வெள்ளி, 18 டிசம்பர், 2015

பாடலாசிரியர்கள் கண்டனம்...பீப் பாடலை ஏன் நடிகர்கள் கண்டிக்கவில்லை...பொறுக்கிகள் கையில் தமிழ் சினிமா?


பீப் பாடல் விவகாரம் தொடர்பாக புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், யுகபாரதி, பா.விஜய் உள்ளிட்ட கவிஞர்கள் கூட்டாக இணைந்து கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில், ‘’தமிழ்த் திரைப்படத் துறை என்ற மிகப்பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் படைப்புகளை பெரிதும் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக் கணக்கான பேர். வெகுஜனங்கள் மத்தியில் விரைந்து சேர்ந்து அனைவர் இல்லங்களையும் உள்ளங்களையும் அடைந்து விடும் இப்படைப்புகள் ஒரு சமூக அக்கறையோடும் பொறுப்போடும் இருக்க வேண்டும். அந்த எல்லை மீறப்படும் போது, அது பலர் மனதை புண்படுத்துவதாக அமைந்து விடுகிறது. குறிப்பாக இந்தச் சர்ச்சைக்குரிய பாடல் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் ஒழுக்கமற் றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிக்கிறது.
மக்கள் இன்னும் மழைப் பாதிப்பில் இருந்து மீளாத சூழ்நிலையில், அவர்களின் மனநிலை புரியாமல் பொறுப்பற்ற வன்செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட பாடல் சிறு பிள்ளைகள் மத்தியில் பரவிவிட்டால் ஒரு நாகரீகம் இழந்த தொற்று நோய் அவர்கள் மனதில் பதிந்துவிடும்.
குறிப்பிட்ட பீப் சத்தம் ஏன் என்று கேட்டு மன அசுத்தம் அடைவார்கள்.
 இப்பாடல் குறித்து மாணவர் அமைப்புகள், மாதர் சங்கங்கள், பல எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த கூட்டறிக்கை வாயிலாக எங்களது கண்டனத்தையும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். மக்களால் அங்கீகரிக்கப்பட்டு மிகப்பிரபலமாக இருக்கும் படைப்பாளிகள் - கலைஞர்கள் இப்பொறுப் பினை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒருவேளை சிலம்பரசன், அனிருத் தரப்பில் நேற்று கூறப்பட்டது போல் அந்தச் சர்ச்சைக்குரிய பாடல் அவர்களது படைப்பாக இல்லாது இருக்குமாயின் இந்த கொடும் செயலை செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் சமூகத்தைச் சீரழிக்கும் பாட்டுக்கள் படை ப்புகள் வெளிவராது செய்ய அனைத்து படைப்பாளிகளும், ஊடகங்களும் ஒன்று பட வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்கள் nakkheeran,in

கருத்துகள் இல்லை: