ஞாயிறு, 24 ஜூன், 2018

கடலில் மூழ்கி 215 லிபிய அகதிகள் உயிரிழப்பு!

கடலில் மூழ்கி 215 லிபிய அகதிகள் பலி!மின்னம்பலம்:  லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் குடியேறும் நோக்கத்தில் மக்கள் சென்ற படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான 215 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையின் காரணமாக ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், லிபிய நாட்டில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் மற்றும் கலவரம் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துவருகின்றனர்.

அவ்வாறு தஞ்சம் அடையப் படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியாகச் செல்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மத்திய தரைக்கடல் வழியாக 100 பேரை ஏற்றிக் கொண்டு ஒரு மரப்படகு சென்றது. திரிபோலி என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாகக் கடலில் மூழ்கியது. அதில் 95 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். 5 பேர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதே சமயத்தில் மத்திய தரைக்கடலில் 130 பேருடன் சென்ற மற்றொரு படகும் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதில் படகில் இருந்த 60 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் லிபியாவிற்கே அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையே விபத்து நடந்த மறுநாள் நாள் திரிபோலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காரபுலி என்ற இடத்தில் ரோந்து சென்ற கடற்படையினர் 50 பேரின் உடல்களைக் கண்டுபிடித்தனர். தொடந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடற்கரையின் மற்றொரு பகுதியில் 165 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. மொத்தத்தில் இரண்டு நாளில் 215 லிபிய அகதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: