செவ்வாய், 11 ஏப்ரல், 2023

இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகளை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு!

  hirunews.lk  இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் வேலூரில் அமைக்கப்பட்டு வரும் கொன்கிரீட் வீடுகளை, மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19 ஆயிரத்து 46 இலங்கைத் தமிழர்களுக்கான இந்த முயற்சியை 2021 நவம்பரில் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்.
தற்போது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் 18 முகாம்களில் 2 ஆயிரத்து 239 இலங்கை தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை: