வியாழன், 5 நவம்பர், 2015

Bihar Exit Polls JD(U) 132 NDA 111...பீகார் எக்சிட்: நிதீஷ் லாலு தலைமையில் ஐக்கிய ஜனதா கூட்டணி முன்னணியில்

பீகார் தேர்தல்
அறிவிக்கப்பட்டபோது பாஜக கூட்டணி மிகப்பெரும் வெற்றியை நோக்கி செல்வதாக  கூறப்பட்டது  தற்போது அந்த அலை காணாமல் போய்விட்டது . மிக நெருக்கமான போட்டி காணப்படுகிறது,  இரு அணிகளிலும் இல்லாத எம்பீக்கள் அல்லது கட்சிகள் ஆட்சியை தீர்மானிக்க கூடியவர்களாக இருந்தாலும் ஆச்சரியம் இல்லை . மோடியின் அலை என்பதாக ஒன்றும் அங்கு இல்லை என்பது தெளிவாகி உள்ளது.  இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு தேசிய அளவிலான திருப்பம் தற்போது உருவாகுகிறது.
இந்த வெற்றியின் மூலம் நிதீஷ்குமார் மதசார்பற்ற கட்சிகளின் கூட்டு தலைவர் ஆகிறார், அனேகமாக இந்தியாவின் அடுத்த பிரதமர் நிதீஷ்குமார் தான். ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் அற்ற திறமைசாலி மதச்சார்பற்றவர் பல தட்டு மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர் , மோடிக்கும் பாஜகாவுக்கும் இனிதான் இருக்கிறது பெரும் கஷ்டம்

கருத்துகள் இல்லை: