திங்கள், 15 ஜூலை, 2019

தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் .. பாசிசத்துக்கு வரவேற்பு ...


மின்னம்பலம் :தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.
தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான சட்டத் திருத்த மசோதா இன்று (ஜூலை 15) மக்களவையில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
விவாதத்தில் மீது திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, “நமது நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. சமூக ஜனநாயக குடியரசு என்றுதான் அரசியல் சாசனத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் மதச்சார்பற்றவையாக உள்ளன. இந்த சட்டங்கள் மதச்சார்பற்றவையாக தொடர்வதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக என்.ஐ.ஏ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நீதிபதிகளை மை லார்ட் என்று இனி அழைக்கதேவை இல்லை.. ராஜஸ்தான் நீதிபதி ..

மாலைமலர் :ராஜஸ்தான் மாநிலத்தில் நீதிபதிகளை இனி வக்கீல்கள் ‘மை லார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என வழக்கறிஞர்களை அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிபதிகளை இனி ‘மை லார்ட்’ என்று அழைக்க வேண்டாம்
ஜெய்ப்பூர்: வெள்ளையர்கள் நம் நாட்டை ஆண்டபோது பிரிட்டன் நாட்டை சேர்ந்த சிலர் சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவி வகித்தனர். அங்கு நடைபெறும் வழக்கு விசாரணைகளில் முன்னர் ஆஜரான நீதிபதிகளை வக்கீல்கள் ‘மேன்மை தங்கிய எஜமானரே’ என்னும் பொருள்பட மை லார்ட்’ என்று அழைத்துப் பேசுவது மரியாதைசார்ந்த மரபாக இருந்து வந்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் காலப்போக்கில் பல உயர் நீதிமன்றங்களில் இந்த பழக்கம் வழக்கொழிந்து போனது. ஆனால், சில நீதிமன்றங்களில் இது இன்னும் நடைமுறையில் உள்ளது. வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் நீதிபதிகள் இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என குறிப்பிட்டுள்ள அம்சத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் வக்கீல்கள் நீதிபதிகளை இனி ‘மை லார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என ராஜஸ்தான் மாநில ஐகோர்ட் இன்று அறிவுறுத்தியுள்ளது.

சிறையில் சரவண பவன் ராஜகோபால் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல்

Neelakandan S/tamil.oneindia.com : சென்னை: ஜீவஜோதி என்பவரது கணவர் சாந்தகுமரை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
ஆயுள் தண்டனையை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபால், கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 கொலை வழக்கில் தண்டனை பெற ராஜகோபாலுடன் சரணடைந்த ஜனார்த்தனன் என்பவருக்கும், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
ஜாதகம், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் சில சறுக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து ஜோதிடரை அணுகி ஆலோசனை கேட்டார். அப்போது சிறிய வயது பெண்ணை 3-ஆவதாக திருமணம் செய்தால் உங்கள் வாழ்வில் ஏற்றம் வரும் என ஜோதிடர் கூறியுள்ளார்.

மருத்துவ மேற்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை மத்திய அரசு திட்டம்

 தினதந்தி :   புதுடெல்லி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன் சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
அதில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்துடன் கூடிய வரைவு மசோதா, விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:- புதிய திருத்தத்தின்படி, எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வு, நாடு முழுவதும் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்’ (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்தப்படும்.
அந்த தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
 எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வை முடித்த பிறகு, முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக அவர்கள் நீட் போன்ற எந்த நுழைவுத்தேர்வும் எழுத வேண்டியது இல்லை.

சந்திராயன் 2 விண்கலம் தற்காலிக நிறுத்தம் .. ISRO தொழில் நுட்ப கோளாறு ..

சந்திரயான்-2 விண்கலம் திடீரென தற்காலிக நிறுத்தம்தினத்தந்தி :அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான் - 2 கவுண்ட்டவுன் திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இதற்கான 20 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான் - 2 கவுண்ட்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 பாகுபலி ஏவுகணை என்றழைக்கப்படும் மார்க் -3 ஏவுகணை மூலம் சந்திரயான் - 2 ஏவப்படவிருந்தது. நிலவின் தென் பகுதியை ஆராயும் பணியை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 ஏவப்படவிருந்தது.

தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும்.... தூயத்தமிழாக இருந்தது

splco.me/tam : இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் : நற்றிணை-யில்
“தைத் திங்கள் தண்கயம் படியும்” என்றும்
குறுந்தொகை-யில்
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்றும்
புறநானூறு-ல்
“தைத் திங்கள் தண்கயம் போல்” என்றும்
ஐங்குறுநூறு-ல்
“தைத் திங்கள் தண்கயம் போல” என்றும்
கலித்தொகை-யில்
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்றும்
தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளது சான்றாக கிடைக்கிறது.
அதே சமயம் தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல் நாளில் (August 17) தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடதோட்செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக
மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது. இப்படி தைக்கும், ஆவணிக்கும் இருந்த புத்தாண்டு சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டாக தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது.

இங்கிலாந்து உலகக்கோப்பையை கைப்பற்றியது!

 England win the World Cupnakkheeran.in/author/kalaimohan : இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி ''டை'' ஆனதையடுத்து சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து. > லண்டனில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் 55 ரன்களையும்,  டாம் லாதம் 47 ரன்களையும், வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், லியாம்,பிளங்கெட்  தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  அடுத்து களமிறங்கி விளையாடியது நியுசிலாந்து. இரு அணிகளுக்கும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் கிடைத்தது. வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரும் ''டை'' ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து 6 பவுண்டரிகள் நியூசிலாந்தை விட அதிகம் அடித்திருந்தது குறிப்படத்தக்கது

ஞாயிறு, 14 ஜூலை, 2019

அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் கிடையாது .... டென்மார்க்கிற்கு இணையான தமிழகத்தின் அவலம்

சிவசங்கர் எஸ்.எஸ் : மொழியை அடுத்து மெல்ல தொடரும்...
இன்று (14.07.2019) அஞ்சல் துறை தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் இல்லாமல், இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டு விட்டன. இதுவரை இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை இது. "ஒரே தேசம், ஒரே மொழி" என்ற தங்கள் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள்.
ஏன் மாநில மொழிகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்ற விளக்கம் கூட இல்லை. மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படும் சர்வாதிகார, எதேச்சதிகார மனப்பான்மை தான் இதிலும் வெளிப்படுகிறது. என்ன உத்தரவு போட்டாலும், எல்லோரும் ஏற்றுக் கொண்டு அடிமைகளாக நடக்க வேண்டும் என்பது தான் எண்ணம்.
தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.கவை தவிர்த்த அத்தனைக் கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து விட்டார்கள். ஒரு ஆயிரம் பணியிடங்களுக்கு இவ்வளவு கூச்சலா என்று கூட சிலர் நினைக்கக் கூடும். இது வெறும் ஆயிரம் அல்ல. கோடிக்கணக்கான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க போடப்படும் திட்டம்.

கல்வி வல்லுநர்கள் குழுவை திமுக அமைத்துள்ளது. .. புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு பற்றி

A Sivakumar ; தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் அனைத்து
வகையிலும் அச்சுறுத்தலாக இருக்கும் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு
பற்றி ஆராய, கல்வித்துறை வல்லுனர்களின் கருத்துகளை அறிய 9 பேர் கொண்ட வல்லுநர் குழுவை திமுக அமைத்துள்ளது.
அதில்
 முன்னாள் கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி,
 முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
 அரசு உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் முனைவர் அ. இராமசாமி,
 தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம. இராஜேந்திரன்,
பச்சையப்பன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி,
திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ,
 சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்தரநாத்,
 பொதுக் கல்விக்கான மேடையின் தலைவர் பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, டாக்டர் செந்தில்குமார் எம்.பி. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திராவிடமும்.. தலித்தியமும் பார்ப்பனியத்துடன்... சமரசமா? சரணாகதியா?

LRJ : உள் டப்பிக்கு வந்த ஒரு கேள்வி: திராவிடர் இயக்கமும் கட்சிகளும் அதன் தலைவர்களும் கூடத்தான் பிராமணர்களை ஆதரித்தனர்; நட்பு பாராட்டினர்;
தம் பக்கத்தில் வைத்துக்கொண்டனர்; பிராமணீயத்தோடு அவ்வப்போது சமரசமும் செய்துகொண்டனர். அதையெல்லாம் சகித்துக்கொண்ட திராவிடர் இயக்க ஆதரவாளர்கள் தலித் தலைவர்களும் தலித் இயக்கங்களும் செய்தால் அவர்களை மட்டும் விமர்சிப்பது ஏன்?
அதற்கான பதில்: திராவிடர் இயக்கம் நீங்கள் சொன்ன அனைத்தையும் செய்தது. அதன் ஆதரவாளர்கள் அதை சகித்துக்கொண்டதும் உண்மை, அவர்களில் சிலர் அதை அவ்வப்போது எதிர்த்திருந்தாலும் விமர்சித்திருந்தாலும். ஆனால் நீதிக்கட்சிக்காலம் துவங்கி கலைஞர் தலைமை வரை இத்தகைய “சமரசங்கள்” ஒவ்வொன்றிலுமே திராவிடர் இயக்கத்தின் அதன் கட்சிகளின் அதன் தலைவர்களின் கையே மேல் கையாக இருந்ததே தவிர ஒருநாளும் பிராமணர்களின் அல்லது பிராமணீயத்தின் கைகள் மேல் கையாக இருந்ததிவில்லை. அதாவது திராவிடம் ஆணையிடும் இடத்திலும் பிராமணரும் பிராமணீயமும் அதை ஏற்று நிறைவேற்றும் இடத்திலும் இருந்தன. தலித்தியமோ தலித்திய தலைவர்களோ தமிழ்நாட்டில் அந்த ஆணையிடும் இடத்தில் இருக்கிறார்களா? என்பதே இதில் அடிப்படை கேள்வி. இல்லை என்பதே கசப்பான பதில்.
இதை எளிமைப்படுத்தி சொல்வதானால் ஜெயலலிதா காலத்து அதிமுகவுக்கு பாஜகவுடன் இருந்த உறவுக்கும் அதே அதிமுக எடப்பாடி தலைமைக்கு வந்தபின் பாஜகவுடன் இருக்கும் உறவுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடு என்னவோ அதுவே திராவிட, தலித், பிராமண உறவு/சமரசங்களுக்கும் பொருந்தும்.

முகிலன் தானாகவே ஒழிந்து கொண்டாரா.. சமூகத்தையும்,அரசையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றினாரா?

சாவித்திரி கண்ணன் : இதை எழுதுவதா? தவிர்ப்பதா…? என்று எனக்குள்
பலமுறை யோசித்துவிட்டுத் தான் கவனமாக எழுதுகிறேன்.
இதை இப்படியே, ’பேசவேண்டாம்’ எனப் பலரும் தவிர்த்துவிட்டுப் போனால்.., வருங்காலத்தில் உண்மைகள் ஊமைகளாக்கப்பட்டுவிடும், குற்றவுணர்வைக் கொன்றுவிட்டு, நாம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற மனோபாவம் பொதுவாழ்க்கைக்கு வரும் சிலருக்கு தோன்றக்கூடும்…!
அதை தவிர்க்கவே பதிவு செய்துவிடுவதென முடிவெடுத்தேன்.
என் அன்புத் தோழர் முகிலன் சந்தேகமே இல்லாமல் ஒரு சிறந்த பொது நலவாதி தான்! சளைக்காத போராளி தான்!
இனிய சுபாவம், அநீதியை எதிர்த்துப் போராடும் அடங்கா குணம், பொருளியல் நாட்டமின்மை..அகியவை தமிழகமே அறிந்த அவரது சிறப்புகளாகும். இதனால் தான் அவர் காணாமல் போனதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் துடிதுடித்தோம். சமூகவலைத் தளங்களில் மட்டுமின்றி வீதியில் இறங்கி குரல் கொடுத்தோம்.
ஆனால்,இன்று நான் நன்கு தீர விசாரித்து அறிந்த வகையில் முகிலன் யாராலும் கடத்தப்படவில்லை..என உறுதி செய்த பின்பு இதை பேசாமல் மவுனிப்பதோ, அல்லது முட்டுக் கொடுத்து வியாக்கியானம் செய்து கொண்டிருப்பதோ…அது நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் சவக்குழியாகிவிடும்…எனக் கருதுகிறேன்.

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு பெரியார் பெயர் வைக்க சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு ... கனிமொழியோடு மோதல்!

sasikala pushpa - kanimozhi
nakkheeran.in - elaiyaselvan : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தந்தை பெரியாரின் பெயரை ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு சூட்டவேண்டும் என்பதை வலியுறுத்தினார். அவருடைய கோரிக்கையை மத்திய பாஜக அரசு கவனித்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது.சென்னை மத்திய ரயில்வே நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் என தேர்தல் காலத்தில் அதிமுக வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அதனை சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து, ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை  தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது திமுக! இந்த நிலையில், கனிமொழியின் கோரிக்கைக்கு எதிராக களமிறங்குகிறார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா !

திமுக காங்கிரசை விட்டு விலகுகிறதா ? அல்லது காங்கிரசே காங்கிரசை விட்டு விலகுகிறதா?

dmkதினமணி : மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தி தமிழகத்தில் வெற்றியை அறுவடை செய்து கொண்ட திமுக, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை கைகழுவும் போக்கை பின்பற்றுவது அக்கட்சியினர் மத்தியில் ஆதங்கமாக வெளிப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, அடுத்த மாதம் நடைபெறும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியே போர்க்கொடி தூக்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
 நாடு முழுவதும் நடந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம், புதுச்சேரியில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து களம் கண்ட திமுக தலைமையிலான அணியில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக, ஐஜேகே, கொமதேக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் என்னதான் செய்கின்றனர் ? ஸ்டாலின் முரசொலியில் மடல்

திமுக கூட்டணி எம்.பி.க்களின் சாதனை:  ஸ்டாலின்மின்னம்பலம் : தமிழகத்தின் உரிமைக் குரலாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் ஒலித்துவருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலானக் கூட்டணி அமோக வெற்றிபெற்று 37 இடங்களைக் கைப்பற்றியது. மோடி மீண்டும் பிரதமரான பிறகு முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், திமுக கூட்டணி எம்.பி.க்கள் தினந்தோறும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து அழுத்தமான வாதங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை தினந்தோறும் சந்தித்து மனு அளித்து வருகிறார்கள். இது பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றிபெற்றிருப்பதாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள், எம்.பி.க்கள் மத்திய அமைச்சரிடம் மனு அளிப்பதையும் விமர்சித்திருந்தனர்.

ஆதிக்க ஜாதிகளின் நிரந்தர ஏகபோக நில உரிமையை கேள்வி கேட்காமல் ..... ஜாதி ஒழிப்பு?

Kiruba Munusamy : மருத்துவம் படிக்க விரும்பிய மாணவி ஒருவர்
தாராவியிலிருந்து காலையில் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். புனே மருத்துவக் கல்லூரியில் படிக்க கல்விக்கடன் கேட்டு வங்கிக்கு சென்றபோது, சொத்து ஏதேனும் இருந்தால் உத்திரவாதமாக வைத்து தரலாம் என்று கூறியிருக்கிறார்கள். தாராவியில் உள்ள சொத்தின் பத்திரத்தை கொடுத்தபோது, சேரியில் அமைந்திருக்கும் காரணத்தால் அதற்கு மதிப்பில்லை எனக்கூறி கல்விக்கடனை தர மறுத்திருக்கிறார்கள்.
ஒன்று எங்களுக்கு சொத்துரிமை இருப்பதில்லை. ஒரு வேளை சொத்து என்று ஏதேனும் இருந்தாலும், அதற்கு மதிப்பிருப்பதில்லை. இச்சூழ்நிலையில் தான், நில உரிமையை மிகவும் அழுத்தமாக பேச வேண்டி வருகிறது.
ஒருபுறம் ஒடுக்கப்பட்டோரின் நிலை இவ்வாறு இருக்க, மறுபுறம் நிலத்தின் மீதான ஆதிக்கம் பரம்பரை பரம்பரையாக ஆதிக்க ஜாதிகளிடமே கைமாறி வருகிறது. இல்லாவிட்டாலும், அனைத்து வித பொருளாதார வளங்களும், உதவிகளும் அவர்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆதிக்க ஜாதிகளின் நிரந்தர ஏகபோக நில உரிமையை கேள்வி கேட்காமல், வரலாற்று ரீதியான நிலவுரிமை மறுப்பை கேள்விக்குட்படுத்தாமல் ஜாதி ஒழிப்பு பேச கூடாது, பேசவும் முடியாது.
மையநீரோட்டத்திலிருந்து ஒதுக்குவது, அதன் விளைவாக கல்வி-வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது ஆகியவற்றை சீர் செய்யாமல் இம்மண்ணில் ஜாதி ஒழிப்பு சாத்தியமில்லை

பைக்கில் .. செல்போன் வெடித்து நடுரோட்டில் ரத்தக் காயங்களுடன் சாய்ந்தார்

Cell Phone Blast, A man Injured near Hosur in Krishnagiri district tamil.oneindia.com - alagesan : ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போனில் பேசியபடியே இருசக்கரவாகனத்தில் சென்ற நபர் செல்போன் வெடித்ததில் படுகாயம் அடைந்தார்.
ஓசூர் அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் சொந்த வேலை காரணமாக ஓசூருக்கு இருச்சகர வாகனத்தில் சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்ற போது அவருக்கு போன் வந்துள்ளது. இதையடுத்து செல்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்துக்கொண்டு பேசியவாறு அவர் சென்றுள்ளார். அப்போது திடீரென்று செல்போன் வெடித்து தலை, காது, கை பகுதியில் படுயங்களுடன் ஆறுமுகம் கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குஷ்பு மீண்டும் சினிமாவில் அரசியலில் இருந்து விலகுகிறார் ..... டுவிட்டர் பதிவு


tamil.indianexpress.com :காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.
மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி கடந்த முறை போல, இந்தமுறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல், அப்பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.
பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்புவும், மீண்டும் நடிக்க வந்துவிடவா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாதாள சிறையா? - மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு ..

தந்தி டிவி : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கட்டடம், பாதாள சிறைச்சாலையா என ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் அருகே, கார் பார்க்கிங் பணிக்காக 30 அடி அளவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது, செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையுடன் சேர்த்து கட்டப்பட்ட பழமையான கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் அமைக்கப்படும் இடத்தின் மேற்பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை ஒன்று இருந்ததாகவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம், அந்த சிறையாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மாநகரில் உள்ள வரலாற்று எச்சங்களை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிரிகெட் தோணி பாஜகவில் சேர்கிறார்? ஜார்கண்ட் முதல்வர் ஆகிறார் ?

கலைஞர்செய்திகள் :கிரிக்கெட் வீரர் தோணி  ஓய்வு பெற்றதும் பாஜகவில்
இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக தோனிபோட்டியிட உள்ளதாக
ஜார்கண்ட் முதல்வர் வேட்பாளர் .. பா.ஜ.க.,வில் இணைகிறார்.. அமித்ஷா சந்திப்பு : அரசியலில் களம் காணும் தோனி ?பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. நடப்பு ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும் இந்திய அணியின் வீரர் தோனி தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என்ற எண்ணத்தில் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்
அதற்கு ஏற்றார்போல் சமூக வலைதளத்தில் பல்வேறு பதிவுகள், மீம்ஸ்கள் என பலவற்றை நெட்டிசன்களும், தோனி ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் பேட்டியளித்த பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான், கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்த பிறகு தோனி பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்ற கூறியுள்ளார். பாஜகவில் தோனியை சேர்ப்பது குறித்து பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்த சமண சிலைகளுக்கு மேக்கப் போட்டு தினுசு தினுசாக கதைகளை இயற்றி ... வரலாறு

Chozha Rajan:; மேக்கப்பை கலைத்தால்  உண்மை தெரிந்துவிடுமே!
இது ஏற்கெனவே எழுதி வெளியான கட்டுரைதான். புத்த சமண சிலைகளை எப்படி பார்ப்பனர்கள் மேக்கப் போட்டு தங்களுக்கு பிடித்த கதையைக் கட்டி இந்துக் கடவுளர்களாக உருமாற்றினார்கள் என்பதை விளக்கும் கட்டுரை இது. காஞ்சியில் புத்தர் சிலையை அத்திவரதர் என்று பெயர்சூட்டி, மீடியாக்கள்
மூலமாக பிரச்சாரம் செய்து பார்ப்பனர்கள் வசூல் வேட்டையாடிவரும் நிலையில் இந்தக் கட்டுரையை மீண்டும் பதிவிடுகிறேன்.
புத்தமதம், சமண மதம் குறித்து புதிய சர்ச்சைகள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தொல்.திருமாவளவனின் பேச்சு இந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அவர் அப்படி தவறாக என்ன சொல்லிவிட்டார்?
“அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்றும், அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜித்தை கட்டினார்கள் என்றும் கூறினார்கள். ராமர் பிறந்ததற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா என்று நாம் கேட்கவில்லை. அவர் பிறந்திருந்தால்தானே நாம் கேட்க முடியும்? அது கற்பனைப் பாத்திரம்தானே. வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும், ராமர் கோவில் இருந்த இடத்தி்ல் கட்டப்பட்ட பாபர் மஸ்ஜித்தை இடித்தது நியாயம் என்றால், புத்தர் ஆலயங்களை மாற்றி வைணவ ஆலயங்களாகவும், சைவ ஆலயங்களாகவும் மாற்றி இருக்கிறீர்களே அவற்றை இடித்துவிடலாமா?”

தி.மு.க வின் உண்மை விசுவாசிகளை களையெடுக்கும் படலம் .. கரூர் மாவட்டத்தில்தான் இந்த கூத்து?

senthil balajiவெப்துனியா ஆனந்தகுமார்| ;தமிழக அளவில் கரூர் என்றாலே பஸ்பாடி தொழில், கொசுவலை, டெக்ஸ்டைல் ஏற்றுமதி என்று பல புகழ்கள் இருந்த நிலையிலும், அரசியல் வரலாற்றில் ம.தி.மு.க கட்சி அதே கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சியில் தான் உருவானது. மேலும், அரசியல் மாற்றங்கள் அ.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கும், தி.மு.க விலிருந்து அ.தி.மு.க விற்கும் மாறும் காட்சிகளும் அடிக்கடி நடைபெற்று வருவதும் இந்த கரூர் மாவட்டத்தில் தான்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகார துஷ்பிரயோகம் செய்ததையடுத்தும், அவரை ஈடுகட்ட முடியாமலும் தான் அ.தி.மு.க விலிருந்து, செந்தில் பாலாஜிக்கு பயந்து கொண்டு 10 ஆயிரம் அ.தி.மு.க தொண்டர்களுடன் தி.மு.க வில் இணைந்தார். அப்படி செந்தில் பாலாஜிக்காக அ.தி.மு.க கட்சியிலிருந்து தி.மு.க விற்கு மாறிய சின்னசாமி, தற்போது செந்தில் பாலாஜி தி.மு.க விற்கு வந்ததன் பிறகு, சின்னசாமி யின் பலம் குறைந்து கொண்டே தற்போது நொந்து நூடுல்ஸ் ஆன கதை கரூரில் தினம் தினம் நடக்கின்றது.

ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்…

vikatan_2019-07_67ab89b7-4639-46be-8f0a-ef1823e4d591_p38 ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்... ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்... vikatan 2019 07 67ab89b7 4639 46be 8f0a ef1823e4d591 p38
ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்…
விகடன்:  ூலை 10-ம் தேதி, ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைப் பணியாளர்கள் சங்கம்’ சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையின்போது, கொத்தடிமைகளாக துன்பம் அனுபவித்து வந்த 42 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 18 பேர் குழந்தைகள் என்பதுதான் வேதனை. வேலூர் மாவட்டம், பருவமேடு பகுதியில் செயல்படும் மரம் வெட்டும் தொழிற்சாலையை, ராணிப்பேட்டை சப் கலெக்டர் இளம்பகவத் தலைமையிலான குழு சோதனையிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் கொன்னேரிக் குப்பம் பகுதியில் காஞ்சிபுரம் சப் கலெக்டர் சரவணன் தலைமையிலான குழு சோதனையிட்டது.< இந்தச் சோதனையில், வேலூரில் கொத்தடிமை களாக இருந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.< விசாரணையில், ஏழு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்காக, கட்டாயப்படுத்தி இவர்களை மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தி யிருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் தாசில்தார் ரமணியைக் கண்டவுடன் அவர் காலில் விழுந்த 60 வயது முதியவர் ‘‘ஆயிரம் ரூபாய் கடனுக்காக அஞ்சு வருஷமா மரம் வெட்டுறேன்மா. எங்களை எப்படியாவது காப்பாத்துங்க’’ என்று கதறியிருக்கிறார்.

தேசிய செய்திகள் மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள்; முகுல் ராய்

மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள்; முகுல் ராய் தினத்தந்தி : மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள் என மூத்த தலைவர் முகுல் ராய் கூறியுள்ளார்.
கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அங்கு பாரதீய ஜனதா கணிசமாக வெற்றி பெற்று உள்ளது. இது ஆளும் கட்சிக்கு பெருத்த அடியாக கருதப்படுகிறது. ஏற்கனவே மம்தா பானர்ஜிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் கூறுகையில் ‘மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் வெகு விரைவில் பாரதீய ஜனதாவில் இணைய உள்ளனர்.

காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்-.. வைரலாகும் படம்

தாய்லாந்தில் சுமார் 30 000 ஆயிரம் அத்தி வரதர் பெருமாள் வேங்கடசால்பதி
அரங்கநாதர் விஷ்ணு கோயில்கள் இருக்கிறது 
ஆனால் என்ன அவை எல்லாவற்றையும் அவர்கள் இன்னும்கூட புத்தர் ஆலயங்களாகத்தான் பேணி வருகிறார்கள் .. என்ன செய்வது பார்பனர்களால் அங்கு குடியேற முடியல்லியே . ஒருவேளை புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கு அதிகம் குடியேறி இருந்தால் குறைந்த பட்சம் அவை ஐயப்பன் கோயில்களாகவாவது உருமாறி இருக்கும் ம்ம்ம்ம் பொல்லாத தாய்லாந்து மக்கள்

 Mathivanan Maran -  tamil.oneindia.com : சென்னை: காஞ்சிபுரத்து அத்திவரதரைப் போலவே இருக்கும் தாய்லாந்து சயனநிலை புத்தர் சிலை படம் சமூக வைரலாகி வருகிறது. 
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அத்திவரதரின் அருளாசி பெறுவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட ஏராளமான விவிஐபிக்கள் காஞ்சி மாநகரை முற்றுகையிட்டு வருகின்றனர். Thailand sleeping Buddha picture goes viral ஒவ்வொருநாளும் காஞ்சிவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை விவரம் ஊடகங்கள் இடம்பெற்று வருகின்றன. காஞ்சி அத்திவரதரை தரிசிக்க வந்து 2 பேர் மாண்ட சம்பவமும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்திவரதரை தரிசிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகளில் குளறுபடிகள், முறைகேடுகள் என சர்ச்சைகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.
 இந்த வரிசையில் தற்போது அத்திவரதருடன் தாய்லாந்து சயனநிலை புத்தரும் மல்லுக்கட்டிக் கொண்டு வலம் வருகிறார். காஞ்சி அத்திவரதரைப் போலவே சயனநிலையில் இருக்கிறார் அந்த புத்தர். ஏறக்குறைய இருவரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். இந்த படங்களை வைத்து பல்வேறு கருத்துகளை சமூகவலைதளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிற

அஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது மதுரை உயர்நீதி மன்றம்

மாலைமலர் : நாளை நடைபெறும் அஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 மதுரை . இந்தியா முழுவதும் தபால் துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள், மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் போன்ற தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளில் வந்துகொண்டிருந்தன. தபால் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல்தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எனவும், இரண்டாம் தாள் அந்தந்த மாநிலங்களுக்கு ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன் இரண்டு வினாத்தாள்களுமே அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்பட்டன. இப்போது முதல் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை கடந்த 11ம்தேதி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, அஞ்சல்துறை தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்கு எதிராக மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாளை நடைபெறும் அஞ்சல்துறை தேர்வுகளுக்கு தடையில்லை. ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டது.<
அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழியை புறக்கணித்தது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.