செவ்வாய், 6 டிசம்பர், 2016

ஜெயலலிதாவின் இரத்த உறவினர் எவரும் அனுமதிக்கப்படவில்லை .. ஜெயாவால் விலக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் போயஸ் கார்டனில் !

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை யாரை எல்லாம் ஒதுக்கி வைத்தாரோ அவர்கள் அனைவரும் இன்று
ஜெயலலிதா அருகிலேயே நின்று கொண்டுள்ளனர். ரத்த சொந்தங்கள் யாரும் அருகில் நிற்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்த சசிகலாவும், இளவரசியும் சிறிது நேரத்தில் சேர் போட்டு அமர்ந்தனர். ஜெயலலிதாவின் வாய் லேசாக திறந்து கொண்டிருக்கவே பின்னர் நாடிக்கட்டு கட்டப்பட்டது. ஓபிஎஸ், வெங்கையா நாயுடு அதிமுக
எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், அனைவரும் படியில் வரிசையாக அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் தங்கள் தலைவியின் மரணத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்


சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு இதயம் செயலிழப்பு ஏற்பட்டதால் காலமானார். அவரது
உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
அப்போது போயஸ் தோட்ட இல்ல வாசலுக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை. இறுதி சடங்குகள் செய்யப்படும் போதும் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி


உடல்நலக் குறைவால் சென்னை
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 05.12.2016 திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். அவரது உடல் போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு நடத்தப்பட்டு, பின்னர் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹால் கொண்டு வரப்பட்டது. அங்கு அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் இன்று மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது

விகடன்: ஜெயலலிதாவின் மறைவு உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது!

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!
அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

வடிவேல் ; அவர் சாகவில்லை. அவரை சந்திக்க ஆசைப்பட்டேன் .. என்னை யாரும் உள்ளே விடவில்லை!

சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானார். அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று மிக உருக்கமாக தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார் நகைச் சுவை நடிகர் வடிவேலு.
இதுகுறித்து நடிகர் வடிவேலுவின் இரங்கல் செய்தி:
ஜெயலலிதாவின் மறைவு மிக துயரமாக இருக்கிறது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர் என்னுடைய தீவிர ரசிகர் என்று நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் என் காமிடியை நிறைய ரசிப்பார் என்றும் கேள்வி பட்டிருக்கேன். மிகத் துணிச்சலானவர் அவர். யாருக்கும் பயப்பட மாட்டார். மனதில் படுவதை சொல்லக் கூடியவர். என்னைப் பொருத்தவரை அவர்கள் காலமாகவில்லை. அவரின் பெயரை சொல்லி நிறைய பேர் என்னென்னவோ செய்தார்கள். நான் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று நிறைய ஆசைப்பட்டேன். என்னை யாருமே உள்ளே விடவில்லை. ஆனால், அவர்களால்தான் எனக்கு தொழில் போனது, பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன். முதல்வரைச் சுற்றி உள்ளவர்கள்தான் என்னை நடிக்க விடவில்லை என்பதை நான் கேள்விப்பட்டேன்.

மம்தா பானர்ஜி தமிழில் இரங்கல் செய்தி : வலுவான, தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான் அம்மா.

தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான் அம்மா என்று ஜெயலலிதாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழில் இரங்கல் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "வலுவான, தைரியமான, திறமையான, மக்களின் நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான் அம்மா. எப்போதும் மக்கள் இதயத்தில்.
இது மிக பெரிய இழப்பு. எனக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. தைரியம் மற்றும் பெருந்தன்மையுடன், இந்த பெரிய இழப்பை எதிர்கொள்ள தமிழக மக்களையும், அதிமுக தொண்டர்களையும் வேண்டுகிறேன்" என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.. கலைஞர் இரங்கல் செய்தி !

சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று திமுக தலைவர் கலைஞர்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
கலைஞர்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
திரைப்பட உலகில் கதாநாயகியாக இடம்பெற்று, 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து, புகழ் எய்தி, அதன் பின்னர் எனது அருமை நண்பர் புரட்சி நடிகர் எம் ஜி ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டு - எம் ஜி ஆர் மறைவுக்குப் பிறகு - அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக விளங்கி வந்ததோடு, தமிழக முதலமைச்சராகவும் விளங்கிய‌ ஜெயலலிதா திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மன்சூர் அலிகான் :மோடி ஒண்ணும் கக்கனோ காமராஜரோ அல்ல .. சொந்த பொண்டாட்டியையே இல்லைன்னு பொய் சொன்ன சிகாமணிதான்



மோடி ஒன்றும் கக்கனோ அல்லது காமராஜரோ அல்ல . கட்டிய மானைவியை ஒதுக்கி வைத்துவிட்டு கல்யாணமே கட்டவில்லை என்று பொய் சொன்ன சிகாமணிதான் இந்த மோடி . இதுவே நான் சொல்லி இருந்தால் என்னை தூக்கி உள்ளே வைத்திருப்பார்கள் மறுக்க முடியுமா?
ஏழைகள் நடுத்தர மக்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் , சிறு வியாபாரிகள் எல்லாம் இன்னிக்கு நடுத்தெருவில் நிற்கிறார்கள் . மோடி செய்தது மாபெரும் தவறு .
நான் உண்மையை பேசினால் சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசுகிறேன் என்கிறார்கள்.
உற்பத்தி செய்வதே மிகவும் சிரமம் .உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாமல் ஏழை மக்கள் படும் துயரம் உங்களுக்கெல்லாம் தெரியல்லையா? அவனவன் செத்து கொண்டிருக்கிரான்.
நாடா புயல் கூட மக்கள் ரொம்ப நொந்து போயி இருக்கிறாங்கன்னுட்ட்டு ஒதிங்கி போயிட்டு . அதுக்குள்ளே கருணை கூட மோடிக்கி இல்லை.
கருப்புப்பணம் என்கிறீங்க .ஆயிரம் ஆயிரம் கோடி வைத்திருக்கிறவன் எவனாவது மாட்டிக்கிட்டானா? உங்களுக்கு ஒட்டு போட்டவனுக்கு முதுகில குத்தி சாகடிச்சுட்டீங்க.

தியேட்டர்கள் எல்லாம் காலியாச்சு இனி எவனும் படம் எடுக்க வரமாட்டான் . இதுகுதானா உங்களை மக்கள் தெரிவு செய்ஞ்சாங்க?
ஆமானப்பட்ட மம்தா பானர்ஜியையே வானத்தில ஒருமணிநேரம் சுத்த வைச்சு கொல்லப்பாத்தாங்க.
நீ ஏன் வெளிநாட்டுக்கு போய் சீனாக்காரன் வா அமேரிக்கா வான்னு ஒவ்வொருத்தனா கூப்பிட்டிகிட்டு இருக்கே? இங்க உள்ள தொழில் எல்லாம் அவனவனுக்கு தாரை வாத்து கொண்டே போவதேன்? இங்கயே தொழிலை தொடங்கினால் எல்லாரும் இங்கேயே வேலை கொடுக்கலாம்ல? பொண்டாட்டி சேர்த்து வச்சிருக்கிற பணத்தை கூட கருப்பு பணம்னு புடின்கினா மக்கள் எங்க போவாங்க?
மோடின்னா கருப்பா சிவப்பான்னு எனக்கு தெரியாது அவருமேல எனக்கு தனிப்பட்ட விரோதம் ஒன்ன்றும் கிடையாது . ஆனா நீங்க நல்லா யோசித்து பாருங்க இந்த ஆள் பதவி ஏற்ற நாளில் இருந்து அழிவு அழிவு அழிவுதான் வேற என்னத்தை பண்ணியிருக்கார்?

கண்ணீர் வெள்ளத்தில் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டுவரப்பட்டது


சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரது வீடான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர்கள், அதிமுக தொண்டர்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு நடுவில் ஊர்ந்து சென்றது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
இதனையடுத்து, அவரது உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவர் வாழ்ந்த வீடான போயஸ் கார்டனுக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்துடன் 8 வாகனங்கள் சென்றன. அவர் உயிருடன் இருக்கும் போது பயன்படுத்தப்பட்ட கான்வாய்கள் இப்போது அவரது உடல் சென்ற வாகனத்திற்கு முன்னால் சென்றன. ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் போயஸ் கார்டன் சென்றடைந்தது ஜெயலலிதாவின் உடல்.

சமூகநீதி காத்த வீராங்கனை ! கி.வீரமணி இரங்கல் :இவ்வாட்சி திராவிடர் ஆட்சியாகவே தொடரவேண்டும்

Image may contain: 1 person , beardதமிழக முதலமைச்சர் - சமூகநீதி காத்த வீராங்கனை செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு வீரவணக்கம்!
-------------------------------
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை
-------------------------------------
சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 74 நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தீவிர சிகிச்சைகள், தலைசிறந்த வெளிநாட்டு டாக்டர்களின் மருத்துவ உதவிகள் எல்லாம் பெற்று, உடல்நலம் தேறி வந்த நிலையில் நேற்று (5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானார் என்ற தகவல் அறிந்து பெரும் துயரத்திற்கு ஆளானோம். திடீரென்று கடந்த 4.12.2016 ஞாயிறு மாலை அவரது உடல்நலனில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து உடனடியாக நவீன மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டும், அவை பயனற்றுப் போனநிலையில் காலமானார் என்பது கோடானுகோடி மக்களின் உள்ளங்களைப் பிளக்கக்கூடிய கொடிய செய்தியாகும்.
எது நடக்கக்கூடாது என்று நாட்டு மக்களும் நாமும் எதிர்பார்த்தோமோ, அது இறுதியில் நடந்தே விட்டது!
சோகமும், துயரமும், துன்பமும் பெருவெள்ளக்காடாய் மக்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது.
இவ்வளவு பெரும்அளவில் விசுவாசத்தினை பெறற்கரிய செல்வமாக தனது தொண்டர்களிடம் பெற்ற ஒரு அரசியல் கட்சித் தலைவரைக் காண்பது அரிதினும் அரிது!

பிடல் காஸ்ட்ரோவை வாழ வைத்த முருங்கை! முதுமை நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை.


Fidel Castro's love for drumsticks and how he sent a friend to south India to study it
அண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல்
காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள், அதன் ஒரு பாகத்தை மட்டுமே சொல்கின்றன.
காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்துவந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு மக்களிடையே காஸ்ட்ரோ உரையாற்றியுள்ளார். அதை அதிசயமான தாவரம் என்று புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், வீடுதோறும் முருங்கை மரத்தை வளர்க்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பெருந்தன்மையானவர் ஜெயலலிதா... மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி


Stalin mourns the death of Jayalalitha
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பெருந்தன்மையான எண்ணம் கொண்டவர் என்று திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் சன் செய்திகளுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், சுனாமி வந்த நேரத்தில் தான் வசனம் எழுதிய திரைப்படங்கள் மூலமாக வந்த நிதியை முதல்வரிடம் கொடுக்கச் சொன்னார் திமுக தலைவர் கலைஞர். நானும் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்தேன். அப்போது என்னிடம் எனது நலன் குறித்து விசாரித்தார் ஜெயலலிதா. கலைஞர் குறித்தும், அப்பா நலமாக உள்ளார என்று  நலன் விசாரித்தார். சில அரசியல் பிரச்சினைகள் குறித்துக் கூட கேட்டார். அது என்னைக் கவர்ந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை அழைத்திருந்தார். அப்போது என்னை 11வது வரிசையில் உட்கார வைத்து விட்டனர். இது சில நாட்களுக்குப் பிரச்சினையாக நீடித்தது.
இதை அறிந்த ஜெயலலிதா, வருத்தப்படுகிறேன். இது நடந்திருக்கக் கூடாது. எனது கவனத்திற்கு வந்திருந்தால் இதை சரி செய்திருப்பேன். நடந்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று கூறியது அவரது பெருந்தன்மையைக் காட்டியது. அவரது உணர்வை, எண்ணங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.  tamiloneindia.com

ஜெ. உடல் இன்று( 6.12.2016 ) மாலை நல்லடக்கம்! ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

 முதல்வர் ஜெயலலிதா( வயது 68) இன்று(5.12.2016) இரவு 11.50 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது. போயஸ்கார்டன் இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அங்கு சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெற்ற பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது. இன்று( 6.12.2016 ) செவ்வாய்க்கிழமை மாலை முதல்வரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.நக்கீரன்.in

மறைந்த தமிழக முதல்வரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் கல்லறைக்கு அருகாமையிலேயே அடக்கம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன !

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம் ..

O.Pannerselvam to become CM of Tamilnadu for the 3rd time ஓ.பன்னீர்செல்வம் 3வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
1951ம் ஆண்டு பிறந்த ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம் என்று அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசி ஆவார். தற்போது நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள பன்னீர் செல்வம். முன்பு வருவாய்த்துறை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் சற்று நேரத்தில் பதவியேற்பு!

சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்க உள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.t இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்க உள்ளார்.
அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்க வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநர் மாளிகையில் குவிந்துள்ளனர்  tamiloneindia.com

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெறும்

போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெ. இறுதிச்சடங்கு! முதல்வர் ஜெயலலிதா( வயது 68) இன்று(5.12.2016) இரவு 11.50 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது. இதனால் அவரது உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. முன்னதாக போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதற்காக ஜெயலலிதா வழக்கமாக பயன்படுத்தும் கார் அப்பல்லோ வாசலில் தயார் நிலையில் உள்ளது. ஜெ. வாகனத்திற்கு முன் செல்லும் பைலட் கார் மற்றும் சில சொகுசு கார்களும் தயார் நிலையில் உள்ளன. நக்கீரன்.இன்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜே.ஜெயலலிதா காலமானார் !

கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது: கண்ணீரில் மிதக்கிறது தமிழகம் ;இணையதள செய்திப் பிரிவு முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.>மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, அங்கிருந்து ராஜாஜி ஹாலில் செவ்வாய்க்கிழமை மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

திங்கள், 5 டிசம்பர், 2016

அரசியல் வாரிசு ஆகிறார் விந்தியா…! அதிர்ச்சி.! சசி யோசனை..?

இந்த செய்தி கேள்விப் பட்டபோது பயங்கர  அதிர்ச்சியாக இருந்தது..! சாத்தியமே இல்லை என்றே நினைத்தார்கள் சீனியர் நிர்வாகிகள்.
இந்த செய்தி கேள்விப் பட்டபோது பயங்கர அதிர்ச்சியாக இருந்தது..! சாத்தியமே இல்லை என்றே நினைத்தார்கள் சீனியர் நிர்வாகிகள். எப்படிங்க என்றோம்..ஆமாம்..முதல்வரின் குட் புக்கில் இருந்தவர் நடிகை விந்தியா. சசிகலாவிற்கும் நடிகை விந்தியாவின் பணிவு, அடக்கம்,விசுவாசம் அனைத்தும் பிடிக்கும்..! அதேபோல பிரச்சார மேடைகளில், முதல்வருக்கு அடுத்த படியாக கூட்டத்தைக் கூட்டும் சக்தி விந்தியாவிற்கு மட்டுமே உண்டு..! எழுதி வைத்து பேசும் பழக்கமும் விந்தியாவிற்கு இல்லை. அதே போல் ஆங்கிலத் திறன்..சாதுர்யம் பொது அறிவு இப்படி எல்லா விஷயத்திலும் மேன் பட்டவர். சசிகலாவின் சில விஷயங்களுக்கு அனுசரித்துப் போகும் தன்மை கொண்டவர்..! இப்படி ஒரு கருத்தும் சசி டீமால் பரிசீலிக்கப் பட்டதாக தகவல் கசிகிறது..! அதே நேரம் பன்னீரையும், எடப்பாடியையும் சமாளிப்பது எப்படி என்றும் யோசிக்கப் பட்டதாம். இம்த விசயம் லீக் ஆனா போது அதிர்ந்து போனது அரசியல் வட்டாரம்..! ஒருவேளை, அரசியல்சிம்மாசனம் விந்தியாவைத் தேடி வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை..! பார்க்கலாம் .. liveday.in

பன்னீர்செல்வம் முதல்வர்.. சசிகலா பொதுசெயலாளர் .. அதிமுக பொதுகுழு தீர்மானம் !

அதிமுக எம் எல் ஏக்கள் யாரும் பஜகாவினருடன் பேசகூடாது .எந்த  பாஜகவினராவது பேசுவதற்கு  அணுகினால் உடனே அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. மேலும் எல்லா அதிமுக எம் எல் ஏக்களையும் கடும் கண்காணிப்பு வளையத்துக்குள் திவாகரன் ,நடராஜன்(சசிகலா) போன்றோர் வைத்திருப்பதாக தெரியவருகிறது .ஒரு மாநிலத்தின் முதல்வர் மரண அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் Indian constutional law சில அறிவுறுத்தல்கள் இருக்கின்றன.
மேலும் இது பற்றிய வேறு சில தகவல்கள்: இது சட்டம் ஒழுங்கு சம்மந்த பட்ட விஷயம்…ஒரு மாநில முதல்வர் இறப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அந்த மாநில ஆளுனர் அதை உறுதி செய்ய வேண்டும்.
பின் அந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும் . பிரதமர் அந்த தகவலை குடியரசு தலைவருக்கு தெரியப்படுத்துவர்.
மத்திய அரசின் வழிகாட்டுதலோடு புதிய பொறுப்பு முதல்வரை தேர்ந்தடுத்து, மாநில சட்டம் ஒழுங்கை உறுதி செய்துக்கொண்ட பிறகு மத்திய அரசின் அனுமதியோடு நடு இரவு அல்லது வெடியற்காலை ஆளுநர் முறையாக தகவலை மக்களுக்கும் ஊடகத்திற்கும் சொல்லுவார்.
இது தான் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் மறைவின் பொழுது நடந்தது. இதே விஷயத்தை தான் தற்பொழுதும் கடைபிடிப்பார்கள். முகநூல் பதிவு

உங்கள் ஊகத்துக்கு நெறைய வேலை .. கடந்த இரண்டு நாட்கள் அரசியல் (Time Line )

கடந்த இரண்டு நாட்கள் அரசியல் (Time Line ) Vaiko இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆளுநரை சந்திக்கிறார் .. Apollo Hospitals, Chennai cardiac arrest என்று திடுமென சொல்கிறது ..
பிரதமர் மோடியின் நெருங்கிய சகாக்கள் மத்திய அமைச்சர்கள் வெங்கையா மற்றும் ஜே.பி நாடா அதீத ஆர்வத்தை தமிழக அரசியலில் காட்டுகிறார்கள்..

Rangaraj Pandey வைகோ வுடன் பேட்டி Thanthi TV ( ராஜபக்சே பேட்டி எடுத்ததற்கு #mdmk கட்சி தாக்கிய அதே TV) Dr. Subramanian Swamy நாள்இல்லை 6 Pm என்று நேரம் குறிக்கிறார் ...
சுவாமி குறித்து கொடுத்த ஏறக்குறைய அதே நேரத்தில் Rangaraj Pandey 5:40 PM மரண செய்தியை அறிவிக்கிறார் ..
அதிமுகவின் prime two power centers OPS மற்றும் எடப்பாடி இல்லாமல் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது ..
 Jayalalitha Absence = Modi + Vaiko + Thanthi Tv + Tn Governor + OPS + edapadi + vengaiya nayudu + Nada மற்றவை உங்கள் ஊகத்திற்கு ...
 முகநூல் பதிவு  சவேரா

அதிமுகவின் பொதுச் செயலாளராகிறார் சசிகலா!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை மிக மிக மோசமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து ஆட்சி அதிகாரம் மற்றும் அதிமுக நிர்வாகத்தில் அடுத்த கட்ட மாறுதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
இன்று காலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், தலைமைக்கு கட்டுப்பட்டு, ஒற்றுமையாகச் செயல்படுவோம் என முடிவு எடுத்தனர். அதிமுகவைப் பொறுத்தவரை இத்தனை காலமும் தலைமை என்றால் ஜெயலலிதா மட்டும்தான். வேறு யாரும் கிடையாது. இப்போது அந்தத் தலைமை மிக மிக மோசமான நிலையில்.
அவருடைய இடத்தில் இப்போது பெயர் குறிப்பிடாமல் ஒரு பெண்மணியை முன்னிறுத்தியுள்ளார்கள். இந்த பெண்மணியை அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றுக் கொண்டு, அவரது உத்தரவுக்கு கட்டுப்படுவதாக வாக்கும் அளித்துள்ளனர்.

பன்னீர்செல்வம் எம் எல் ஏக்களிடம் ஆதரவு கையெழுத்து வாங்கினார் .. சசி குருப் எடப்பாடியை முதல்வராக முயற்சி

15-16முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருந்துவரும் நிலையில் இன்று காலை அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம் தலைமையின் அழைப்பின் பேரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தவர் ஓ. பன்னீர் செல்வம் என்றும் இந்தக் கூட்டத்தில் முதல்வராக தன்னை ஆதரிக்கவேண்டும் என்று எம் எல் ஏக்களிடம் கையெழுத்து வாங்கினார் என்றும் இந்தியா டுடே இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக தலைமையகத்தில் இன்று மாலை எம் எல் ஏக்கள் கூட்டம் மீண்டும் நடைபெற இருக்கிறது. இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.தீக்கதிர்.இன்

எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் முதல்வர் பதவிக்கு போட்டி .. விவகாரம் சந்தைக்கு வந்து விட்டது

இன்று நமது மின்னம்பலம் மின்னிதழில், எடப்பாடியை முதல்வராக்குவது தொடர்பாக திவாகரனுக்கும், சசிகலாவுக்கும் இடையே நடந்த உரையாடலை வைத்து ‘முதல்வராகிறார் எடப்பாடி பழனிசாமி?’ .minnambalam.com/k/1480876247 என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த முடிவு இறுதி வடிவத்தை எட்டியிருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபின்னர் அவருடைய பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டன. அமைச்சரவையையும் அவரே வழிநடத்திச் சென்ற நிலையில் நேற்று இரவு, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில், இன்று காலை அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் அப்பல்லோவில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் ஓ.பன்னீர்செல்வத்தையே முதல்வராக்க வேண்டும் என்று சத்தமாகப் பேசியிருக்கிறார்கள். ஆனால் ‘சின்னம்மாவின் முடிவு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவதே!’ என்று சில முக்கியஸ்தர்கள் சொல்ல, அந்த இடத்தில் அமைதியாகக் கலைந்திருக்கிறார்கள்.minnambalam.com

அரைக்கம்பத்தில் பரந்த அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது .. தொடர்ந்து Life support system

முதல்வர் ஜெ. மறைந்தார் என்ற தகவல் பரவியதால் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அப்பல்லோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் கொடி மீண்டும் ஏற்றப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா(வயது 68) காலமானதாக தகவல் வெளியானது. 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர், சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவலை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துள்ளது. முதல்வருக்கு தொடந்து தீவிர சிகிச்சை நடைபெறுவதாக அப்பல்லோ அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைந்ததாக வெளியான தகவலை அடுத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தற்போது மறுப்பு செய்தி வந்துள்ளதால் அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது.

75 நாட்களாக மர்மமாகவே இருக்கும் ஒரு நிகழ்வில், எல்லாம்மே மர்மமாக தோன்றுவது இயல்புதானே.

சில சம்பவங்களை கோர்வையாக பார்த்தால் மர்மமாக உள்ளது...
ஏற்கனவே OPS கும்பலை, அன்புநாதன் வழக்குகளை காண்பித்து பிஜேபி வழிக்கு கொண்டு வந்துவிட்டது...
பிடிகொடுக்காமல் இருந்த சசிகலா & எடப்பாடி பழனிச்சாமி அணியானது, புதிதாய் பெங்களூருவில் பிடிபட்ட "கருப்பு பண" விவகாரத்தில் மாட்டியது, பிஜேபிக்கு தோதாகிவிட்டது.. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் வேறு வாய்ப்பில்லை..
திடீரென பிரபல RSS மத்தியஸ்தர் "சோ" ராமசாமி அதே அப்பலோவில் "சேர்ந்தது"...
அங்கே நடத்தப்பட்ட சில பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு, "செட்டில்மென்ட்" முடிவு செய்யப்பட்டிருக்கலாம்....
அதிமுக MLAக்கள் கூட்டம் கூட, அப்பல்லோவில் நடக்க காரணம் என்ன?? சோ அங்கே இருப்பதாலா??
75 நாட்களுக்கு மேலாக நீண்டதை, செட்டில்மென்ட் ஆகியவுடன், முடிவுக்கு கொண்டுவர, "பல நாட்கள் முன்பே" பிரிண்ட் செய்யப்பட்ட அறிக்கையில், பேனாவால் தேதியை மட்டும் எழுதி வெளியிடப்பட்டிருகலாம்... இது புதிதல்ல, ரூபாய் நோட்டு தடையையும் பல நாட்களுக்கு முன்பே பேசி ரெகார்ட் செய்யப்பட்டதை, நவம்பர் 8 அன்று "லைவ்" நேரலையில் பேசியதை போல ஒளிப்பரப்பியவர்கள் தானே...
ஏங்க, இப்படி எல்லதையும்மே சந்தேகத்தோடு பார்த்தால் எப்படி????
அதுசரி, கடந்த 75 நாட்களாக மர்மமாகவே இருக்கும் ஒரு நிகழ்வில், எல்லாம்மே மர்மமாக தோன்றுவது இயல்புதானே. முகநூல் பதிவு பிரகாஷ் ஜே

ஜெ.வுக்கு இருக்கிற ரத்த உறவு நான்தான்: சசிகலா வெளியே வந்து சொல்லாமே: தீபா பேட்டி (EXCLUSIVE)