புதன், 20 மார்ச், 2024

2024 - திமுக-வின் “47” தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள்

 தினகரன் :“திமுக மக்களை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது..
இதில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பேராதரவுடன் மத்தியத்தில் ‘இந்தியா’ கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் என தலைப்பில் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.
1. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்
.3. அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
4. மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.
5. பா.ஜ.க அரசால்கலைக்கப்பட்ட மத்திய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்பட்டு நாடு முழுமையிலும், மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் வகுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் கலைக்கப்படும்.
6. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு அதிமுக, பாஜகவிடம் மல்லுக்கட்டும் தேமுதிக (சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் இன்னும் கேக்கல)

மின்னம்பலம் -Selvam :  ஒத்த ராஜ்யசபா சீட்டு.. அதிமுக, பாஜகவிடம் மல்லுக்கட்டும் தேமுதிக
நடைபெற இருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது   அதிமுக.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீட்டிற்கே நேரடியாகச் சென்று கூட்டணி தொடர்பாக பேசிவிட்டு வந்தனர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பாமக, தேமுதிக இரண்டையும் கூட்டணியில் வைத்துக்கொள்ள தீவிரமாக முயற்சித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.
பாமக 9 மக்களவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் வேண்டுமென்று அதிமுகவிடம் கேட்டது. இறுதியில் 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா என்று முடிவான நிலையில் திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக.

அதிக வெப்பம் காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடம் தேடும் காலம் .. கவனிக்க வேண்டிய விடயங்கள்

 Dayalan Balasubramaniyiam :  காலத்திற்கேற்ற பதிவு....
அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத்  திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.
2. மாலை வேளைகளில்  வீட்டு முன், பின் கதவுகளை  திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள்  நுழையலாம்.
3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.

செவ்வாய், 19 மார்ச், 2024

தமிழக கடற்றொழிலை கண்காணிக்க Sea Scouts படையை நிறுவ முயற்சி! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் கடல் எல்லைக்குள் கனரக கடற்றொழில் படகுகள் அடிக்கடி நுழைவது, உள்ளூர் கடற்றொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
குறைந்தபட்சம் 500 இந்திய அடிமட்ட இழுவை படகுகள், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைகின்றன.
வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு சராசரியாக 900 இந்திய இழுவை படகுகள் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைகின்றன! .
ஒவ்வொரு படகும் 1,000 கிலோ மீன்கள் மற்றும் இறால்களை பிடிக்கின்றன!
இந்த சட்டவிரோத இழுவைப் படகு மூலம் இலங்கைக்கு நாளாந்தம் சுமார் 350 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.  

இவ்வாறு  அமைச்சரவை குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மீன்படியாளர்களின் சட்டவிரோ கடற்றொழிலை கண்காணிக்க “கடல் சாரணர்” படையை நிறுவுவதற்கு விரைவில் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்! 

2024 - பாஜக கூட்டணி 40 தொகுதிகளின் இறுதி உத்தேச வேட்பாளர்கள்

பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்படவுள்ள 10 இடங்கள்- உத்தேச பட்டியல்!

 tamil.asianetnews.com -Ajmal Khan  : தமிழக்தில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனையடுத்து பாமகவிற்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அந்த வகையில் வட மாவட்டங்களில் உள்ள 9 தொகுதிகளிலும் பாமக களம் இறங்கவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் இறுதி கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து தொகுதிகளையும் அறிவித்து விட்டது. இதனையடுத்து இன்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிடப்படவுள்ளது

நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கிய கமல்ஹாசன்! முக்தா ரவி பேட்டி

Kamal Haasan removed Sivaji Ganeshan from Nayagan Muktha Ravi interview
Kamal Haasan removed Sivaji Ganeshan from Nayagan Muktha Ravi interview

tamil.filmibeat.com  -  Mari S :  நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் 'நாயகன்' படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். அந்த படத்தை முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆரம்பத்தில் மணிரத்னம் அந்த படத்திற்கு வருவதற்கு முன்பே கமல்ஹாசனை வைத்து காட்ஃபாதர் படத்தை உருவாக்குவது தான் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் எண்ணமாக இருந்தது என்றும் கமல்ஹாசன் உடன் இணைந்து சிவாஜி கணேசன் நடிக்க கால்ஷீட் கொடுத்ததாகவும் முக்தா ரவி கூறியுள்ளார்.
ஆனால், திடீரென கமல்ஹாசன் மணிரத்னத்தை கொண்டு வந்து படத்தையே மாற்றி விட்டார் என்றும் சிவாஜி கணேசனை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார் என்றும் முக்தா ரவி பேசியுள்ளார்.
Kamal Haasan removed Sivaji Ganeshan from Nayagan Muktha Ravi interview

மோடியின் ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோவில் கூட்டத்தை காட்டுவதற்காக அரசுப்பள்ளி மாணவ , மாணவிகளை நடுரோட்டில் நிறுத்தி வைத்திருக்கும்  பாஜக . இதற்கு காரணமானவர்கள் மீது தமிழக  பள்ளிக்கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Officials inquire at coimbatore school over students standing on the road during Pm modi road show

நக்கீரன் : நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டது

May be an image of text
Balakrishnan R  : பகடைகள் உருள்கின்றன.
சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டது; வேறுபட்டது ( டி.என்.ரே 1939)
வேதகால மக்கள் "பிபிதகா" என்ற தான்றி கொட்டைகளை ( Terminalia Bellirica ) பகடைக் காய்களாகப் பயன்படுத்தினார்கள்.
"சாலகா"  என்று நாரத ஸ்மிருதி குறிப்பிடுவது தந்தத்தால் ஆன நாற்கோணப் பகடை.
ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், கீழடி ஆகிய இடங்களில் சுடுமண் அறுகோணப் பகடைகள் ( cubic dice) கிடைத்துள்ளன.
"வல்லு" எனப்படும் பகடை தொடர்பான கலைச்சொற்களுக்கு போகிற போக்கில் புணர்ச்சி விதி சொல்கிறது தொல்காப்பியம்!
வல்லப் பலகை ( அகநானூறு 377); சங்குகளில் துளையிட்டு செய்த பகடைகள் ( அகநானூறு 135); சோழ மன்னன் தம்பியுடன் தாமப்பல் கண்ணணார் என்ற புலவர் ஆடிய  பகடை விளையாட்டு ( புறநானூறு 43) போன்ற சங்க இலக்கியங்களுக்கு இணையான நடைமுறை சார்ந்த ஆவணம் வேறு எந்த மொழியிலும் இல்லை.

பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளில் EVM வெற்றி - தேர்தல் கமிஷன் EVM மோசடி அம்பலம்

மாலைமலர் :  பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு- புதிய கருத்து கணிப்பில் தகவல்
புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 350 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக 'நியூஸ் 18' ஊடகம் சார்பில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் கூறியிருப்பதாவது:-
உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு 77 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 2 தொகுதிகள், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெறும்.
பீகாரில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

மோடியுடன் மேடையேறும் ராமதாஸ், அன்புமணி-தைலாபுரத்தில் நடந்தது என்ன?

மின்னம்பலம் Selvam மார்ச் 18 ஆம் தேதி மாலை தைலாபுரம் தோட்ட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ‘பாஜகவோடு பாமக கூட்டணி அமைக்கும். நாளை மோடியுடன் அன்புமணி சேலத்தில் மேடையேற வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்த வீடியோ பைட்
“நேற்று (மார்ச்17) மாலை 4.15 மணி முதல் 6.15 மணி வரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்துக்கு சென்ற பாமக எம்.எல்.ஏ. அருள், டாக்டர் ராமதாஸ் சொன்ன செய்திகளை எடப்பாடியிடம் தெரிவித்தார். அதன் பின் அருளின் ஐ போன் மூலமாகவே எடப்பாடி டாக்டர் ராமதாஸிடமும், அன்புமணியிடமும் பேசினார்.

தேர்தல் விதியை காட்டி பெரியார் சிலையை மூடிய அதிகாரிகள் .. திராவிடர் கழகம் அதிரடி நடவடிக்கை

 nakkheeran.in :தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திங்கள், 18 மார்ச், 2024

ஆந்திரா: ஜெகன்மோகன் மீண்டும் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா?

 மின்னம்பலம் vivekanandhan  :  ஆந்திராவைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.
அங்கு 175 சட்டமன்றத் தொகுதிகளும், 25 லோக்சபா தொகுதிகளும் உள்ளன.
ஆந்திராவில் இரு பெரும் கட்சிகளான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இரண்டுமே இந்தியா மற்றும் என்.டி.ஏ என்று தேசிய அளவிலான எந்த கூட்டணியிலும் சேராமல் இருந்து வந்தன.
அதனால் 2024 பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தேசிய அளவிலான தேர்தல் முடிவுகளில் ஆந்திரா மாநிலத்தின் நிலை என்பது பெரிய அளவில் விவாதப் பொருளாக இல்லாமல் இருந்து வந்தது.
ஆனால் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே ஆந்திர அரசியலை பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. திடீர் திருப்புமுனையாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளன.

தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் பதவி ராஜினாமா தேர்தலில் போட்டி இடுகிறார்

நக்கீரன் : தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து,
ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்! list

மின்னம்பலம் - christopher : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பது குறித்த உடன்படிக்கை இன்று (மார்ச் 18) திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 9 மக்களவை தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதுச்சேரி உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அந்த 9 தொகுதிகள் என்னென்ன என்பது கேள்வியாக எழுந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரஸ் சார்பில், அசோக் கெலாட், அஜோய் குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு List !

 மாலை மலர் ; நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
அதன்படி திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட ஆரணி மற்றும் தேனி தொகுதிகளில் திமுக இம்முறை நேரடியாக களம் காண்கிறது. அதே போல் கடந்த முறை மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியிலும் திமுக போட்டியிடுகிறது.

ரஷ்ய - 5ஆவது முறையாகவும் அதிபரானார் விளாடிமிர் புதின்

tamilmirror :  ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருப்பது ரஷ்யா.. இந்தியாவை விட பல மடங்கு பெரியதாக ரஷ்யா இருந்தாலும் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 15 கோடி தான்.
1999இல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை புதின் ஓவர்கேட் செய்துள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புதின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்

தென் சென்னையில் அதிமுக ஜெயவர்தன்.. வட சென்னையில் ராயபுரம் மனோ?

 tamil.oneindia.com - Velmurugan P  : சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக பாமக உடன் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில், மறுபக்கம் வேட்பாளர் தேர்விலும் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக சார்பில் சென்னையில் யார் யார் எங்கு போட்டியிட உள்ளார்கள் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது, மார்ச் 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ந் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் உள்ளன.
who are going to contest in south Chennai and north chennai on behalf of AIADMK

Minister P.T.R.Thiaga Rajan On Electoral Bond Data and Modi Government |

: யாழ்ப்பாணம் - கொலைகளும் மன அழுத்த நோய் என்பதும் எவ்வளவு தூரம் உண்மையானது???

May be an image of text

Poornima Karunaharan :  கொலைகளும் அதன் பின்னரான சமூகக் காரணியாக முன் வைக்கப்படுகின்ற மன அழுத்த நோய் என்பதும் எவ்வளவு தூரம் உண்மையானது???
உண்மையான காரணங்கள் வேறாகவும் இருக்கலாம். இன்றைய நிலையில் எந்த குற்றங்களுக்கும் விடையாக டிப்ரெஷன் என்பது திணிக்கப்பட்டு விடுகிறது.

Radha Manohar :  இதுதான் நமது பாரம்பரியம் இது வேடிக்கைக்காக கூறவில்லை .. இது வரலாற்று உண்மை!
ஈழகேசரி - 21 - 6 - 1936 : மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்
எதற்கும் கத்தியை உருவும் எமகிங்கரர்
படித்த பதர்கள் இயற்றும் படுகொலைகள்
புத்திசாதுர்யம் நிறைந்த பொய் சாட்சிகள்
கைலஞ்சம் வாங்கும் கிராம அதிகாரிகள்

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை வீழ்த்திய தளபதிகள்

வீரகேசரி : கோத்தபாய ராஜபக்சவை வீழ்த்திய தளபதிகள்
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள, “ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கான சதி“ என்ற நூலில், பாதுகாப்பு உயர்மட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார் கோத்தபாய   ராஜபக்ஷ.
அவர் எதனைப் பலமாக கருதினாரோ அதுவே அவருக்குப் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எதனைப் பலப்படுத்தியதாக கூறினாரோ, அதன் பலவீனங்களை அவரே இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் தன்னுடன் நீண்டகாலம் பணியாற்றிய படை அதிகாரிகளை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொண்டார்.
தன்னைச் சூழ, தனக்கு நெருக்கமானவர்களை வைத்திருப்பது பாதுகாப்பானது என்று அவர் கருதினார். தனக்கு நம்பிக்கையானவர்களை அருகில் வைத்திருப்பதன் மூலம் இலகுவாக அதிகாரத்தைச் செலுத்தலாம் என்று அவர் எண்ணினார்.  

பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு

தினத்தந்தி :  பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார்.
சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. சார்பில் திருக்கோவிலூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்முடி, உயர் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பையும் திரும்பப் பெறப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார்.

ஞாயிறு, 17 மார்ச், 2024

பாஜக மொத்தம் ரூ.6,986.5 கோடி - மார்ட்டின் நிறுவனத்திடம் - தேர்தல் பத்திர புதிய விவரம்

hindutamil.in :  புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஒருநாள் முன்னதாகவே, தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

மும்பையில் ஸ்டாலின் : “பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” -

நக்கீரன் :  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார்.
இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது.
இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அமலாக்கத் துறையில் லஞ்சம்! சகித்துக்கொள்ள முடியாது" - உயர்நீதிமன்றம்

 Kalaignar Seithigal - Praveen :  திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது சொத்துக்குவிப்பு வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் ரூ.51 கோடி வரை பேரம் பேசி தர வேண்டும் என்றும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டார்.
மருத்துவர் புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்சப்பணத்தை வாங்க வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அமலாக்கத்துறை அதிகாரி பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பெற்றது தெரியவந்தது.