திங்கள், 12 ஏப்ரல், 2010

மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் தீப்பந்தங்களைக் கொளுத்தி மேற்படி கடைகளுக்கு மேல் எறிந்து விட்டு

கல்யாண வீட்டில்  சீப்பை ஒழிக்கும் முயற்சி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை வியாபாரிகள் விற்பனை நிலையங்கள் இனந்தெரியாத நபர்களினால் நேற்று மாலை 7.00மணியளவில் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன நாச்சிமார் கோவிலின் தேர் முட்டி அருகில் கடந்த சிலவாரங்களாக தென்னிலங்கை வியாபாரிகளுக்கென விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றையே மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் தீப்பந்தங்களைக் கொளுத்தி மேற்படி கடைகளுக்கு மேல் எறிந்து விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடைகள் முற்றாக எரிவதற்குள் வியாபாரிகள் தீயை அணைத்து விட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இடுகையிட்டது ATHIRADY

கருத்துகள் இல்லை: