வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கடற்படையினரால் காப்பற்றப்பட்ட மீனவர்கள்

யாழ். வல்வெட்டித்துறை வடக்கு ஆதிகோவிலடியைச் சேர்ந்த இரு மீனவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு பின்பு யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் இருந்து கடற்படையினரால் காப்பற்றப்பட்டுள்ளதாக வடமராட்சி கடற்தொழில் அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். ஏமிலியாம் பிள்ளை தெரிவித்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தொழிலுக்குச் சென்ற இவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கரை திரும்ப வேண்டிய நிலையில் நேற்று முன்தினம் பகல் வரை இவர்கள் கரை திரும்பவில்லை. இயற்கை சீற்றம் காரணமாக இவர்களது படகு திசை தெரியாமல் தடுமாறியதாகவும், இவர்களை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றி மருத்துவ உதவிகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காப்பாற்றப்பட்ட மீனவர்களான பாபு பிரபாகரன் மற்றும் பாபு சசிகரன் ஆகிய இரு கடற்தொழிலாளர்கள் நேற்று மாலை யாழ். ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் உதவியுடன் இக் கடற்றொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு காப்பாற்றப்பட்டுள்ளதாக வடமராட்சி கடற்தொழில் அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.ஏமிலியாம் பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: