Ksb Boobathi : தமிழகத்தில்_மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று சொன்னவர்களை விட கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் வரவேண்டும் என்று சொன்னவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை இன்றுவரை இதே நிலைதான் உள்ளது எந்தவொரு மாற்றமும் இல்லை. இயக்குனர்சேரன். என்ன சார் இப்படி புளுகுறீங்க ..!
பத்துக்கும் மேற்பட்ட படங்களை எடுத்துருக்கீங்க பல படங்களில் நடிச்சிருக்கீங்க இதெல்லாம் எப்படி என்று கேட்டால் என்னுடைய உழைப்பு என்று எதிர் பதில் வரும் மறுக்கவில்லை.
இதை மேலூரில் இருந்து வந்த ஒரு சேரனால் எப்படி செய்ய முடிந்தது..? கொஞ்சம் பின்னோக்கி செல்வோம் உங்கள் வயது தோராயமாக 50 என்று வைத்துக் கொள்வோம் .
அதாவது நீங்கள் பிறப்பதற்கு முன்பு உங்கள் தாயாரோ தந்தையாரோ அரசு வேலைகளில் இருந்தவர்கள் என்று படித்துள்ளேன். அன்றைய காலகட்டத்தில் மேலாதிக்க சாதிநிலை தாண்டவம் ஆடியபோது அந்த குக்கிராமத்தில் இருந்த இவர்கள் படித்து எப்படி வேலையில் சேர்ந்தார்கள் என்று யோசித்தது உண்டா..?
அன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டுவேலை , கூலிவேல போன்ற இடங்களில் மட்டுமே இருப்பார்கள் பிறகு எப்படி அரசுவேலைகளில் பணி அமர்த்தப்பட்டார்கள் என்று யோசித்தது உண்டா..?
மேல்சாதியினர் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலையில் நீங்கள் ஆரம்பகல்வியை , உயர்கல்வியை, பட்டப்படிப்பை எப்படி பெற்றீர்கள் என்றாவது யோசனை செய்தது உண்டா..?















