திங்கள், 17 மார்ச், 2025

பிரேமலதா விஜயகாந்த் : திமுகவுடன் கை கோர்க்க தயார்!

 tamil.samayam.com - பவித்ரன் :    : தொகுதி மறுசீரமைப்பு பெயரில் எம்.பி. சீட் குறைக்கப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக தேமுதிக இறங்கி தமிழக மக்களுக்காக போராடும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தான் உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு வெளிக்கொண்டு வர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில்," தமிழ்நாடு தாக்கல் செய்த பட்ஜெட்டை தேமுதிக வரவேற்கிறது. இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது கேப்டன் விஜயகாந்த் அப்போதே அறிவித்த விஷயங்கள் திமுகவின் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ளது. சிறந்த விவசாயிகளை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதாக நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் விஜயகாந்தின் அறிவிப்புகள்

அது விஜயகாந்தின் முந்தைய அறிவிப்பு தான். பல்வேறு திட்டங்கள் கேப்டன் அறிவித்தது வந்துள்ளதால், தமிழ்நாடு பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம். இன்னும் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தால் நன்றாக இருக்கும். டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஆயிரம் கோடி ஊழல் என கூறுகின்றனா். அதை பொத்தாம் பொதுவாக நாம் கூற கூடாது. விசாரணையில் உறுதியாக வேண்டும், பிறகு தான் கூறவேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஊழல் உண்மையான விஷயமாக என்று அமலாக்கத்துறை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

மத்திய அரசுக்கு எதிராக போராட...

மும்மொழி கொள்கையில், தமிழ் வந்து தமிழ்நாடு முழுவதும் கட்டாயமாக்க வேண்டும். அன்னை மொழிக்கு பிறகு பிற மொழி கற்போம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் எண்ணிக்கையை குறைத்தால் நிச்சயம் மத்திய அரசு எதிராக திமுகவுடன் கை கோர்த்து போராடுவோம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்தின் இந்த பேச்சு, திமுகவுடன் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சிக்க தொடங்கி உள்ளனா். அதே சமயம் அதிமுகவில், தேமுதிகவுக்கு எம்.பி. சீட் ஒதுக்குவது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. அந்த நிலையில் தற்போது திமுகவுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் பேசி உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
பவித்ரன்

கருத்துகள் இல்லை: