மின்னம்பலம் :தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.
தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான சட்டத் திருத்த மசோதா இன்று (ஜூலை 15) மக்களவையில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
விவாதத்தில் மீது திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, “நமது நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. சமூக ஜனநாயக குடியரசு என்றுதான் அரசியல் சாசனத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் மதச்சார்பற்றவையாக உள்ளன. இந்த சட்டங்கள் மதச்சார்பற்றவையாக தொடர்வதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக என்.ஐ.ஏ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான சட்டத் திருத்த மசோதா இன்று (ஜூலை 15) மக்களவையில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
விவாதத்தில் மீது திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, “நமது நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. சமூக ஜனநாயக குடியரசு என்றுதான் அரசியல் சாசனத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் மதச்சார்பற்றவையாக உள்ளன. இந்த சட்டங்கள் மதச்சார்பற்றவையாக தொடர்வதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக என்.ஐ.ஏ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


















