புதன், 11 ஜூலை, 2018

ஆசிரியர் வீரமணி குதிரை வண்டியில் அமர்ந்து பேரணியை பார்த்தது தவறா?


பி என் எம் பெரியசாமி : தமிழர் தலைவர் அலங்கார வாகனத்தில் வந்தது ஏன்?  என்று விமர்சனம் வைப்பவர்களுக்கு சொல்ல ஆயிரம் விளக்கங்கள் இருக்கிறது. அவைகளை இங்கே விளக்க வேண்டிய அவசியம் இல்லை ..!!
நான் கேட்பது, குடந்தையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக மாநாட்டில் சமூகநல கருத்துகளைப் பற்றி சமூகநீதி பற்றி நீட் தேர்வு முறைகேடு பற்றி கல்வி வேலை வாய்ப்பில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்படுவது பற்றி ஆயிரம் செய்திகள் பேசியிருக்கிறோம் ..!!
தமிழகத்தின் துடிப்புமிக்க இளைஞர்கள் மாணவர்கள் எல்லோரும் மய்யத்தின் பின்னாலும் ஆன்மீக அரசியல் பின்னாலும் தான் இருக்கிறார்கள் என்ற பிம்பத்தை உடைத்து !! திராவிட இயக்க அரசியலுக்கு மாற்று நாதக சீமான் பின்னால் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தையும் முறியடிக்கும் விதத்தில் எங்கள் கருஞ்சட்டைப் படை பெரியார் மண்ணில் அணி அணியாக "படை பெருத்ததால் பார் சிறுத்ததா ? பார் சிறுத்ததால் படை பெறுத்ததா " என்று அளவிற்கு பெரியாரின் பேரப் பிள்ளைகள் தமிழர்தலைவர் ஆசிரியர் வீரமணியாரின் வீரப்பிள்ளைகள் நிகழ்த்திக் காட்டியவைகளைப் பற்றி பேச முடியாதவர்கள் முயலாதவர்கள் பாவம் புறம் பேசித் திரிகிறார்கள் ..!! வயிற்றெரிச்சல்காரர்கள் !!

பகுத்தறிவுப் பகலவன் அய்யா பெரியார் அவர்கள் ஒருமுறை ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் மாநாட்டுத் தலைவரான அண்ணாவை அலங்கார வண்டியில் அமர வைத்து பித்தளைப் பூண்போட்ட தன் கைத்தடியை ஊன்றியபடி சாலையில் எண்ணற்ற தோழர்களுடன் தொண்டர்க்கு தொண்டராக பவணி வந்தார் என்ற வரலாற்றுக்கு சாெந்தக் காரர்கள் நாங்கள் ..!!
இதுபோல் தங்களுக்கென்று ஒரு பெருமைமிகும் வரலாற்றின் வாசமில்லாதவர்கள் ! பார்ப்பண பாதந்தாங்கிகள் அடிமைகள் டயர் நக்கிக் கூட்டங்கள் ... பெரியாரைப் பற்றியோ திராவிடர் கழகம் பற்றியோ அதன் தலைவர் தமிழர் தலைவர் பற்றியோ பேச எவனுக்கும் எந்த யோக்கியதையும் கிடையாது.
எச்சரிக்கையுடன்
பி என் எம் பெரியசாமி ..

கருத்துகள் இல்லை: