ஞாயிறு, 7 ஜூலை, 2024

தமிழகத்தில் பிறந்து 15 வயதில் இலங்கை திரும்பிய பெண் மீண்டும் தமிழகத்தில் தஞ்சம்

தினமணி : தமிழகத்தில் விருது நகர் மாவட்டம் வேம்புக்கூட்டை அகதி முகாமில் பிறந்து 15 வயதில் இலங்கை திரும்பிய பெண் அங்கு வாழமுடியாது என மீண்டும் தமிழகத்தில் தஞ்சம்
இரண்டு பிள்ளைகளுடன் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கைப் பெண்!!
தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தமிழகத்திற்கு தஞ்சம் தேடி சென்றுள்ளனர்.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி (வயது 34),அவரது பிள்ளைகளான அனுஜா (வயது 08),மிஷால் (வயது 05) ஆகியோர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.


தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் யோக வள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு

இலங்கை திரும்பிய போது திருமணம் முடித்த நிலையில் , தற்போது கணவரை பிரிந்து வாழ்கிறார் என தெரியவந்துள்ளது.

இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிய வந்துள்ளது.

அதேவேளை படகு கட்டணமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் மெரைன் போலீசார் மண்டபத்தில் உள்ள

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: