வியாழன், 6 பிப்ரவரி, 2020

11 வயது குழந்தையை வகுப்பறையில் வைத்து விசாரணை செய்த பாசிச போலீஸ் கர்நாடக

ram gopal : கடந்த 4 நாட்களாய் இந்த செய்தி என்னை அலைக்கழித்துக்
கொண்டே இருக்கிறது. தொடர் செய்திகளை படிக்கையில் கண்களில் நீர் முட்டுகிறது. இதெல்லாம் உண்மையில் நடக்கிறதா அல்லது நாம்தான் வேறு ஏதேனும் ஒரு உலகத்தில் இருக்கிறோமா என்பது தெரியவில்லை. இவையே மனசை பிசைகிறது என்றால் இன்னும் இன்னும் பாக்கி இருக்கோ என எண்ணுகையில்....
என் பெரிய குழந்தை வயது இருக்கும் அந்த பெண் குழந்தைக்கு, 11. காவல்துறையின் விசாரணை வளையத்தில் அந்தப் பெண்ணும் அவள் தோழிகளும் அவள் பள்ளியும். ஆமாம், பள்ளிக்கு வந்து அவள் வயதை ஒத்த குழந்தைகளை அதாவது 4, 5 &6 ஆம் வகுப்புகளில் படிக்கிற குழந்தைகளை பள்ளிக்கு வந்து சுமார் 45 நிமிடம், 3 மணி நேரம் என குறுக்கு விசாரணை தொடர்ந்து நான்காவது நாளாய். இவ்வளவிற்கும் அந்தக் குழுந்தைகளின் ஆசிரியர்களோ அல்லது பள்ளி நிர்வாகமோ இக்குழந்தைகளுடன் இல்லாமல் ஒரு "மேக் ஷிப்ட் விசாரணை ரூமில்" விசாரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் ஒரு "தற்காலிக விசாரணை ரூம்" என்பது ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இருந்ததா என நண்பர்கள் தெரியப்படுத்தவும். அக்குழந்தைக்கு தந்தை இல்லை. விவசாயம் நொடித்துப் போக கணவர் இறக்க வேறு வழியின்றி நிலத்தை குத்தகைக்கு விட்டு அக்குழந்தையின் கல்விக்காக அரசு உதவிப் பெறும் இந்த சிறுபான்மைப் பள்ளியில் ஏகப்பட்ட கனவுகளை நெஞ்சில் சுமந்து சேர்த்த அந்த எழுத்தறிவற்ற தாய் இப்பொழுது ஜெயிலில். அவருடன் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையும். பெயில் கிடைக்கவில்லை ஏனென்றால் ஜட்ஜ் அய்யா விடுப்பில் இருக்கிறார்.

எம்எல்ஏ வேட்பாளரை பிரசாந்த் கிஷோர்தான் முடிவு செய்வாரா? திமுகவினர் கலக்கம்!

prashant kishor - mk stalin
MKS222nakkheeran.in - ஆதனூர் சோழன் : திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகத்தை வகுப்பதற்காக பிரசாந்த் கிஷோரின் உதவியை திமுக நாடியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. 70 ஆண்டு வரலாறைக் கொண்ட மாபெரும் இயக்கமான திமுக, தனது தொண்டர்கள் பலத்தையும், அமைப்புகளின் பலத்தையும், கட்சி நிர்வாகிகளின் தேர்தல் வேலையையும் நம்பாமல் ஒரு கார்பரேட் ஆளை எப்படி நம்புகிறது என்று திமுகவினர் கொந்தளிக்கிறார்கள்.
ஆனால், திமுகவினரில் ஒரு பகுதியினர், சமூக வலைத்தளங்களில் திமுகவுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்குவதை எதிர்கொள்ளவே பிரசாந்த் கிஷோரின் கார்பரேட் கம்பெனி உதவும் என்கிறார்கள். திமுகவின் இமேஜை டேமேஜ் செய்யும் முயற்சிகளை முறியடிக்கவும், மீடியாக்களில் திமுகவின் செய்திகளை பாசிட்டிவாக இடம்பெறச் செய்யவும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கம்பெனி உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

புதன், 5 பிப்ரவரி, 2020

என்கவுண்ட்டரால் ஆகாதெனினும், சட்டம் கூலி தரும்

savukkuonline.com : ஜூலை 2018.  தமிழ்நாட்டின் விடியல் திடுக்கிடலாய் அமைந்தது. செய்தித்தாள்கள் அன்று அனைத்துத் தரப்பினருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தன. அன்றாடம் தென்படுகிற செய்தியில் ஒன்றாய் அதைக் கடக்க யாராலும் இயலவில்லை. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அன்றாட நிகழ்வாகிவிட்ட பின்னரும் இந்த செய்தி அனைவரைம் பாதிப்பதற்கான காரணம் இருந்தது. பதினோரு வயதே ஆன மாற்றுத்திறனாளியான,  செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுமிக்கு பதினேழு பேரால் ஏற்பட்ட பாலியல் தாக்குதல் என்பது அனைவரையும் ஆழமாய் பாதித்தது. சம்பவம் நடந்தது சென்னை அயனாவரம் என்பதால் இது ‘அயனாவரம் வழக்கு’ என்றழைக்கப்பட்டு தொடர்ந்து செய்தித்தாள்கள் தகவல்களைத் தந்தன. தகவல்கள அனைத்துமே அதிர்ச்சியைத் தரக்கூடியன. பதினோரு வயதான பள்ளிக்கு செல்லும் சிறுமி தான் தினமும் சந்திக்கும் நபர்களால் ஆறு மாத காலத்துக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்திருப்பது தெரிய வந்தபோது அது பெரும் மனஉளைச்சலை அனைவருக்கும் ஏற்படுத்தியிருந்தது. குற்றவாளிகள் அனைவரும் 23 முதல் 60 வயதானவர்கள்.

ரஜினி ஒரு நேர்மையற்ற சுயநலமி மட்டுமல்ல. கோழையான சந்தர்ப்பவாதியும் கூட... சவுக்கு சங்கர்


savukkuonline.com : ரஜினிகாந்த் செய்வதும், சொல்வதும் செய்தியாகும் என்பது ரஜினிக்குத் தெரியும். ரஜினியே எதிர்பார்த்திராத ரசிகர் கூட்டம் இந்தியா கடந்தும் விரிந்திருக்கிறது. இதற்கு அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் அந்த உழைப்பின் பலனை அவர் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவை அதே ரசிகர்கள் முன்னிலையில் அனுபவிக்கிறார்.
கடந்த 4 ஜனவரி அன்று, தர்பார் படத்தின் தெலுங்கு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஒரு அறிவுரை போல இவ்வாறு கூறினார். “கொஞ்சமாக ஆசைப்படுங்கள்”.  இது போல அவ்வப்போது, ரஜினி மனம் போன போக்கில் பல்வேறு பொன்மொழிகளை உதிர்ப்பார்.  ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் சொன்னதை தனக்கு அல்ல என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.
கடந்த வாரம், இந்து நாளேடு, ரஜினிகாந்த் பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்வதாக வருமான வரித் துறையிடம் தெரிவித்தார் என்று செய்தி வெளியிட்டிருந்தது.   இதையடுத்து, ரஜினிகாந்த் சமூக வலைத்தளங்களில், கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி இருந்தார்.  பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி, வருமான வரி பற்றிய கேள்விக்கு, “நான் ஒரு ஹானஸ்ட் இன்கம் டாக்ஸ் பேயர்.  சட்டவிரோதமாக எந்த காரியத்தையும் செய்யவில்லை.  வேண்டுமென்றால் ஆடிட்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்”  என்று மட்டும் மழுப்பலாக கூறி முடித்துக் கொண்டார்.

லண்டனில் 9 கோடி சம்பளம்... ஆபீஸ் கேண்டினில் திருடிய வட இந்தியர்


Velmurugan P -/tamil.oneindia.com/  -  லண்டனில் ஆபிஸ் கேண்டினில் சாப்பாடு திருடியதாக உயர்ந்த பதவியில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சிட்டி குரூப் வங்கி அதிகாரி பரஸ் ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உயர்ந்த பதவியில் அந்தஸ்தில் இருக்கும் சிலருக்கு சில்லண்டி தனமாக ஸ்பூனை திருடுவது, சிறிய சிறிய பொருட்களை திருடுவது என மோசமான பழக்கம் இருக்கும். அப்படி தான் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு ஆபிஸ் கேண்டினில் உணவை திருடும் கேவலமான பழக்கம் இருந்திருக்கிறது.
 பரஸ் ஷா வயது 31. இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிட்டி குரூப் வஙகியில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும ஆப்பிரிக்கா பிரிவின் வர்த்தகத்தை தலைமை பொறுப்பை இருந்து கவனித்து வருகிறார். ஆண்டுக்கு 9.2 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்
பரஸ் ஷா கடந்த 2017ம் ஆண்டு சிட்டி குரூப்பில் சேர்ந்துள்ளார்.. அதற்கு முன்பு ஹெச்எஸ்பிசி வங்கியில் 7 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர் லண்டனில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு உயர்ந்த பதவி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பரஸ் ஷா, அங்கு அலுவலகத்தில் உள்ள கேண்டினில் உணவை திருடி சாப்பிட்டுக்கிறார்.

6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!!

1_Kinane  newlanka.lk ›  6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!! 6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!! 1 Kinane26 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!!newslanka :வேல்ஸ்,போர்த்மடோக் – குய்னெத்தைச் சேர்ந்த (Michael Kinane) மைக்கல் கினேன் (வயது 41) என்ற நபர் எஃப்.பி.ஐ மற்றும் பிரிட்டிஷ் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட ஒப்பரேஷன் புளூ கோஸ்ரலைத் நடவடிக்கையைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார். லண்டனை தளமாகக் கொண்ட மருந்து முதலீட்டு நிறுவனமான அவிலியனின் (Avillion) மின்னஞ்சலுக்குள் ஊடுருவி பணம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். கனாபன் (Caernarfon) கிரவுன் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் மைக்கல் கினேனுக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கினேன் பணமோசடிக்குச் சதி செய்ததாகவும், மூன்று முறை மோசடி செய்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிபதி நிக்கோலா ஜோன்ஸ் (Nicola Jones) தனது தீர்ப்பின்போது கூறுகையில்; குற்றவாளி தனது பேராசை மூலமே இந்தத் தவறைச் செய்துள்ளார் என்றும் இழைத்த தவறுக்கு மைக்கல் கினேன் உண்மையான கழிவிரக்கத்தைக் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு

மாலைமலர் : டெல்லி மேல்சபையில் (ராஜ்ய சபா) மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில சிறந்து விளங்குபவர்களை ஜனாதிபதி நியமிப்பார்.
இந்த 12 பேர்களை தவிர்த்து மற்றவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

1. திருச்சி சிவா (தி.மு.க.)

2. டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)

3. சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.) தற்போது இவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

4. விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.)

5. மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.)

6. முத்துகருப்பன் (அ.தி.மு.க.).

பிகில் ரெய்டும் மாஸ்டர் பிளானும்:நெய்வேலி டூ சென்னை!

பிகில் ரெய்டும் மாஸ்டர் பிளானும்:நெய்வேலி டூ சென்னை!மின்னம்பலம் : வருமான வரித் துறையினரின் சோதனைகள் மிக சாதாரணமாகவே இன்று(05.02.2020) காலை தொடங்கியது. ஆனால், நேரம் ஓட ஓட அவர்களது வேகமும் அதிகரித்தது. கிட்டத்தட்ட சினிமாவில் நடப்பது போன்றே இன்றைய ரைடுகளையும் நடத்தி முடித்துவிட்டு, விஜய் வீட்டிலிருந்து கிளம்பியிருக்கின்றனர் வருமான வரித்துறையினர்.
சினிமா ஃபைனான்சியரான அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடங்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு, அங்கிருந்து அப்படியே ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினரின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டது. அன்புச்செழியனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு அதிக பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதை அறிந்ததனால் இந்த ரெய்டுகள் நடைபெறுவதாக அறிந்ததால், அடுத்து யார்? என்று பார்ப்பதற்கு பரபரப்பாக தயாரானது கோலிவுட். சென்னையில் இருப்பவர்களில் யார் வீட்டுக்கு ரெய்டு என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோதே, நெய்வேலியில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்தது மெசேஜ்.

நடிகர் விஜயை படப்பிடிப்பில் இருந்து அழைத்து சென்று வீட்டில் வருமானவரி சோதனை .. ஏஜிஎஸ், அன்புசெழியன் வீடுகளிலும் ரெயிட் .. பிகில் கறுப்பு பணம் ?


agsகலைமோகன் ஸ்டாலின் - நக்கீரன் : ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜயிடமும், விஜயின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருமானவரி சோதனையில் 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏஜிஎஸ் குழுமத்தில் 25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் : குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை- ரஜினிகாந்த்தினத்தந்தி : மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு சம்மன் வரவில்லை.
என்பிஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) நாட்டுக்கு அவசியம் முக்கியமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.
சிஏஏ சட்டத்தால் ( குடியுரிமை திருத்த சட்டம்) இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்தியா பிரிவினையின் போது எங்கும் போகாமல் இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. அப்படி வந்தால் நான் முதலாவதாக குரல் கொடுப்பேன்.

திமுகவும் பிரசாந்த் கிஷோரும் .. காலத்தின் தேவையா?

வளன்பிச்சைவளன் : புதிய யுக்திகளே வெற்றியை தந்தன வரலாறு
சொல்லும் பாடம் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து எந்த உயிரியும் வாழ முடியாது அறிவியல் உண்மை ஆரியர்கள் குதிரையோடு வந்தனர்.
அக்குதிரை திராவிடர்களிடம் இல்லாததே திராவிடர்களின் வீழ்ச்சி. ஆங்கிலேயர்கள் பீரங்கியோடு வந்தார்கள் வாளோடும் வில்லோடும் போர் புரிந்த இந்தியர்களை எளிதில் வீழ்த்தினார்கள்.
என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது திமுக நீண்ட வரலாறு கொண்ட இயக்கம் பிரச்சார பலம் பொருந்திய இயக்கம். திண்ணை பிரச்சாரம் பொதுக் கூட்டங்கள் பத்திரிக்கைகள் என மக்களிடம் நெருங்கிச் சென்று வெற்றி பெற்ற வரலாறு கொண்ட இயக்கம்.
ஆனால் இன்று பிரச்சாரம் வேறு பரிமணாமங்களோடு நடைபெறுகிறது. இவ்வேளையில் இம்மாற்றங்களுக்கு ஏற்ப திமுகவும் மாறியாக வேண்டிய கட்டாயம். சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்காத பல உயிரினங்கள் அழிந்து விட்டன.
இந்த அறிவியல் உண்மைகளுக்கு ஏற்ப திமுக வும் தனது பிரச்சார யுக்தியை மாற்றிக் கொண்டு ஒரு விளம்பர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை .... 10 அரிய செய்திகள்

முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் :
1. 1997ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு இன்று நடைபெறுகிறது. 1997க்கு முன்பாக, 1980ல் குடமுழுக்கு நடைபெற்றது.
2. தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
3. 1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.
. கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயில் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை.
5. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோயில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.
6. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! இபிஎஸ்-ஓபிஎஸ் தீவிர ஆலோசனை!

ops-epsnakkheeran.in - இரா. இளையசெல்வன் : துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கில், சபாநாயகர் தனபாலை நோக்கி உச்சநீதிமன்றம் எழுப்பிய அதிரடி கேள்விகளால் அதிர்ச்சியடைந்திருக்கிறது அதிமுக!
தலைமைசெயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அதிகாரிகள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு அமைச்சர்களிடம் மட்டும் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதில் பல்வேறு அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ஓபிஎஸ்சுடன் தனியாக ஆலோசித்தார் எடப்பாடி. அதில், பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை குறித்து விரிவாக அலசியிருக்கிறார்கள்.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவு சீனியர்களிடம் விசாரித்தபோது, ‘’ உச்சநீதிமன்றம் என்னதான் உத்தரவிட்டாலும் சபாநாயகருக்கு ஆணையிடும் அதிகாரம் அதற்கு கிடையாது.

சி.பி.சி.ஐ.டி. பிடியில் சித்தாண்டி… `726′ அதிகாரிகள் டிஸ்மிஸ்?!

CBCID office, Chennaiபெரியகண்ணனூரில் உள்ள சித்தாண்டியின் வீடுசித்தாண்டிvikatan.com = ந.பொன்குமரகுருபரன் : ஆயுதப்படை எஸ்.ஐ. சித்தாண்டியை 8 நாள்களுக்கு முன்னரே சி.பி.சி.ஐ.டி கைது செய்துவிட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரகசிய விசாரணையில் என்ன சொன்னார் சித்தாண்டி? கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில், இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் முறைகேடாகத் தேர்வாகியிருப்பது தொடர்பான பிரச்னை சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது. இதுதொடர்பாக விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், திருநெல்வேலி, சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேரை கைது செய்தனர். போலீசார் விசாரணையைத் தொடங்கியபோதே, இம்முறைகேட்டில் முக்கிய இடைத்தரகர்களாகச் செயல்பட்ட முகப்பேர் ஜெயக்குமார், ஆயுதப்படை எஸ்.ஐ. சித்தாண்டி இருவரும் தலைமறைவாகி இருந்தனர்.

தமிழக அரசு அசுர வேகத்தில் ஒரு உத்திரபிரதேசமாக, மாறிக்கொண்டிருக்கிறது.

Don Ashok -Ashok.R : சில விஷயங்களில் பிரச்சினையின் தீவிரம் தமக்கு க்கே வழிகாட்டியாய் இருந்த தமிழக அரசு அசுர வேகத்தில் ஒரு உத்திரபிரதேசமாக, குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி, ஓ.பி.எஸ், செங்கோட்டையன் கூட்டணி, துரோகத்தை ஒரு இறைச்சேவையைப் போல ரசித்து, மனமுவந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஏற்பட்டாலேயொழிய சிலருக்குப் புரியாது. நீட், 5ம்,8ம் வகுப்பு பொதுத் தேர்வெல்லாம் அப்படித்தான். லவ்பேர்ட்ஸ் வளர்த்தவர்களுக்குத் தெரியும். பருந்தோ, கழுகோ வந்து கூண்டின் மேல் உட்கார்ந்தால் பதட்டத்தில், பயத்தில் சிறிய பறவைகளான லவ் பேர்ட்ஸுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும். இப்படித்தான் குழந்தைகளுக்கான பொதுத் தேர்வை மனோதத்துவ நிபுணர்கள் பார்க்கிறார்கள். உடல் முழுக்க சாடிச வெறி ஊறிப்போன அரசினால்தான் இப்படி ஒரு செயலைச் செய்ய முடியும்.
இவர்கள் மட்டுமல்ல இப்போதைய தமிழக அமைச்சரவைக்கு ஒரு ரெஸ்யூம் தயாரித்தால் அதில் field of interest எனும் இடத்தில் தாராளமாக 'துரோகம்' எனப் போடலாம். அவ்வளவு கலைநயத்துடன் தமிழகமும், அதன் கல்வியும், உட்கட்டமைப்பும், வரலாறும் கூட பேரழிவுக்கு உள்ளாக்கப்படுகிறது. ஆட்சிமாற்றம் என்பது திமுக பலன்பெறக் கூடியது என்ற நிலை எல்லாம் எப்போதோ மாறிவிட்டது. இன்றைய நிலையில் திமுக ஆட்சிக்கு வருவது ஒன்றுதான் தமிழகத்தைக் காப்பாற்றக் கூடிய ஒன்று.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

வெளிவந்த Sanam -Tharshan-ன் ரகசிய Engagement வீடியோ

.polimernews.com : திருமணம் செய்து கொள்வதாக நிச்சயதார்த்தம் செய்து வாழ்க்கையையே கெடுத்து விட்டதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தர்சன் மீது அவரது காதலி சனம் செட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். அமைதிப்படை அமாவாசையாக மாறி போன தர்சனின் காதல் லீலைகள் குறித்து விவரிக்கின்றது

பிக்பாஸ்.... பிரபலம் இல்லாதவர்களை பிரபலமாக்குவதற்காக நடத்தப்படும் 100 நாள் வேலை வாய்ப்பு நிகழ்ச்சியான இதில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் இளம் நடிகர் தர்சன்..!
மூன், கதம் கதம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் நடிகை சனம் ஷெட்டி..!
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு, மாடலாக இருந்த போதே நடிகை சனம் செட்டியை காதல் வலையில் வீழ்த்தியவர் தர்சன். இவர் சிறு சிறு விளம்பரங்களுக்கு மாடலாக இருந்து வந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி பணம் உதவி செய்து அவரது வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

தஞ்சைக்கு அபாயம்! மௌனம் காக்கும் தமிழ் ஊடகங்கள்.. தஞ்சைப் பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!


hindutamil.in : சோழ தேசம். இந்தச் சொல்லிலேயே ஒரு கம்பீரமும் அழகும் எப்போதும் குடிகொண்டிருக்கும். அப்பேர்பட்ட சோழ நாட்டில், எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத, கலாச்சார, பக்தி, இலக்கிய, சிற்ப, ஓவிய நாகரிகங்களையெல்லாம் சொன்ன வகையில், தஞ்சைப் பெரிய கோயிலும் சொன்னதற்காக ராஜராஜசோழனும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் நினைவுகளில், பொக்கிஷமாய் இருப்பது உறுதி. அதுதான், பெரிய கோயிலின் ஆச்சரியப் பெருமை!
the-great-temple-of-tanjoreவிவசாயம், கலை, வணிகம், ஆன்மிகம், நிர்வாகம் என அனைத்திலும் மக்களை முன்வைத்து எவனொருவன் ஆட்சி செய்கிறானோ... அவனே மிகச் சிறந்த மன்னன்; அவனது ஆட்சிக் காலமே பொற்காலம்! அப்படியான பொற்கால ஆட்சியை நடத்தியவன் ராஜராஜசோழன். அவன் கட்டிய திருக்கோயிலே தஞ்சைப் பெருவுடையார் கோயில் எனும் பெரிய கோயில்.
தஞ்சைத் தரணியில், கோயிலும் அதன் கட்டுமானமும் இறையுருவங்களும் அளவற்ற பக்தியுடன் சோழர்களால் கட்டப்பட்டவை. இத்தனை ஆலயங்களிலும் நேர்த்தி மிக்க பிரம்மாண்டமான ஆலயம்... தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயம். 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, இதோ... ஆயிரம் வருடங்களைக் கடந்தும் கம்பீரத்துடனும் கலைநயத்துடனும் பொலிவு மாறாமல் நின்று தமிழின் பெருமையை, தமிழனின் மகத்துவத்தை, பக்தியின் மேன்மையை, இறைவனின் அருளாடலைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது, தஞ்சைக் கோயில்.

SRM காலேஜ் கேன்டீனில்.. துப்பாக்கி, வீச்சரிவாளுடன் மோதி கொண்ட மாணவர்கள்.. காட்டாங்குளத்தூரில் .. வீடியோ


Hemavandhana - tamil.oneindia.com : சென்னையை அடுத்துள்ள எஸ்.ஆர்.எம்.
கல்லூரியில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு வரும் பிரபலமான காலேஜ் எஸ்.ஆர்.எம்...
இங்கு பல மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாலை மாணவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
குறிப்பாக எம்பிஏ 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் காலேஜ் கேன்டீனுக்குள்ளேயே அடித்து கொண்டனர் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் எப்படியும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது...
இதில் ஒரு குரூப் மாணவர்கள் கையில் துப்பாக்கி இருந்துள்ளது.. இன்னொரு குரூப் மாணவர்கள் கையில் வீச்சரிவாள் உள்ளது. ஆளுக்கு ஒரு வீச்சரிவாளை எடுத்து கொண்டு எதிர்தரப்பை தாக்குகிறார்கள்.
இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை.. ஏற்கனவே இதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகேஷ் என்ற மாணவனையும் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது.

வட இந்தியாவில் தமிழர்களை மதிக்கிறார்கள் - ஜீவா.. (இவரே ஒரு வடஇந்தியர் இவரை மதிப்பார்கள்தானே)

Amar B. Choudary, known professionally as Jiiva, is an Indian film actor, producer and philanthropist, who works mainly in Tamil cinema, as well as few films in Malayalam and Hindi. He is the youngest son of film producer R. B. Choudary. He began his career as a child actor in 1991 in films produced by his father
 மாலைமலர் : வட இந்தியாவில் தமிழர்களை நன்றாக மதிக்கிறார்கள் என்று நடிகர் ஜீவா  ( அமர் சவுத்திரி ) சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஜீவா நடிப்பில் சீறு படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. ரத்ன சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இது தவிர ஜீவா நடிப்பில் களத்தில் சந்திப்போம், ஜிப்சி, 83 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ஜீவா அளித்த பேட்டி:
சீறு படம் பற்றி? இது முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தரும் படம். படத்தில் 6 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. மயிலாடுதுறையில் கொக்கரக்கோ டிவி என்னும் கேபிள் சேனல் நடத்தும் இளைஞனாக வருகிறேன். அதில் உள்ளூரில் இருக்கும் மக்கள் பிரச்சினைகள் பற்றியும் பேசுவேன். அதனால் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் மோதல் ஏற்படுகிறது. அதன் பின் இன்னொரு பிரச்சினைக்காக நகரத்துக்கும் செல்கிறேன். அண்ணன் தங்கை, நட்பு என்று செண்டிமெண்ட் கலந்த மசாலா படம் தான். இரண்டாம் பாதியில் பெண் கல்வி பற்றி ஒரு முக்கியமான பிரச்சினையை தொட்டுள்ளோம்.

வட இந்தியாவுக்கு மாற்ற முயற்சிப்பதா? -நாடாளுமன்றத்தில் வைகோ!.. வீடியோ ...அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தை..


nakkheeran.in - அதிதேஜா : > மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில்
“அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியம், 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள், சென்னையில் நிறுவப்பட்டது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தோஹா மாநாட்டில் திறமையாக வாதாடி, காப்பு உரிமைச் சட்டங்கள் குறித்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்த, தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் மேற்கொண்ட முயற்சியால், அந்த வாரியம் அமைந்தது.
1999 வணிக உரிமைக் குறிகள் (Trademarks Act) சட்டத்தின்படியும், 1999 புவிசார் குறியீடு, வணிகப்பொருள்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்படியும் (Geographical Indication of Goods Registration and Protection Act) பதிவாளர் எடுக்கின்ற முடிவுகள் குறித்த மேல்முறையீடுகளை, கடந்த 16 ஆண்டுகளாக, வினைத் திட்பத்துடன் கேட்டு, தீர்ப்பு வழங்கி வருகின்றது.

கொரோனா - பல நாடுகளின் சுற்றுலா பயணிகள் இந்தியா வர தடை !

Samayam Tamil : கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம் என்ன? தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மானேசர் முகாமில் 5 பேருக்கு வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

* வரும் 8ஆம் தேதியில் இருந்து டெல்லி - ஹாங்காங் விமானங்களை ரத்து செய்யப் போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் வசதிகள் விரைவில் செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

* மலேசியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் 10 பேர் வரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். விடுதிகள் முன்பதிவு பெரும் சரிவை கண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பொது தேர்வு கிடையாது! 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கிடையாது ... அரசு அறிவிப்பு

அரசின் முடிவுக்குப் பாராட்டும் கட்சிகள்!மின்னம்பலம் :
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்த நிலையில் அதற்கு எதிர்க்கட்சிகள் உட்படப் பலரும் வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர்.
2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதன் மூலம் இடைநிற்றல் அதிகரிக்கும், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பலத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின், விசிக திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இவ்வாறு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், இன்று (பிப்ரவரி 4) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

லண்டனில் சுட்டு கொல்லபட்ட இஸ்லாமிய பயங்கரவாதி இலங்கையர்


லண்டனில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவருக்கு இலங்கை தொடர்பு வீரகேசரி :  லண்டனில் ஞாயிற்றுக்கிழமை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட  சுடேஸ் அமானிற்கு இலங்கையில் குடும்பத்தவர்கள் உள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 சுடேஸ் அமானின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
சுடேஸ் மமூர் பர்சார் அமான் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த பிரசுரங்களை இணையத்தில் ஊக்குவித்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர், தனது காதலியை அவரின் பெற்றோரின் தலையை துண்டிக்குமாறு ஊக்குவித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஒருமுறை இணையத்தில் தனது இலட்சியங்களை பதிவு செய்திருந்தார் அதில் மாவீரனாக  மரணிப்பதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் உயிரிழப்பு 425 ஆக உயர்வு .. கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்வுதினத்தந்தி  பெய்ஜிங்,; சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு 2 புதிய தற்காலிக ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு... ஒன்று திரளும் எல்.ஐ.சி ஊழியர்கள்...

lic union workers against issuing ipo on lic நக்கீரன்:  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற எல்.ஐ.சியின் பங்குகள் விறக்கப்படுவது குறித்த முடிவுக்கு எதிராக எல்.ஐ.சி யின் மூன்று பெரிய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது, எல்.ஐ.சி, ஐ.டி.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. மத்திய அரசுக்கான நிதி திரட்டும் நடவடிக்கையாக இந்த விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.