வியாழன், 11 ஜூலை, 2024

100 வயதைக் கடந்த 450 பேர் இலங்கையில் வசிப்பதாகத் தகவல்!

 hirunews.lk : 100 வயதைக் கடந்த 450 பேர் இலங்கையில் வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றில்
இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கான விசேட அரச கொடுப்பனவுக்குத் தகுதி பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் 2.7 மில்லியன் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: