வெள்ளி, 30 நவம்பர், 2012

சுரேஷ் அசிட் வீசி அப்பாவி பெண்ணின் பார்வை பறிபோனது

சென்னை: காதலிக்க மறுத்ததால், "ஆசிட்' வீச்சு ஆளான, பெண் பொறியாளரின் பார்வை பறிபோனது.காரைக்காலை சேர்ந்த பெண் பொறியாளர் வினோதினி, 27. சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிருந்த இவர், இம்மாதம், 10ம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
அப்போது, இவருக்கும், இவரை ஒருதலையாக காதலித்து வந்த சுரேஷிற்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ், வினோதினியின் முகத்தில், "ஆசிட்' வீசினார்.ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள், இரண்டு வாரங்களாக முயன்றும், வினோதினியின் பார்வையை காப்பாற்ற முடியவில்லை.இதுகுறித்து, இம்மருத்துவமனையின், தீக்காய சிகிச்சை நிபுணர் ஜெயராமன் கூறியதாவது:உயிருக்கு ஆபத்தான நிலையை, வினோதினி கடந்துவிட்டார். ஆனால், "ஆசிட்' வீச்சில், அவரது, இரு கண்களின் கரு விழிகளும் கருகியதுடன், பார்வை நரம்புகளும் பாதிக்கப்பட்டதால், வினோதினியின் பார்வை பறிபோய்விட்டது.
  ajesh - Chennai,இந்தியா
 இன்னுமா இதுபோன்ற வன் செயல்களை சகித்துக்கொண்டு இருக்க வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை எந்த தயவு தாட்சண்யமின்றி தூக்கிலிட வேண்டும் ( இது போன்ற வழக்குகளை துரிதமாக முடிக்க வேண்டும் ). இது போன்ற கடுமையான சட்டங்கள் இன்றைக்கு கண்டிப்பாக தேவை. அந்த பெண்ணிற்காக இறைவனிடம் எல்லோரையும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
http://www.dinamalar.com/
சில மாதங்கள் கழித்து, சேதமடைந்துள்ள அவரின் முகத்தை, "பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யவும், பெயரளவிற்கு செயற்கை கண்களை பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு ஜெயராமன் கூறினார்.

கருத்துகள் இல்லை: