுதான் இயக்குநர் பா.ரஞ்சித் முன்னெடுத்த Casteless Collective கானா விழா. இத்தகைய இசையரங்குகள் இன்றைய தேவை. டி.எம்.கிருஷ்ணா போன்ற சபா பாடகர்களும் மீனவர்கள் வாழும் பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவது பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத மாற்றம்.
அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே, இதுபோன்ற சபா கச்சேரிகளுக்கு சவாலாகத்தான் தமிழிசையை முன்னெடுத்தார் பெரியார். தமிழிசை சங்கங்களை பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் ஆதரித்தனர். அந்த ஊக்கத்தின் விளைவுதான், இன்றும்கூட ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழிசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. பா.ம.க.வின் பொங்கு தமிழ் அறக்கட்டளை மேற்கொள்வதும் இத்தகையப் பணிகள்தான். முன்பு, மாணவர் நகலகம் அருணாசலம், தந்தை பெரியார் தமிழிசை மன்றம் மூலமாக ‘மார்கழி சபா’க்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்தினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் இத்தகைய இசை நிகழ்வுகளில் கவனம் செலுத்துகின்றன.
இசை என்பது கலை என்பதைக் கடந்து, அது எளிய மக்களின் கருவி என்பதையும் அதிகாரத்தைப் பணிய வைக்கும் ஆயுதம் என்பதையும் ம.க.இ.க. போன்ற அமைப்புகள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக உணர்த்தி வருகின்றன.

தினகரன் வெற்றி: வழக்கு தள்ளுபடி!

தினகரன் வெற்றி: வழக்கு தள்ளுபடி!
மின்னம்பலம் :ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இன்று (ஜனவரி 9) சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சசிகலாவின் உறவினரான தினகரன். நேற்று (ஜனவரி 8) தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், அவர் சுயேச்சை உறுப்பினராகப் பங்கேற்றார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

வைகோ எச்சரிக்கை :நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்கினால்?

நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்கினால்?மின்னம்பலம் :சட்டவிரோதமாக நியூட்ரினோ திட்டத்தை தொடங்க நினைத்தால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூட்ரினோ திட்டத்தை சிறப்புத் திட்டமாக கருதி சட்டத்துக்குப் புறம்பாக "சுற்றுச்சூழல்" அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதற்குக் கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ( ஜனவரி 9) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் அமைய இருந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிய போராட்டங்களை நடத்தி வந்தனர்.

திரையரங்கில் தேசியகீதம் கட்டாயமில்லை! மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றது


மின்னம்பலம்: திரையரங்கில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தற்போதைக்கு வாபஸ் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பழைய உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இதன் காரணமாக, மறு உத்தரவு வரும்வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயமில்லை.
2016 நவம்பர் 30ஆம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கேரள திரைப்பட சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் விசாரித்தனர். அப்போது பழைய உத்தரவில் திருத்தம் செய்யலாம் என்று நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார்.

குட்கா வழக்கில் .. ஜெயக்கொடி பணியிட மாற்றம் என்னன்னா பேரம் படிந்ததா> படியல்லையா ?

நக்கீரன் :குட்கா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட வி.கே. ஜெயக்கொடி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஜெயக்கொடியை நில நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக மோகன் பியாரேவை நியமித்தது தமிழக அரசு. தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர்கள், காவல்துறையின் உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது வருமான வரித்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டது. அதன்படி, குட்கா ஊழல் வழக்கை விசாரிக்க மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் பதவிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். தற்போது அவர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

ஹெச்1-பி விசா விதிமுறையில் மாற்றம் இல்லை! அமெரிக்க இந்தியர்கள் பயப்பட வேண்டியதில்லை

Veera Kumar -Oneindia Tamil வாஷிங்டன்: ஹெச்1-பி விசா வைத்துள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் அமெரிக்க அரசுக்கு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது இந்திய தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அரசின் கொள்ளை, அமெரிக்காவுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பது. இதன் ஒரு பகுதியாக, ஹெச்1-பி விசா விதிமுறைகளில் திருத்தம் செய்ய அமெரிக்க அரசு முயல்வதாக தகவல்கள் வெளியாகின. இந்த நடவடிக்கையால், இந்தியாவை சேர்ந்த சுமார் 7,50,000 பேர், நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழல் உருவாகும் என கணிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை (USCIS) அதுபோன்ற எந்த ஒரு திட்டத்திலும் இல்லை என்று அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ ஏஜென்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 "நாங்கள் விசா ஒழுங்குமுறை விதிகளில் எந்த மாற்றமும் செய்யும் திட்டத்தில் இல்லை. எனவே, ஹெச்1-பி விசா வைத்துள்ளோர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட தேவையில்லை" என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.< அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறையின் மீடியா தொடர்பு தலைமை அதிகாரி ஜொனாதன் வித்திங்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விசா நடைமுறையில் மாற்றங்கள் வந்தால் கூட, ஹெச்1-பி விசா வைத்துள்ளோர் நாட்டை விட்டு வெளியேற தேவை இருக்காது. AC21 பிரிவு 106 (a) - (b)-ன்கீழ், ஓராண்டு இன்க்ரிமென்ட்டில் நீட்டிப்பு கேட்க முடியும் (request extensions in one-year increments).

எட்வர்டு ஸ்னோடன் : ஆதார் ஊழலை அம்பலபடுத்திய இந்திய பத்திரிகை .... சர்வதேச விருது வழங்க படவேண்டும்

  Edward Snowden @Snowden
The journalists exposing the breach deserve an award, not an investigation. If the government were truly concerned for justice, they would be reforming the policies that destroyed the privacy of a billion Indians. Want to arrest those responsible? They are called @UIDAI. https://twitter.com/rahulkanwal/status/949847121884262401 
Aadhaar Expose: Edward Snowden Praises Tribune Journalist, Says UIDAI Officials Should Be Arrested

tamilthehindu :இந்தியாவில் ஆதார் தொடர்பான விதிமீறல்களை தெரியப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்க வேண்டுமே தவிர விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்று அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்துள்ளார்."ரூ.500 அளித்தால் ஆதார் விவரங்களை தரகர் மூலம் 10 நிமிடங்களில் பெற்றுவிடலாம்" என்று சண்டிகரில் இருந்து வெளியாகும் 'தி டிரிபியூன்' பத்திரிகையில் செய்தி வெளியானது.

காவியே வெளியேறு ! கோவன் பாடல்கள் | வீடியோ

வினவு :இனியும் இந்த அரசமைப்பை தூக்கி சுமக்க வேண்டியதில்லை என்பதை மகஇக பாடகர் தோழர் கோவன் மற்றும் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்கள் உணர்ச்சியுடன் இசைக்கின்றன.

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டில் நடந்த மக்கள் போராட்டங்களையொட்டி வெளியிடப்பட்ட பாடல்களின் தொகுப்பை நக்கீரன் இணைய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
2017 -ம் ஆண்டின் துவக்கமே மெரினா எழுச்சியுடன் தான் தொடங்கியது, அப்போராட்டமானது தமிழகத்தில் காவிகள் காலூன்ற முடியாது என பறைசாற்றியது. அதைத் தொடர்ந்து நீட் தேர்வு விசயமாகட்டும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகட்டும் எதுவானாலும் காவி கும்பலுக்கு இது வேற தமிழ்நாடு என நிரூபித்து வருகிறது.
மெரினா கரையில் நடந்த எழுச்சியாகட்டும், 2017 -ம் ஆண்டின் இறுதியில் குமரிக்கரையில் பல மீனவ மக்ககளைக் காவு வாங்கிய ஒக்கி புயலாகட்டும் அனைத்தும் இந்த அரசமைப்பின் கையாலாகத்தனத்தை காட்டிவிட்டது. ஆக இனியும் இந்த அரசமைப்பை தூக்கி சுமக்க வேண்டியதில்லை என்பதை மகஇக பாடகர் தோழர் கோவன் மற்றும் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்கள் உணர்ச்சியுடன் இசைக்கின்றன.
“நக்கீரன்” பத்திரிகைக்கு எமது நன்றி!

ரஜினி : அரசியலும் ஆன்மீகமும் கீரியும் பாம்பும் போல ஒப்பிடவும் முடியாது ஒப்பிடவும் கூடாது Flashback ..


வெப்துனியா :நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அப்போது தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டு சொன்னார். ரஜினியின் இந்த அரசியல் நிலைப்பாடு பல்வேறு விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் முன்பு ஒருமுறை அரசியலையும் ஆன்மீகத்தையும் ஒப்பிடவே கூடாது, அது கீரியும் பாம்பும் போன்றது என கூறியதை ஒரு பத்திரிகையின் தமிழ் இணையதளம் வெளியிட்டு அவரது இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கடந்த 1995-ஆம் ஆண்டு தனது பிறந்த நாளை முன்னிட்டு தூர்தர்ஷன் மூலம் பேட்டியளித்த நடிகர் ரஜினி பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் அரசியல் ஆன்மீகம் ஒப்பிடுங்க? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரஜினி, ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. ஏன்னா அது பாம்பும் கீரியும் மாதிரி, எதிர்த்திசையில் உள்ளவை என கூறியுள்ளார். ஆனால் தற்போது ரஜினி எதிர் திசையில் உள்ள ஆன்மீக அரசியலை மேற்கொள்ள உள்ளதால் அவரது இந்த பேட்டி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து அவரது இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

இசையும் ஜாதியும் சேர்ந்தே இருப்பவையா ? சேராது இருப்பவையா ?

Shalin Maria Lawrence : இசைக்கு ஜாதி இல்லை இசை வேளாளர் என்கிற ஒரு ஜாதியே இங்கு இருக்கிறது அறிவாளிகளே. அதுமட்டுமில்லாமல் அந்த சமூகத்தை சார்ந்த பெண்கள் தேவதாசிகளாக அடிமை படுத்தப்பட்டார்கள்கள்.அவர்களின் ஆண்கள் சட்டை இல்லா வெறும் உடம்போடு இசைக்க கட்டாயப்படுத்தபட்டார்கள். மேளக்கார்கள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் பந்தியில் மற்றவர்கள் சாப்பிட்ட பின் கடைசியில் தான் சாப்பிட வேண்டும். அவர்களுக்கு மேலே துண்டு போடும் உரிமையை திராவிட இயக்கதலைவர் திரு பட்டுக்கோட்டை அழகிரி வாங்கி தந்தார். அதன் நினைவில் தான் அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர் கலைஞர் தன் பிள்ளைக்கு அழகிரி என்று பெயரிட்டார். அந்த சமூகத்தை சார்ந்த நாதஸ்வர வித்வான் டி என் ராஜரத்தினம் பிள்ளை கோயில் ஒன்றில் வாசிக்க போக ,அவரை சட்டை அணிய விடாமல் செய்ய,சட்டை போடாமல் வாசிக்க மாட்டேன் என்று அவர் தீர்க்கமாய் கூற வேறு வழியின்றி அவரை சட்டை அணிய அனுமதித்தது இன்னொரு வரலாறு. இவ்வளவு இருக்கிறது மக்களே.... இதில் எதுவும் தெரியாமல் இசைக்கு ஜாதி இல்லை என்று சொல்லுவதெல்லாம் உச்ச பட்ச முட்டாள்தனம்/அயோக்கியத்தனம். இசைக்கு ஜாதி இல்லை
இசை வேளாளர் என்கிற ஒரு ஜாதியே இங்கு இருக்கிறது அறிவாளிகளே.
அதுமட்டுமில்லாமல் அந்த சமூகத்தை சார்ந்த பெண்கள் தேவதாசிகளாக அடிமை படுத்தப்பட்டார்கள்கள்.அவர்களின் ஆண்கள் சட்டை இல்லா வெறும் உடம்போடு இசைக்க கட்டாயப்படுத்தபட்டார்கள். படத்தில்இருப்பவர்கள்   பாலசரஸ்வதி ..   எம் எஸ் சுப்புலக்ஷிமி

தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை மாற்ற வேண்டும்

தினத்தந்தி :அனைத்து சினிமா தியேட்டர்களிலும் தேசிய கீதம் போடுவது கட்டாயம் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில், சியாம் நாராயணன் சவுக்சி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு அடிப்படையில், நாடு முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களிலும், காட்சி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் போடுவது கட்டாயம் என்று கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் 30–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை மத்திய அரசும் ஆதரித்து வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த உத்தரவை மாற்றி அமைக்குமாறு மத்திய அரசு சார்பில் நேற்று 4 பக்க பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தேசிய கீதம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

லுங்கி காவியம்.... உடையல்ல, அது ஒரு சமூக குறியீடு ..

Shalin Maria Lawrence : லுங்கி காவியம்.
தமிழனின் வெள்ளை வேஷ்டி - சிந்து சமவெளி நாகாரீகத்தின் வழி வந்தது. தோத்தி (Dauti) எனப்படும் சமஸ்க்ரித சொல் வேதத்தை கற்று பூஜை செய்பவரும், மேட்டுக்குடியினரும் அணிந்து வந்த வெள்ளை துண்டை குறித்தது. தமிழில் தோத்தி "வேட்டி" ஆனது.
பொதுவாக வேலை என்ற ஒன்றை செய்யாத, மற்றவரை வைத்து வேலை வாங்கும் ஒரு சமூகம் மட்டுமே உடுத்தியது அது. தூசி படியாமல், அலுங்காமல் குலுங்காமல் இருப்பவனின் ஆடை அன்று வேஷ்டிதான்.
மாட்டைப் போல் உழைப்பவன் எப்பொழுதும் கந்தல் மட்டுமே அணிந்து கொண்டிருந்தான். வெள்ளை அவனது நிறமல்ல. பழுப்பு துண்டுதான் அவனின் உடை.
சரியாக சொல்ல வேண்டுமானால் "தூசு, நெற்றி வியர்வை, கண்ணீர்", என்று எல்லாம் உரிந்து கலந்த மஞ்சளுக்கும் பழுப்பிற்கும் இடையே ஒரு "ஏழை நிறம்".
அந்த நிறம் அவன் யார், எந்த சாதி, எந்த ஊர் போன்ற விஷயங்களை அவனிடம் பேசாமலே மேட்டுக்குடி தெரிந்து கொள்ள உதவியது.
அந்த நேரம் பார்த்து பர்மாவிலிருந்து திரும்பிய நம் மண்ணின் மைந்தர்களால், குறிப்பாக இஸ்லாமியர்களால் நமக்கு அறிமுகமானது ஏழைகளின் ரட்சகன் "லுங்கி".