திங்கள், 15 ஜனவரி, 2018

ஹரியனாவில் தலித் பெண் கூட்டு வன்புணர்வு கொலை ,,,


மின்னம்பலம் :ஹரியானாவில் 15 வயதுள்ள மற்றொரு நிர்பயா கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் கால்வாய் அருகே அரை நிர்வாணத்தில் ஒரு பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தலித் சமூகத்தை சேர்ந்த அந்தப் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணின் மர்ம உறுப்பில் வெளிநாட்டுப் பொருளை செலுத்திக் கொடுமைப்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிஜிஐஎம்எஸ் ரோதக் தடவியல் துறை தலைவர் டாக்டர் எஸ்.கே. தத்தார்வால் கூறுகையில், அந்த பெண்ணின் முகம்,தலை, மார்பு பகுதி மற்றும் கைகள் உள்பட 19 காயங்கள் உள்ளன. அவரது நுரையீரல் கிழிந்துள்ளது. இதற்குக் காரணம் யாராவது அவரது மார்பு மீது உட்கார்ந்திருக்க வேண்டும்.

காணும் பொங்கல் : கடலில் குளிக்கத்தடை!

காணும் பொங்கல் : கடலில் குளிக்கத்தடை!மின்னம்பலம் :காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினாவில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் கொண்டாட்டமாக நாளை (ஜனவரி 16) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் குடும்பத்துடனும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் பூங்கா, பொருட்காட்சி உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்வார்கள். சென்னை மக்கள் காணும் பொங்கலை கொண்டாட நாளை கடற்கரை பகுதிகளில் குவிவார்கள். அதன்படி, அண்ணா நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை மக்கள் திரண்டிருப்பார்கள். காணும் பொங்கல் அன்று உற்சாக மிகுதியில் சிலர் கடலுக்குள் சென்று குளிக்க முயற்சி செய்வார்கள்.

ரஜினி மோடியின் அடியாள் ..பாஜகவின் ப்ளானை போட்டுடைத்த குருமூர்த்தி! பூனைக்குட்டி வெளியே வந்தது!

Mathi - Oneindia Tamil ரஜினியுடன் கூட்டு என்ற பா.ஜ .க.வின் திட்டத்தை போட்டு உடைத்த குருமூர்த்தி சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலின் பின்னணியை பட்டவர்த்தனமாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போட்டுடைத்திருப்பதுதான் அரசியல் அரங்கத்தில் ஹாட் டாபிக். கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை திராவிட கட்சிகளின் நீட்சியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்தின் 'ஆன்மீக அரசியல்' இந்துத்துவா அரசியலாகப் பார்க்கப்பட்டது. ரஜினிகாந்த் தமது ஆன்மீக அரசியல் மீது நேர்மை, தூய்மை என போர்வை போர்த்திப் பார்த்தார். ஆனால் ராமகிருஷ்ணா மடத்துக்கு முதலில் சென்றபோதே அவர் முன்வைக்கும் ஆன்மீக அரசியல் இந்துத்துவா அரசியல்தா என்பது அப்பட்டமானது. பாஜக மீதே சந்தேகம் பாஜக மீதே சந்தேகம் அதன்பின்னரும் ஆன்மீகம், அரசியல், ஆன்மா குறித்து 'தத்துவ' விளக்கம் தந்து வருகிறார் ரஜினிகாந்த். ஆனால் ரஜினிகாந்தை களமிறக்கி அவருடன் பாஜக கைகோர்க்க முயற்சிக்கிறது என்பதுதான் அரசியல் அரங்கத்தின் பேசுபொருளாக இருந்தது. 

பாலமேடு ஜல்லிக்கட்டில் வாலிபர் உயிரிழந்தார்

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி வாலிபர் பலிமாலைமலர் :மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது சீறிவந்த காளை முட்டியதில் காளிமுத்து என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 458 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்குவதற்காக சுமார் 700 வீரர்கள் களமிறங்கினர். தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயோந்திரர் நேற்று இரவு சங்கரமடத்தில் உறங்க சென்ற போது மூச்சு தினரல் ஏற்பட்டு உடல்நலம் மோசமடைந்ததால், விரைந்து வந்த மருத்துவர்கள் அவரின்நிலை மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரை அட்மிட் செய்ய மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதும் சற்று உடல்நலம் தேரியதால் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆக விருப்பமில்லை என்று கூறியதாலும், அவருக்கு அங்கிருக்க பிடிக்க விலை என்று அவர் சொன்னதால் அவர் சென்னை சேத்துபட்டில் உள்ள சங்கர மடத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். – அரவிந்த்< nakkeeran<

சசிகலாவும் நடராஜனும் தமிழகமெங்கும் சுற்று பயணம் ,, ஜூன் மாதம்,,,, நடராஜன் பேட்டி..


tamiloneindia :சென்னை : வருகிற ஜூன் மாதத்தில் சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக சசிகலாவின் கணவர் ம.நடராஜன் தெரிவித்துள்ளார். பரோல் வாங்கி ஒரு நாளோ ஒரு வாரமோ இந்த பிரச்சாரம் நடைபெறும் என்று நடராஜன் கூறியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முதன்முறையாக தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியின் விவரங்கள் : உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொள்ளும் போது எந்த பயமும் இல்லை, என்னுடைய தேவைகளையும் ஆசைகளையும் வரையறுத்துக் கொண்டதால் எனக்கு உயிர் போய்விடுமோ என்ற பயம் எப்போதுமே இருந்ததில்லை. இப்போது என் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்தில் தமிழகம் முழுவதும் என்னுடைய மனைவி சசிகலாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஒரு நாள் பரோல் வாங்கியாவது இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்வோம், தமிழகத்தை சுற்றி வர ஒரு நாள் போதாதா? எங்கள் குடும்பத்திற்கு மட்டும் ஏன்?

ஞானியின் இறுதி முகநூல் பதிவு .... குருமூர்த்தி முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்கு புரியும்

Sutha P Oneindia Tamil சென்னை: மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் ஞானியின் கடைசி முக நூல் பதிவு அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது. ஞானி சங்கரன் இன்று காலை தனது சென்னை இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. ஞானி சங்கரன் தனது முக நூல் பக்கத்தில் போட்டுள்ள கடைசி பதிவு பல சிந்தனைகளை கிளறி விடுவதாக உள்ளது. Gnani takes on Gurumurthy in his last FB post இதுதான் அது: துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும். எத்தனை நிதர்சனமான உண்மை.

திண்டுக்கல் கிறிஸ்தவ ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல்...

நக்கீரன் :திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் புனித தோமையார் ஆலையம் உள்ளது. இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மதநல்லிணக்கத் வலியுருத்தும் வகையில் புனித தோமையார் ஆலயம் வளாகத்தில் இருபதுக்கு மேற்பட்ட  கிறிஸ்தவ மக்கள் பொங்கல் வைத்தனர். இப்படி வைக்கபட்ட பொங்களுக்கு வட்டார பங்கு தந்தை சேவியர் நேரில் சென்று  புனித நீர் தெளித்து  ஆசீர்வதித்தார்.அதன் பின் இந்துக்கள் முறைப்படி  வணங்கி  விட்டு பொங்கல்  விழாவை கொண்டாடினார்கள்  இப்படி பொங்கள் பண்டிகையை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடியதை கண்டு நகரில் உள்ளவர்கள் பூரித்து போனர்கள்

பெரியார் வழியில் தமிழக வளர்ச்சி இருக்க வேண்டும்!

பெரியார் வழியில் தமிழக வளர்ச்சி இருக்க வேண்டும்!மின்னம்பலம் :‘தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி என்பது பெரியார் வழியின் அடிப்படையில் இருக்க வேண்டும்’ என்று சென்னையில் நேற்று (ஜனவரி 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி பேசியுள்ளார்.
நேற்று சென்னை அடையாறிலுள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு குஜராத் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பினர் சார்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பேசிய ஜிக்னேஷ், “தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி என்பது பெரியார் வழியின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜிக்னேஷ் மேவானியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...
குஜராத் நதிநீர் திட்டம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளீர்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்?

தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

மின்னம்பலம :உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் மூத்த நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் நீதிபதிகள் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த 12ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மறைமுகமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் அவர்கள், “உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியில்லை. இதே நிலைமை நீடித்தால், இந்திய நாட்டில் ஜனநாயகம் இருக்காது” என்றும் குறிப்பிட்டிருந்தனர். உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்தது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ஜிக்னேஷ் மேவானி இயக்குனர் ரஞ்சித் சந்திப்பு

பா.இரஞ்சித் (இடது) ; ஜிக்னேஷ் மேவானி (வலது) மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித்தை குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ.,வும் தலித் சமூகத்தின் இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து இருவருமே பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து தத்தம் ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், "தோழர் ஜிக்னேஷ் மேவானியை சந்தித்தது எதிர்பாராத இனிய தருணம். என் வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள். உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகிறேன். நீங்கள் செய்யும் பணியை தொடருங்கள். உங்கள் மீது மரியாதை கொண்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாகிஸ்தானியர்களின் இந்திய சொத்துக்கள் வாரிசு உரிமை இனி கோரமுடியாது ... ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஏலம் !

தினமலர் : எதிரி சொத்து,விரைவில்,ஏலம்,ரூ.1 லட்சம் கோடி,'enemy' propertiesபுதுடில்லி : நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எதிரி சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது.
;நாடு சுதந்திரம் அடைந்தபோதும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான போருக்கு பின்னும் இந்த நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்தியாவிலிருந்து வெளியேறினர். இவர்கள் சீனா, பாக்., ஆகிய நாடுகளுக்கு குடிபெயந்தனர். இவர்கள் நம் நாட்டில் விட்டுச் சென்ற சொத்துக்கள் எதிரி சொத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.
;இந்த சொத்துக்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் 1968-ல் எதிரி சொத்து சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் இந்தியாவில் விட்டு சென்ற சொத்துக்களுக்கு அவர்களது வாரிசுகள் உரிமை கோர முடியாத வகையில் 49 ஆண்டு பழமையான சட்டத்தில் திருத்தம் செய்து பார்லிமென்டில் 2017ல் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஓசூரில் உணவு விடுதியாளர் தலை துண்டிக்கப்பட்டு கொலை

tamilthehindu :ஹோசூரில் உணவகம் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
ஓசூர் சமத்துவ புரம் பகுதியில் வசித்து வந்தவர் சேட்டு(எ)பிரேம் நவாஸ்(40). இவர் ஹோசூர் ராம்நகரில் தாஜ் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இவர் நேற்று காலை தன் வீட்டிலிருந்து உணவகத்துக்கு புறப்படும் போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்றது.
இது குறித்து சேட்டுவின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஹோசூரை அடுத்த நல்லஹான கொத்தனபள்ளி கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து சூளகிரி போலீஸார் அங்குச்சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அருண் ஜெட்லி : சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு இணைந்தே தேர்தல்.. ஒரே கட்சி ஆட்சிக்கு -EVM- கரண்டி ?

தினகரன் :சென்னை: சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு இணைந்தே தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தி நாட்டை காப்பாற்றிய பெருமை மோடி அரசே சாரும் என்றும் ஜெட்லி பெருமிதம் தெரிவித்தார். இதேபோல் மோடி அரசில் தான் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது: ஊழல் ஒழிப்புக்கான மிக முக்கியமான நடவடிக்கை தான் பணமதிப்பு நீக்கம். கடினமான நிலையில் தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பணமதிப்பு நீக்கம் மூலம் நாட்டை பாஜக காப்பாற்றியுள்ளது. பிரதமரின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் நாட்டின் வருவாய் அதிகரித்துள்ளது.

ஞானி சங்கரன் காலமானார் ... பிரபல எழுத்தாளர் ஞானி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால்  காலமானார்தினத்தந்தி :சென்னை, பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.&எழுத்தாளர் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர்  ஞானி. ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக  சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஏன் எங்கள் மதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குகிறீர்கள்?'

Ganesh Babu : உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள பகுத்தறிவாளர்கள் மீதும் அந்தந்த பகுதிகளில் வாழும் பெரும்பான்மை மதத்தினர் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு..
'ஏன் எங்கள் மதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குகிறீர்கள்?' என்பது..
அதற்கு எல்லா பகுத்தறிவாளர்களின் ஒரே பதில்,
"எல்லா மதங்களையும் மூடத்தனம் என்று கருதித்தான் நிராகரிக்கிறோம். ஆனால் நான் பிறந்த மண்ணில் எந்த மதத்தின் மூடத்தனங்களால் பெரும்பான்மையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த மதத்தையே கூடுதலாக எதிர்க்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. மதங்களின் மீதான வெறுப்பைவிட, மனிதர்களின் மீதான நேசமே அதற்குக் காரணம்!"
இன்னும் தெளிவாகச் சொல்வேண்டுமானால், இந்தியாவில் பிறந்த பெரியார் இந்துமதத்தை கூடுதலாக எதிர்த்தார், வங்கதேசத்தில் பிறந்த தசுலிமா நசுரீன் இசுலாமியத்தை கூடுதலாக எதிர்க்கிறார், இங்கிலாந்தில் வாழும் ரிச்சார்டு டாக்கின்ஸ் கிறுஸ்துவத்தை கூடுதலாக எதிர்க்கிறார். இவர்களிடம் சென்று ஏன் எல்லா மதங்களையும் சரி சமமாக விமர்சிக்கவில்லை என்று கேட்பது நியாயமா?
அந்தந்தப் பகுதிகளில் வாழும் பகுத்தறிவாளர்கள் அங்குள்ள சிறுபான்மையின மதத்தினரை அதிகம் விமர்சிக்காததற்கு மற்றொரு நுட்பமான, வெளிப்படையான காரணமும் உண்டு. அத்தகைய சிறுபான்மையின எதிர்ப்பு, அங்குள்ள பெரும்பான்மைத்துவ மதவாதம் பேசுவோருக்கு ஆதரவாகப் போய் முடியக்கூடும்.

மோடியின் கட்டிப்பிடிக்கு உலகநாட்டு தலைவர்களின் மனைவிகள் ஓட்டம் ...


tamiloneindia :புதுடில்லி: வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்பது குறித்து கிண்டல் செய்யும் விதமாக காங்., தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி’ வைத்தியம்!! (படங்கள், வீடியோ)மற்ற நாட்டு தலைவர்களை சந்திக்கும் போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்று வருகிறார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்., தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீடியோவில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போதும், வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின் போதும் அவர்களை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றது கிண்டல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய வருகையின் போதும் இத்தழுவலை எதிர்பார்க்கலாம் எனவும் காங்., பதிவு செய்துள்ளது.

எமில் சவுந்தரநாயகம் ! திரைப்படங்களை விட கவர்ச்சிகரமான திருப்பங்கள் நிறைந்த தில்லுமுல்லு வரலாறு


ராதா மனோகர் : திரு.எமில் .சவுந்தரநாயகம் (6 July 1923 – 21 December 1976) இலங்கை தமிழரான இவர்  ஐம்பது அறுபதுகளில் ஐரோப்பாவையும் கடந்து உலகையே கலக்கிய ஒரு மோசடிக்காரன் இவரது முழுபெயர் (Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam ).இவரது மனைவி பெயர் புஷ்பம் .இவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும்  பிறந்ததாக தெரிகிறது .. இவரின்  மோசமான நடவடிக்கைகளால் இவரது குடும்பம்  வாழ்க்கை முழுவதுமே  தலைமறைவாக வாழவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அன்றைய பிரித்தானிய யுத்த அமைச்சர் ஒரு பெண் உளவாளியோடு தொடர்பு கொண்டிருந்தமையால் பிரித்தனிய அரசே கவிழ கூடிய நிலை உருவானது , அந்த பெண் உளவாளி எமில் சவுந்தர நாயகத்தில் பணத்தில் பிரித்தானிய அமைச்சரை வேவு பார்த்ததாக நம்பபட்டது, அதில் அந்த அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார், எமில் தப்பி விட்டார்,

இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது  24 வயது நிரம்பிய எமில் சவுந்தர நாயகம் அங்கு வர்த்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் .ஆனால் அதில் வெற்றி பெறமுடியவில்லை, அந்த இளம் வயதிலேயே இவருக்கு சர்க்கரை நோய் தாக்கியது, நிரந்தரமாகவே இன்சுலின் பாவிக்கும் அளவுக்கு சர்க்கரை நோய்க்கு ஆட்பட்டிருந்தார். பிரிட்டிஷ் விமான படையில் சேர்வதற்கு முயற்சித்தார். இரண்டாவது உலக யுத்தம் காரணமாக அது கைகூடவில்லை.
அக்காலகட்டத்தில் கொரியா யுத்தம் நடந்தது , சீனாவின் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை அமுலில் இருந்தது, சீன பொருளாதரத்தை சீரழிக்கும் அமெரிக்க முயற்சியில் எமில் சவுந்தர நாயகத்தின் டம்மி கம்பனி ஈடுபட்டது. சீனாவுக்கு பெற்றோலிய எண்ணைய் ஏற்றுமதி செய்யும் போலி கம்பனி ஒன்றை தனது அமெரிக்க தொடர்புகள் மூலம் உருவாக்கினார் .சீனாவை ஏமாற்றி பெரும் தொகையான பணத்தை பெற்றுக்கொண்டார். இல்லாத ஆயிலுக்கு பணம் அனுப்பி  ஏமாந்தது சீனா. இந்த விதமான நடவடிக்கைகள் ஒரு தடவையோடு மட்டும் நிற்கவில்லை என்பதுதான் இதில் வேடிக்கை.
இதன் பின் 1954   இல் அரிசி ஏற்றுமதி மோசடியில் அகப்பட்டு பெல்ஜியத்தில் சிறை தண்டனை பெற்றார் . இல்லாத அரிசியை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் இருந்து இலகுவாக வெளியே வந்தார்,
இவர் எப்பொழுதும் பல சக்தி வாய்ந்த  பிரமுகர்களை தனது லஞ்சத்தால் கையில் வைத்திருந்தார், இவரது உள்வட்டதில் ஐரோப்பிய அரசியல் பொருளாதார பிரமுகர்கள் மட்டுமல்லாமல் வத்திகான் வரை அங்கத்தினர் இருந்தனர்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

தலைவர்களின் பொங்கல் வாழ்த்துக்கள் ... தமிழர் பாரம்பரிய மாதம் கனடாவில் ஆரம்பித்து வாய்த்த ஜஸ்டின் த்ருடோ



பொங்கல்: தலைவர்கள் வாழ்த்து!
மின்னம்பலம் :தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும் என்று பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர், துணைமுதல்வர்
அகிலமே பயனுறும் வகையில் தன் உழைப்பையும் அறிவையும் ஆற்றலையும் வழங்கிய நம் தமிழ் இனம் தொன்றுதொட்டு கொண்டாடி மகிழும் இந்தப் பொங்கல் திருநாளை இந்த ஆண்டும் மிகச் சிறப்புடன் கொண்டாடி மகிழ அதிமுக சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மு.க.ஸ்டாலின், திமுக செயல் தலைவர்
பொங்கல் தமிழர்களின் தனித்துவமான விழா. தமிழர் திருநாள் என்பதுடன், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது. உழைப்பின் உயர்வினை உலகுக்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும், அந்த உயர்வுக்கு உற்ற துணையாக நிற்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் இதயபூர்வ நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் நன்னாளை, தமிழினத்தின் ஆதி பழம்பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக, பண்பாட்டு மடை மாற்றம் ஏற்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு மகத்தானது.

பெரியபாண்டியன் கொலை வழக்கில் கொள்ளையன் நாதுராம் கைது

Nathuramவெப்துனியா :தமிழகத்தை அதிர வைத்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டார்.சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார்.>பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், முனிசேகர் என்ற காவலர் சுட்ட போது தவறி பெரியபாண்டியன் மீது பட்டதால் அவர் மரணமடைந்தது தெரிய வந்தது.

கலைஞர் தொண்டர்களை சந்தித்தார் ..கோபாலபுரத்தில் குவிந்தனர்

Mathi - Oneindia Tamil சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி திமுக தொண்டர்களை அக்கட்சித் தலைவர் களைஞர்  இன்று சந்தித்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடியார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். i முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கலைஞர் இன்று கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார். கலைஞர்  சந்திக்கப் போகிறார் என்ற தகவல் பரவியதால் காலை முதலே கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 400 காளைகள், 479 வீரர்கள் பங்கேற்றனர்


மாலைமலர் :மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கலை முன்னிட்டு இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400-க்கும் மேற்பட்ட காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மதுரை: தை மாதத்தின் முதல் தேதியான இன்று உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் தொடங்கி வைக்கப்பட்டது.< ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர்தொடங்கி வைத்தனர். ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர் முதலாவதாக ஊர் மரியாதையை ஏற்கக்கூடிய கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

தமிழ் புத்தாண்டுக்கு 6 படங்கள் திரைக்கு வரத் தயாராக இருந்தன.. அரங்குகள் கிடைப்பது ....?

 Shankar - Oneindia Tamil பொங்கல் பண்டிகைக்கு 6 படங்கள் திரைக்கு வரத் தயாராக இருந்தன. ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாபாலான தியேட்டர்களை தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் இரு படங்களும் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டது. எஞ்சிய தியேட்டர்களை குலேபகாவலி ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் மற்ற படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப்போய் விட்டன. இறுதியாக தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் நேற்று வெளியாகின. தாசேகூ தாசேகூ தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்துள்ளார். இவர் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 
 1987-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அக்‌ஷய்குமார், காஜல் அகர்வால் நடித்து இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 என்ற படத்தின் கருவை மையமாக வைத்து தமிழுக்கு ஏற்ப புதிய திரைக்கதையில் இந்த படத்தை எடுத்துள்ளனர். அனிருத் இசையில் சொடக்கு போடு என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழகத்தில் 450 க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு சுமாரான ஓபனிங் இருந்தது. முதல் நாள் தமிழ் நாடு மொத்த வசூல் சுமார் 5.85 கோடி ரூபாய். 

வைரமுத்து ஆண்டாள் பற்றி என்னதான் கூறினார் ? கருத்துரிமைக்கு எதிரான காலித்தனம் ...

Manjai Vasantha :
வைரமுத்து கருத்தை வலுவாக்கும்
வரிகளின் தொகுப்புதான் திருப்பாவை?
கருத்துரிமைக்கு எதிரான
காலித்தனம் கண்டிக்கத்தக்கது!
- மஞ்சை வசந்தன்
கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை. ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்ந்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்’’ என்ற ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார்.
இதுதான் வைரமுத்து சொல்லியது. அதுவும் அமெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் சுபா’ மாலிக் வெளியிட்ட Indian Movement sum Aspects of desserts protest and reforms என்ற நூலில், அந்த அயல்நாட்டு ஆய்வாளரின் கருத்தையே அவர் சொல்லியுள்ளார்?
அப்படியாயின் உண்மையில் யாரிடம் மோத வேண்டும்? அந்த ஆய்வாளரை விட்டுவிட்ட வைரமுத்தவிடம் வம்புக்கு வருவது அற்பத்தனம் அல்லவா?
ஆண்டாள் என்று ஒரு பெண்ணே கிடையாது. அவள் ஓர் கற்பனைப் பாத்திரம். பெரியாழ்வாரின் புனைவே ஆண்டாள்! என்று இராஜாஜி கூறினாரே!
அவரை இன்றுவரை எந்த வைணவர் கண்டித்தார்? எந்த இந்து மதவாதிகள் கண்டித்தார்கள்?

பிகார் ராஜாவுக்கு ஆதரவாக பார்பன மாமிகள் வைரமுத்து படத்துக்கு செருப்படியாம்

Tamil Selvan : கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் சமூகநீதி, பகுத்தறிவு பேசப்பட்டு வருகிறது..ஆனால் அவைகள் தனிமனித விரோத அடிப்படையிலோ அல்லது வெறும் இன வெறி அடிப்படையிலோ பேசப்படவில்லை...பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றினணக்க வேண்டியே நீதிக்கட்சி ,சுயமரியாதை இயக்கம் தோன்றியது..செயல்பட்டது ..இப்போதும் அதன் தொடர்ச்சியான இயக்கங்கள் களத்திலிருக்கின்றன.
தந்தைபெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும் மிக நெருங்கிய நண்பர்கள் தனிப்பட்ட வாழ்வில்...அரசியல் சித்தாந்த அடிப்படையில் கடும் எதிரிகள்..அவர்கள் இருவருமே தமிழக அரசியலுக்கு மாத்திரமல்லாமல் இந்திய அரசியலுக்கே ஒரு வாழிகாட்டியாக வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்..
திராவிடர் கழகமும் ,RSS இயக்கமும் நேர் எதிர் எதிர் சித்தாந்தம் கொண்டது..சில மாதங்கள் முன்பு தொழிலதிபர் விஜிபி அவர்களின் இல்ல விழாவில் தமிழகத்தின் மிக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் ..மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர்..திக தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யாவும், பாஜகவின் மூத்த தலைவர் உயர் திரு இல கணேசன் அவர்களும் அந்த மேடையில் அருகருகே இருந்தனர்..அப்போது உரையாற்றிய திக தலைவர் ஆசிரியர் இல கணேசன் அவர்களை தங்களின் கொள்கை எதிரி என்றும் தங்களுக்கும் அவருக்கும் சித்தாந்தங்களில்தான் முரண்பாடே தவிர தனிப்பட்ட வாழ்வில் எந்த விரோதமோ குரோதமோ கிடையாது என்று பேசினார்..