திங்கள், 22 மே, 2017

அவர்கள் சைத்தான் தத்தெடுத்த பாவிகள் என்ற ஜெயகாந்தனின் வரிகள்

stanley.rajan: எழுத்தாளனுக்கு இறப்பில்லை, அவன் தன் எழுத்தில் எந்நாளும் எல்லா தலைமுறையோடும் பேசிகொண்டே இருப்பான்
அப்படி ஜெயகாந்தன் தற்போது என்னுடன் பேசிகொண்டிருக்கின்றார், மிக மிக உறுதியான வரிகளோடும் , உறுதியோடும், பதைபதைக்க வைக்கும் தகவல்களோடும் பேசிகொண்டிருக்கின்றார்
1990கள் ராஜிவ் கொலைநடந்த காலங்களை மிக மிக உக்கிரமாக பேசிகொண்டிருக்கின்றார். சோ ராமசாமி, ஜெயலலிதா, வாழப்பாடி ராமமூர்த்தி, மபோசி எல்லோரும் எப்படி எல்லாம் புலிகளை கண்டித்தார்கள், கலைஞரிடம் கெஞ்சினார்கள் என்ற செய்திகள் அவை
கலைஞர் ஏன் 2009ல் அமைதியானார் என்பதற்கான காரணங்களை சொல்லிகொண்டிருக்கின்றார்
பத்மநாபா கொலை நமக்கு தெரிந்தது, அதனை விட மகா பயங்கரமானது 1990ல் செப்டம்பரில் சென்னையில் ராஜிவும் இன்னும் அகில இந்திய சிந்தனையாளர்களும் கலந்துகொண்ட விழாவின் மண்டபத்தை தகர்க்க திட்டமிட்டிருக்கின்றான் சிவராசன்
பத்மநாபா கொலையின் ஒரு மாத இடைவெளி அது, அந்த பயங்கர சதி மறைக்கபட்டது ஏன்? அந்த சதியிலே சிவராசனை, அதன் பின்னும் தமிழகத்தில் சுதந்திரமாக அலைந்த சிவராசனை சுட்டுபொசுக்கியிருந்தால் ராஜிவினை காப்பாற்றி இருக்கலாம், முறைப்படி டெல்லிக்கு தெரியபடுத்தியிருந்தால் கூட உஷாராயிருப்பார் ராஜிவ் , அது தடுக்கபட்டது ஏன்?
அவ்வளவிற்கு புலிகளை ஆதரித்திருக்கின்றார் கலைஞர், அந்த அளவு திமுக புலிகளுக்கு ஒரு காலத்தில் உதவியிருக்கின்றது

தமிழிசை : இறைவன் திமுகவை வைத்தே கோவில் குளங்களை தூர்வார வைத்திருக்கிறான்

Sumi B :திமுகவை வைத்தே கோவில் குளம் தூர் வார வைத்திருக்கிறான் கடவுள் - தமிழ் மியூஜிக் திருவாய் அருளல்.

கோவில் குளத்துல இருக்கறது, இருக்கப்போறது தண்ணீர்... சாமி சிலை இல்லை...!! தண்ணீர் சாமியின் தேவை இல்லை... மக்களின் தேவை... மக்களுக்கான தேவை எங்கிருந்தாலும் பாகுபாடு பார்க்காமல், அவர்களின் தேவையை நிறைவேற்றும் ஒரே கட்சி திமுக மட்டுமே என்பதை இதிலிருந்தே உணரவில்லையா திருமதி.டம்மில் மியூசிக் அவர்களே

நிலக்கரி சுரங்க முறைகேடு முன்னாள் 3 செயலாளர்களுக்கு 2 வருட சிறை .. ஹெச்.சி.குப்தா, ..


Special CBI judge Bharat Parasher sentenced former coal secretary H.C. Gupta and two senior government officials for two-year imprisonment ...
புதுடில்லி : நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட், தீர்ப்பளித்தது. இந்நிலையில் இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 3 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் வழங்கப்பட்டுள்ள முதல் அதிரடி தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளரான குப்தா மீது குற்றம்சாட்டப்பட்ட போது, அவர் மிகவும் நேர்மையானவர் என முந்தைய காங்., அரசால் கோர்ட்டில் கூறப்பட்டிருந்தது. அந்த குப்தாவுக்கு தற்போது தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தினமலர்

4 கோடி மக்கள் பேசும் போஜ்பூரி மொழி... திரைப்படங்கள் ...

/vinayaga.murugan.:  கிழக்கு உத்தரபிரதேசத்தில் மற்றும் மேற்கு பீகாரில் பரவலாக இந்த மொழி பேசப்படுகிறது. சுமார் நாலுகோடி பேர் இந்த மொழி பேசுகிறார்கள். புள்ளிவிபரத்தை தெளிவாக எடுக்க முடியவில்லை. காரணம் பலர் பீகாரி மற்றும் இந்தியுடன் கலந்து பேசுவதால். போஜ்பூரி மொழியில் நாவல்கள் கவிதைகள் கூட வெளிவந்துள்ளன. இலக்கியத்தை விடுங்கள். போஜ்பூரி மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்கள். ஒவ்வொன்றும் காவியம். நேற்று மூன்று திரைப்படங்கள் பார்த்தேன். குண்டராஜ் ,த்ரிதேவ், காதர். அங்கு இரண்டு பெரிய நடிகர்கள். நம்மூரு அஜீத், விஜய் போல கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.. ஒருவர் கேசரிலால் யாதவ். இன்னொருவர் பவன்சிங். கேசரிலாலுக்கு நான் ரசிகன்.போஜ்பூரி நடிகர்களின் நன்றாக நடனம் ஆடக்கூடிய நடிகர்களில் இவர் முதன்மையானவர். உலகின் அழகான இளம்பெண்கள் நிறைந்த நாடு சீலே என்று சாரு அடிக்கடி சொல்வார். அவருக்கு போஜ்பூரி பற்றி எதுவும் தெரியாது என்று நினைக்கிறேன். அவர் ஒருமுறை மோனலிசா, அக்சரா குறிப்பாக ராணி சாட்டர்ஜி போன்றோரின் நடனங்களை பார்க்க வேண்டும். 

எண்பதுகளில் ஈழத்தமிழர்கள் மீது தமிழக மக்களுக்கு இருந்த நேசம் இப்போது இல்லை

vinayaga.murugan. பேஸ்புக்கில் எங்கு பார்த்தாலும் பிரபாகரனை திட்டி பதிவுகள். இந்த பதிவுகளை பெரும்பாலும் திமுக நண்பர்கள்தான் எழுதுகிறார்கள். வருத்தமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக இந்த தமிழ் தேசிய ஆட்கள் தொடர்ந்து கொடுத்த தொல்லை பொறுக்க முடியாமல்தான் பொறுமை இழந்து இப்போது பிரபாகரனை திட்டி தீர்க்கிறார்கள். இதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள். இப்படி சண்டை மூட்டிவிடுவதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் நினைவேந்தலுக்கு கூடிய இருபது பேர் (ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டம் இல்லையென்றாலும் இந்த வருடம் கூட்டம் கம்மிதான் இல்லையா தோழர்? ) களை காவல்துறை கைது செய்துள்ளது. இப்போது கூட எடப்பாடியை அல்லது மோடியை எதிர்த்து குரல் கொடுக்காமல் வேனில் ஏறும்போது கூட கருணாநிதி ஒழிக என்று குரல் கொடுக்கிறார்கள் பாருங்க.அந்த நேர்மைதான் அவர்களிடம் பிடித்துள்ளது.
திமுகவின் ஆட்சியில் கும்பகோணம் மயிலாடுதுறை, வேதாரண்யம் முழுக்க விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்தார்கள். வீட்டுக்கு ஒருவர் பிரபாகரன் படத்தை வைத்திருப்பார். எங்கள் ஊர்களிலிருந்து டீசல் முதல் சர்க்கரை வரை விசைப்படகுகளுக்கு செல்லும். பதிலுக்கு அவர்கள் தரும் கள்ளத்துப்பாக்கிகளை பரிசாக வாங்கி வருவார்கள். அதை வைத்து வேட்டைக்கு செல்வது அன்றைய இளைஞர்களிடம் ஒரு சாகசம். போரில் ஈடுபடவில்லை என்றாலும் போராளிகளுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் ஒருவித சாகச மனநிலையிலேயே அவர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள்.

விரைவில் ஆட்சி மாற்றம்: மைத்ரேயன் (RSS ஸ்லீப்பர் செல் கூறுவதால் கண்டிப்பாக நடக்கும்)

விரைவில் ஆட்சி மாற்றம்: மைத்ரேயன்மின்னம்பலம் :தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆவார்’ என மைத்ரேயன் கூறியுள்ளார்.
அதிமுக-வின் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டும், இதுவரை ஒருமுறைகூட பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இரு அணிகளின் தலைவர்களும் எதிரும் புதிருமான கருத்துகளைத் தெரிவித்து மோதி வருகின்றனர். இதனால் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ள ஓ.பி.எஸ். அணியினர் அதிலிருந்து பின்வாங்க போவதில்லை என்று கூறியுள்ளனர். ‘இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் அணிகள் இணைய எந்தத் தடையும் இல்லை’ என மே 20ஆம் தேதி ஓ.பி.எஸ். அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதாவின் கனவு நிறைவேற பிரிந்தவர்கள் திரும்பி வர வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். பிரதமரைச் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்துள்ள பன்னீர்செல்வம், ‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு பாஜக-வுடனான கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்’ என ட்வீட் செய்திருந்தார். பின்னர், ‘எந்தக் கட்சியாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்’ என மற்றொரு ட்வீட் செய்திருந்தார்.

ஜி.எஸ்.டி-க்கு எதிர்ப்பு - மே 30ஆம் தேதி ஓட்டல்கள் கடை அடைப்புப் போராட்டம்..!

மே 30 ஆம் தேதி, தமிழகம் முழுவதுமுள்ள ஓட்டல்கள் மூடப்படும்' என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார். ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஜி.எஸ்.டி வரி விதிப்புமுறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பின்மூலம் விலைவாசி முறையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக, உணவகங்களில் உணவு விலைகள் அதிகமாக உயரும் நிலை உள்ளது. ஏ.சி-யுடன் கூடிய உணவகங்கள் விலைகள் அதிகப்படியாக உயரும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கட சுப்பு, 'ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் உணவுகளின் விலை கடுமையாக உயரும். எனவே, மத்திய அரசு இதுகுறித்து கருத்தில்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக மே-30ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு, ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து, தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.விகடன்

ஜார்கண்ட் .. மூன்று முஸ்லிம்கள் கொலை ...வீண் சந்தேகத்தில் அடித்தே கொன்ற கிராம மிருகங்கள் / மக்கள்!

Mohammed Naeem, an animal dealer and resident of Phulpal village in East Singhbhum, was passing through Sobhapur in Saraikela-Khushwahan district in a truck with three companions, Sajad Saju, Siraj and Alim on May 18. The people of the neighbouring Rajnagar village, who came to Sobhapur in search of child-kidnappers, attacked and killed Naeem and his three companies.
நாட்டையே அதிர வைத்த புகைப்படம்:மிருகங்களிடம் கெஞ்சிய மனிதாபிமானம்!
தலையில் பலத்த காயத்துடன், உடலின் பாதியளவுக்கு இரத்தம் தோய்ந்த நிலையில், ஒருவர் தனது உயிர்பிரியும் கடைசி நிமிடங்களில், தன்னைத் தாக்குபவர்களிடம் கையெடுத்து வணங்கி, உயிருக்காக கெஞ்சும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் மூன்று குழந்தைகளின் தகப்பனான முகமது நயீம் என்பவர் ஆவார். மனதை உலுக்கும் அந்தக் கடைசி நிமிடங்களில், தான் செய்யாத குற்றத்திற்காக கொல்லப்படுவதை எண்ணி நிச்சயம் வருந்தியிருப்பார் அவர். ஆம், உண்மையில் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை.

எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மனதில் ஏற்றுகொள்ளவில்லை?

Govi Lenin : பிடுங்குற ஆணியெல்லாம் தேவையில்லாத ஆணிதான் என்பதுபோல, வீசுகிற பந்துகளெல்லாம் நோ பால்தான் என்று, கிரீஸூக்கு வெளியே வந்து விளாசுகிறார் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு. திராவிட இயக்கம் என்ற பெயரில் அ.தி.மு.க.வையும் சேர்த்துக்கொண்டு, அதன் தவறுகளை தி.மு.க.வின் கணக்கில் சேர்த்து வசைபாடும் ‘அறிவுஜீவி’களின் பந்துகள்தான், க.திருநாவுக்கரசின் மட்டையால், நக்கீரன் இதழின் திராவிட ஆட்சி 50 பற்றிய தொடர் கட்டுரையில் விளாசப்பட்டுள்ளன.
”அ.இ.அ.தி.மு.க. கொடியில் உள்ள கருப்பு, சிவப்பு, அண்ணா என்கிற புற அடையாளங்கள் திராவிட இயக்கம் எனும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
அ.இ.அ.தி.மு.க.வின் சாதனைகளாக சொல்லப்படுவதைக் கீழ்க்காணும்படி வரிசைப் படுத்தலாம். (1) 69 சதவிகித இட ஒதுக்கீடு (2) தமிழில் பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது, (3) கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வந்த திட்டம் (4) முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் (5) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
இச்சாதனைகள் எல்லாம் அக்கட்சி சிந்தித்து செயல்பட்ட கொள்கை வயப்பட்ட சாதனைகள் இல்லை/

ஞாயிறு, 21 மே, 2017

டொனல்ட் ட்ரம்ப் சவுதி வருகை! ரஷ்யாவை எதிர்க்க முடியவில்லை, ஈரானை ம்ஹூம் , சிரியா ம்ஹூம் வடகொரியா அய்யோ அய்யோ..

stanley.rajan. உலகிலே இப்பொழுது பரிதாபமான நபர் டிரம்ப், அவர் நினைத்தபடி ஒன்றுமே நடக்கவில்லை
வடகொரியாவினை தாக்க அமெரிக்காவால் முடியவில்லை, பலவகை சிக்கல்கள், அடித்துவிடலாம் ஆனால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கலாம் என்பதால் எல்லோருக்கும் தயக்கம்
வடகொரியாவினை பற்றி அமெரிக்காவிற்கு கிடைத்த அறிக்கைகள் அப்படி என்கின்றார்கள், யுத்தம் தொடங்கினால் அமெரிக்கா பெரும் விளைவினை சந்திக்கலாம் எனும் எச்சரிக்கை அதில் இருந்தது..
அமெரிக்கா பின்வாங்கியது பெரும் அவமானம்தான், என்ன செய்ய? சொல்லமுடியாத அவமானம் அது. டிரம்ப் கையினை பிசைந்து நிற்கும் நேரம்
சரி கெத்தாக வெளிநாடு செல்லலாம் என்றால் பிரிட்டன் வரவேண்டாம் என்றது, பல நாடுகள் அழைக்கவே இல்லை என்ன செய்யலாம் என யோசித்தார்
அவர்களின அடிமை நாடுகளில் ஒன்றான சவுதி அழைத்திருக்கின்றது,

ஐ.டி துறை வேலை பறிப்புக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம் !

ஐ.டி துறையில் வேலை பறிப்பு என்பது தமிழகத்தின் பிரச்சனை மட்டுமில்லை, பூனாவில், கொல்கத்தாவில், பெங்களூருவில் என்று இந்தியா முழுவதும் 37 லட்சம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை.
விப்ரோ, காக்னிசன்ட் (சி.டி.எஸ்) நிறுவனங்களில் நடந்து வரும் ஆட்குறைப்பை கண்டித்தும், ஐ.டி ஊழியர்களை பு.ஜ.தொ.மு-வில் இணைய அறைகூவியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் மே 18-ம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்களும், பு.ஜ.தொ.மு வாகன ஓட்டுனர்கள் சங்க உறுப்பினர்களும் தவிர பல்வேறு ஐ.டி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகம் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.

சினிமா வீடு: கானாடுகாத்தான் அரண்மனை – கட்டிடக் கலையின் அடையாளச் சின்னம்

சினிமாவில் சில பிரமாண்டமான வீடுகளை பார்த்திருப்போம். பாட்டி, தாத்தா,பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா எனக் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த வீடுகளைப் பல திரைப்படங்களில் கண்டிருப்போம். அந்த வீடு தான் கானாடு காத்தான் மாளிகை. காரைக்குடி செட்டியார்களின் கலையம்சத்துடன் கோட்டைபோல் கட்டப்பட்ட வீடு தான் அது.
இந்த மாளிகை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ளது. ராஜா அண்ணாமலை செட்டியாரால் இந்த வீடு வடிவமைக்கப்பட்டது. கானாடுகாத்தான் மட்டுமல்லாது அருகிலுள்ள கோட்டையூர், காரைக்குடி, செட்டிநாடு ஆகிய ஊர்களிலும் இதே போன்ற பிரம்மாண்டமான வீடுகளைப் பார்க்கலாம். செட்டிநாடு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை.

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா ராகுல் அஞ்சலி!

மின்னம்பலம் :புது டில்லியில் ராஜீவ் காந்தி நினைவிடமான வீர் பூமியில்,
ராஜீவ் காந்தியின் 26-வது நினைவு தினத்தையொட்டி இன்று மே 21ஆம் தேதி அவரது மனைவியும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி , பிரியங்கா மற்றும் ராபர்ட் வதோரா,
காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் ராஜீவ் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டாலின் : கட்டணக்கொள்ளை: பெற்றோர்களை கசக்கி பிழியும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:

தி.மு.க. ஆட்சியில் கொண்ட வரப்பட்ட “தமிழ்நாடு பள்ளிகள் (கல்விக்கட்டண வசூல் முறைப்படுத்தும்) சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி, பெற்றோரிடம் நடைபெறும் “கல்விக்கட்டணக் கொள்ளையை” உடனே தடுக்கும்படி அதிமுக அரசை கேட்டுக் கொள்வதுடன், முதன்மைக் கல்வி அதிகாரிகள் இதுகுறித்து உரிய ஆய்வுகளை நடத்தி, இந்த கல்வியாண்டில் பெற்றோர்களை கசக்கி பிழியும் தனியார் பள்ளிகளை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பள்ளிகளில் மனம் போன போக்கில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் பெற்றோருக்கு பெரும் சுமையாக இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது “தமிழ்நாடு பள்ளிகள் (கல்விக்கட்டண வசூல் முறைப்படுத்தும்) சட்டத்தை” 7.12.2009 அன்று கொண்டுவந்து நிறைவேற்றினார்.

மெரீனா ... திருமுருகன் காந்தி, வேல்முருகன், இயக்குனர் கவுதமன் கைது

மெரினாவில் தடையை மீறி பேரணி நடத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு மெரினா கடற்கரையில் கூட்டம் நடத்தவோ, நிகழ்ச்சிகள் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இலங்கை இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி மெரினாவில் அனுசரிக்கப்படும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்தார்.
இதனால் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு தடுப்புக் காவல் மையம் அமைக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். தடுப்புக் காவல்கள் அமைக்கப்பட்டு, கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள 9 வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

லெஸ்பியன் .. பெண்களின் கதையை பெண்கள் கூறும் .. பிலோ ஹேர் மவுத் Below her mouth


Karthikeyan Fastura : இரண்டு பெண்களுக்கு நடுவில் வரும் காதலை, காமத்தை,
மன சஞ்சலத்தை பற்றிய, உயிர்ப்போடு எடுக்கப்பட்ட ஒரு கனடிய திரைப்படம் Below her mouth. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வருகிறது.
ஒரு Porn படத்தின் அளவுக்கு எக்கச்சக்க பெண்களின் உறவுக்காட்சிகள் இருந்தபோதும் இதில் வரும் வசனங்கள், காட்சி அமைப்புகள் ரெம்பவும் உண்மையாக உயிரோட்டமாக இருக்கிறது. எங்கேயும் உடல்வேட்கையை தூண்டும் அளவில் இல்லவே இல்லை.
யாருடா இவன் இவ்வளவு துல்லியமாக நேர்த்தியாக பெண்களை காட்டியது என்று நினைத்துக்கொண்டே பார்த்தேன். படம் முடிந்தபிறகு தான் தெரிந்தது இது முழுக்க முழுக்க பெண்களால் பெண்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். இயக்குனர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என்று எல்லோருமே பெண்கள் என்று. ஒப்புக்கு ஒரு ஆண் கேரக்டர் வருகிறது அவ்வளவே.
இது மாதிரியான படங்கள் இன்னும் பக்குவத்தை கொடுக்கவல்லது. பெண்களின் வெளியை பெண்களே தான் பேச வேண்டும் என்பதை அழுத்தி சொல்கிறது.

ஜூலியன் அசாஞ்சே மீதான் பாலியல் குற்றச்சாட்டை சுவீடன் கைவிட்டது


லண்டன், ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சே நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். | பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிட்டிருக்கலாம் ஆனால் இது குற்றமே செய்யாமல் 7 ஆண்டுகள் கைதியாக வாழ்ந்ததை என் நினைவிலிருந்து அழித்து விட முடியாது என்று விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வேதனையுடன் தெரிவித்துள்ளார். இனிமேல்தான் தன்னுடைய எதிரகாலம் குறித்த ‘முறையான போர்’ தொடங்கவுள்ளது என்றார் அசாஞ்சே. ஸ்வீடன் விசாரணையைக் கைவிட்ட செய்திக்குப் பிறகு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரக பால்கனிக்கு வந்து மகிழ்ச்சி தெரிவித்த அசாஞ்சே இன்னும் விவகாரம் முழுதும் முடிந்து விடவில்லை என்றார். ஆனால் தூதரகத்தை விட்டு தான் வெளியே வருவது பற்றி அசாஞ்சே ஒன்றும் கூறவில்லை. ஆனால் இவர் கட்டிடத்தை விட்டு கீழே இறங்கினால் பிரிட்டன் அதிகாரிகள் அசாஞ்சேயை கைது செய்ய காத்திருக்கின்றனர் என்பதே உண்மை நிலவரம்.

பாலு மகேந்திரா ஒரு படிப்பினை ,,,ஒருத்தி! இன்னொருத்தி! வேறொருத்தி!


அந்த நண்பரின் பெயர் முருகேஷ்.  ‘நல்லதோர் வீணை ஜனனம் இன்று..’ என இயக்குநர் பாலுமகேந்திரா குறித்து கவிதை எழுதி நமக்கு அனுப்பியிருந்தார். பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா பிறந்தது மே 20,1939 என்று குறிப்பிட்டிருந்த அவர்,  ‘பாலு மகேந்திரா குறித்து எழுதுங்களேன்..‘ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ‘நல்லதும் கெட்டதும் கலந்தது அவரது வாழ்க்கை. எதை எழுதுவது?’ என்று கேட்டோம். “இரண்டையுமே எழுதுங்கள்.  தொழில் ரீதியாக சினிமாக்காரர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. சினிமாவில் பலருக்கும்அவர் ஒரு ஆசான். தனிப்பட்ட வாழ்க்கையிலோ?” என்று பெருமூச்சு விட்டவர், “அதையும் எழுதுங்கள். அவரைப் போன்ற பலருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும்.” என்றார்.

வடகொரியா மட்டுமல்ல தென் கொரியாவும் நரகம்தான்? வெளியேற துடிக்கும் மக்கள்?

தென் கொரியா: ந‌ர‌க‌த்தில் இருந்து வெளியேறக் காத்திருக்கும் இளைஞ‌ர்க‌ள் Young South Koreans call their country ‘hell’ and look for ways out. (The Washington Post, January31, 2016) வ‌ட‌ கொரியாவை ப‌ற்றி மிக‌ மோச‌மாக‌ க‌ற்ப‌னை செய்து க‌ட்டுக்க‌தைக‌ளை ப‌ர‌ப்பும் விஷ‌மிக‌ள், தென் கொரியா ப‌ற்றி ஆஹா ஓஹோ என்று புக‌ழ்ந்து பேசுவார்க‌ள். ஆனால் தென் கொரிய‌ ம‌க்க‌ள், குறிப்பாக‌ இளைஞ‌ர்க‌ள், த‌ம‌து நாட்டை ந‌ர‌க‌ம் என்று வ‌ர்ணிக்கிறார்க‌ள். ப‌ண‌க்கார‌ குடும்பங்க‌ளை சேர்ந்த‌ பிள்ளைக‌ள் ம‌ட்டுமே, உய‌ர் க‌ல்வி க‌ற்று உய‌ர் ப‌த‌வி வ‌கிக்கும் வாய்ப்புக‌ளை பெறுகிறார்க‌ள். அந்த‌ப் பிள்ளைக‌ள் த‌ர‌மான‌ க‌ல்விக்கு செல‌விடும் அள‌விற்கு வ‌ச‌தியாக‌ உள்ள‌ன‌ர். ப‌ண‌ வ‌ச‌தியில்லாத‌ குடும்ப‌ங்க‌ளை சேர்ந்த‌ பிள்ளைக‌ள் அதையெல்லாம் நினைத்தும் பார்க்க‌ முடியாது. "சொகுசான‌" அலுவ‌ல‌க‌ வேலை செய்யும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் கூட‌ க‌டும் வேலைப் ப‌ளுவினால் அவ‌திப் ப‌டுகின்ற‌ன‌ர். அதிக‌ நேர‌ம் வேலை செய்ய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். ச‌ம்ப‌ள‌ம் கூட‌ ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை.
உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ பிரான்ட் பொருட்க‌ளை உற்ப‌த்தி செய்யும் சாம்சுங், ஹையுன்டாய் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளிலும் ப‌ணிப் பாதுகாப்பு கிடைப்ப‌தில்லை. விரும்பிய‌ நேர‌ம் வேலையில் இருந்து தூக்கி வீச‌ப் ப‌ட‌லாம். முதுமை அடைந்தால் முன்கூட்டியே ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ப் ப‌ட‌லாம்.

ராஜீவ் காந்தி .... 26 ஆண்டுகள்.. ஆண்டுகள் கடந்து போனாலும் ஆறாத வலி!

stanley.rajan.: ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், பைபிளின் சில ஆகமங்களும் சொன்ன உண்மை இது.
இந்த உண்மைக்கு பெரும் உதாரணமாக அமைந்தது ராஜிவ்காந்தியின் வாழ்க்கை,
பெரும் சொத்துக்களும், பாரம்பரியமும், அரசியலின் உச்சமும், கல்வியும், செல்வமும்,பேரழகும் ஒருங்கே அமைந்த அந்த காஷ்மீரிய பண்டிட் குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர் அவர்.
16 வயதில் லண்டனுக்கு சென்றார் ராஜிவ், தாத்தா போலவே ஐரோப்பியனாகவே வாழ்ந்தார், படித்தார் என்பதைவிட வாழ்வை கொண்டாடினார் என்பது சரி, விமானம் மீது ஒரு ஈர்ப்பு, விமானியாகவும் மாறினார்.
இந்திய சூழ்நிலை வேறு, இரும்பு பெண்ணாக இந்தியாவை கலக்கி கொண்டிருந்தார் இந்திரா, அரசியல் எதிரிகளை ஓடவைப்பது, உட்கட்சியை கட்டுக்குள் வைத்திருப்பது என அவரிடம் வியக்கதக்க அம்சங்கள் உண்டு, உள்நாட்டினை விடுங்கள், சர்வதேசத்தில் இந்திராவின் இந்தியா மிக திறமையாக கையாண்டு பெற்ற வெற்றிகளை இனி காலமும் இந்தியா பெறுமா? என்றால் தமிழகத்தில் சாராயம் ஒழிக்கபடுவதனை போல பெரும் சவால் மிக்கது

கக்கூஸ் படத்திற்கு கிடைத்த முதல் விருது...!

Divya Bharathi : கேரளாவை மையம் கொண்டு இயங்கி வரும் பல்வேறு முற்போக்கு அமைப்புகள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் Youth spring film festivel'யை நடத்தி வருகிறது. 5'வது ஆண்டாக கோழிகோட்டில் நடந்த இந்தாண்டு திரைப்பட விழாவில் நமது கக்கூஸ் ஆவணப்படம் சிறந்த ஆவணப்படமாக தேர்வாகியுள்ளது. கக்கூஸ் படத்தில் என்னுடன் இணைந்து மாபெரும் உழைப்பை செலுத்திய கலைஞர்கள் Palani Kumar Kala Gopal M.k. Pagalavan Prabahar Vedamanickam ThanikkodiThalir Thanikkodi போன்ற அற்புதமான தோழர்கள் ஒவ்வொருவருடனும் இந்த திரை இயக்கத்தில் எங்களோடு பயணித்து வரும் அனைவருடனும் இந்த விருதை பகிர்ந்து கொள்கிறேன்.

கர்நாடகா ரெட்டிகளின் 35000 கோடி ஊழல் குழி தோண்டி புதைக்கப்பட்டது

Rs 35,000 Crore Illegal Mining Cases Being Buried Quietly In Karnataka
trollmafia2/ முன்னாள் கர்நாடக பிஜேபி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் 35000 கோடி ரூபாய் சட்ட விரோத சுரங்க ஊழல் குழி தோண்டி புதைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதில் சிறிய சதவிகிதம் கூட ஊழல் வழக்குகள் விசாரணை முறையாக நடைபெறுவதில்லை. மற்ற கட்சிகளை, மற்ற அரசியல்வாதிகளை பிஜேபியின் வழிக்கு கொண்டு வருவதற்கு மட்டுமே CBI மற்றும் வருமான வரித்துறையினர் இந்த ஆட்சியில் பயன்படுத்தப்படுகின்றனர்.
ரெட்டி சகோதரர்கள் சுஷ்மா, ஜேட்லி மற்றும் வெங்கய்யா நாயுடு ஆகியோரின் உதவியோடு இந்த வழக்கை நிர்மூலம் ஆக்கிவிட்டனர். இந்தியாவில் ஊழலை ஒழிக்க கடவுளின் மறு உருவமாக வந்த மோடிக்கும் இந்த திருட்டு வேலையில் பங்கு இருக்கிறதா என்று பக்தர்கள் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்

ஜெயலலிதா ,நடராஜன், ராஜீவ் காந்தி. .. எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக் கொண்டார்! சசிகலா - 41

விகடன் .எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி: :.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், முன்பு போல ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. அதனால், எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடிக்க ஜெயலலிதா ஆசைப்பட்டார். அதற்கு நடராசன் தூபம் போட்டார். ஆனால் அந்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போயின. ஆனாலும் டெல்லியின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கான ஏற்பாடுகளை அருகில் இருந்தவர்களே செய்ய ஆரம்பித்தார்கள். ‘முதல்வர் ஆசை’ நிறைவேறாத நிலையில் கேபினெட்டுக்குள்ளாவது கால் பதித்துவிட காய்கள் நகர்த்தப்பட்டன. எப்படியாவது ஜெயலலிதா துணை முதல்வர் ஆகிவிட வேண்டும் என நினைத்தார் நடராசன். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தொடர்ந்து இதை வலியுறுத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ‘‘வேலைப்பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. உங்களுக்கு உறுதுணையாக ஒருவரை வைத்துக் கொள்ளுங்கள்’’ என கவர்னர் குரானா மூலம் மறைமுகமாக    எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார் ராஜீவ் காந்தி.

கொடநாடு... ஜெயலலிதாவின் பைல்களால் வசமாக சிக்கி கொண்ட பன்னீர்செல்வம் ! அம்மா கையால் அடின்னா சும்மாவா?

மர்மங்கள் நிறைந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் போக்கைத் தொடர்ந்து வெளியிடும் நக்கீரனின் மே 11-13 இதழில் "விசாரணை வளையத்தில்  ஓ.பி.எஸ். மகன்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.கொடநாட்டில் பணியாற்றி பின்னர் சசிகலாவால் விரட்டப்பட்ட டிரைவர் கனகராஜ், அதன்பிறகு ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.வான ஆறுகுட்டியின் டிரைவராக வேலை செய்தார். ஆறுகுட்டி மூலம் ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத்துக்கு நெருக்கமானார். கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கனகராஜ், விபத்தில் பலியான நிலையில்... ஆறுக்குட்டியையும் ரவீந்திரநாத்தையும் விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளதாக எழுதியிருந்தோம்.மே மாதம் 16ஆம் தேதி ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வை ஆத்தூர் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். மாலை 6.20 மணிக்கு ஆஜரான ஆறுக்குட்டியிடம் டி.எஸ்.பி. பொன்.கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர்கள் கேசவன், செல்வராஜ் ஆகியோர் ஒருமணி நேரத்திற்கு மேல் விசாரித்தனர்.

7 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் ...காங்கேஷ் ஆனந்தா தீர்த்தபாத சுவாமிகள் ,,, பன்மணி ஆச்சிரமம்

திருவனந்தபுரம்: கேரளாவில் எர்ணாகுளம் அருகே கோலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஹரி(54). இவர் கொல்லம் அருகே பன்மனையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆசிரமத்தில் சாமியாராக உள்ளார். ஆசிரமத்தில் சேர்ந்த பின்னர் தன் பெயரை கங்கேஷ் ஆனந்த தீர்த்தபாத சுவாமி என மாற்றிக்கொண்டார். பன்மனை ஆசிரமத்தின் கிளை திருவனந்தபுரம் பேட்டையில் உள்ளது. பேட்டையில் உள்ள ஆசிரமத்தில் சாமியார் கங்கேஷ், கடந்த பல வருடங்களாக
தங்கியிருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில் பேட்டை பகுதியில் உள்ள பெண்ணின் கணவர் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இவர்களுக்கு 23 வயதான ஒரு மகளும், 18 வயதான ஒரு மகனும் உள்ளனர். மகள் சட்ட படிப்பு படித்து வருகிறார். இந்த வீட்டிற்கு சாமியார் கங்கேஷ் கடந்த 7 வருடமாக சென்று பெண்ணின் கணவர் நோய் குணமாக பூஜைகள் செய்து வருகிறார். மாதத்தில் பாதி நாட்களுக்கு சாமியார் இந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.