புதன், 11 ஜூலை, 2018

சமூக நீதிக்கு எதிராகவும், இந்துத்வ வெறிக்கு ஆதரவாகவும்... பார்ப்பனர்கள் எதை கையில் எடுத்தாலும் ..

Ganesh Babu :பார்ப்பனர்கள் எதைக் கையிலெடுத்தாலும் அது சமூக நீதிக்கு
எதிராகவும், இந்துத்வ மதவெறிக்கு ஆதரவாகவும்தான் திசை திரும்பும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கிரிக்கெட் விளையாட்டு. இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பை ஊட்டி வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது வர்ணனையாளர்கள் தொடங்கி அணியின் தேர்வாளர்கள், வீரர்கள்வரை பார்ப்பனர்களால் ஏகபோகமாக ஆளப்படும் கிரிக்கெட்.
திறமையின் அடிப்படையிலும், தரவரிசையின்படியும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகள்தான் இந்திய அணிக்கு நேரடியான சவால் என்றாலும், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானும், வங்கதேசமும் மட்டும் தனிப்பட்டமுறையில் விரோதிகளாக முன்னிருத்தப்படுவதும், அந்நாட்டு ரசிகர்களுடனான கடும் மோதல் உருவாக்கப்படுவதும் எதேத்சையானதாகவோ, ரசனை சார்ந்ததாகவோ மட்டும் தெரியவில்லை.
முகநூல் கிரிக்கெட் பக்கங்களின் பின்னூட்டங்களில் அந்நாட்டு ரசிகர்களைத் வக்கிரமாகத் தாக்குவதையும், பதிலுக்கு அவர்களும் தரக்குறைவாக தாக்குவதையும் நாம் அடிக்கடி பார்க்கலாம்.

ஆனால் குறிப்பாக இந்த வடநாட்டு மாட்டு மூத்திரக் கும்பல் வக்கிரத்தையும்தாண்டி திட்டமிட்டு தாக்குதல்களை மதரீதியாக திசைத்திருப்புவதையும், அப்படிச் செய்பவர்களுள் பலர் fake idக்கள் என்பதையும் நாம் சற்று கவனித்தால், இது 'தேச பக்தி' என்றப் போர்வையில் நம் இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை திட்டமிட்டு வளர்ப்பதற்கான ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரத்தின் மற்றுமொரு வேலைத்திட்டம் என்பது நமக்கு எளிதாகப் புரிந்துவிடும்.
'Catch them young' என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டமாக இதுவரை இருந்துவருகிறது. சிறுவர்களையும், இளைஞர்களையுள் எளிதாகச் சென்றடைவதற்கு விளையாட்டு அவர்களுக்கு எப்போதும் ஒரு கருவியாக இருந்துவந்துள்ளது.
1920களில் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டப்போது அதன் நிறுவனத் தலைவரான ஹெட்கேவர், நாக்பூரின் வீதிகளில் பல சிறுவர்களோடு சடுகுடு விளையாடித்தான் அவர்களை தன் அமைப்பிற்குள் கொண்டுவந்தார் என்பது வரலாறு. அன்று சடுகுடு, இன்று கிரிக்கெட். அவ்வளவுதான்!
இந்தியா என்கிற பல தேசிய இனங்கள் இணைந்து ஒன்றாக வாழும் ஒரு நாட்டில், இளைஞர்கள் மத்தியில் இத்தகைய வெறுப்புணர்வை ஊட்டி வளர்ப்பதன் மூலம் இந்தியாவில் அவர்கள் இருக்கமுடியாது, இவர்கள் இருக்கமுடியாது என்பதையெல்லாம் கடந்து, ஒருக்கட்டத்தில் இந்தியாவே இருக்காது என்கிற அரசியல் யதார்த்தத்தை உணர்ந்து இந்திய தேசியத்தின் மீது பற்றுள்ளவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும்.

கருத்துகள் இல்லை: