இத்தகைய சம்பவங்கள் தொடரும் நிலையில், புதிதாக ஆப்பிரிக்க மாணவர்களை இந்தியாவுக்கு மேற்படிப்புகளுக்காக அனுப்பவேண்டாம் என்றும் ஆப்பிரிக்க அரசுகளைக் கோரவும் தாங்கள் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் ( ஐ.சி.சி.ஆர்) வரும் வியாழனன்று நடத்தவிருக்கும் ஆப்பிரிக்கா தினத்தை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
“இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுளேன். இது துரதிர்ஷ்டவசமான, கடும் வலியை ஏற்படுத்த கூடிய சம்பவம் என்பதை ஆப்பிரிக்க மாணவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சுஷ்மா கூறியுள்ளார்.
மேலும் மத்திய மந்திரி வி.கே. சிங், இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்கத் தூதர்களின் சங்கத்தினரை சந்தித்து ஆப்பிரிக்கர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியா முழு ஈடுப்பாட்டுடன் இருப்பதாக எடுத்துக் கூறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார் malaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக