ஞாயிறு, 20 ஜனவரி, 2019

திராவிடம் ஒரு விளக்கம்.. தேவி சோமசுந்தரம்

Devi Somasundaram : திராவிடம் என்றால் என்ன ? .
நிறைய பேசபட்ட , அறிஞர் பேசிய விஷயம் தான்... நாமும் ஒரு சிறு முயற்சி செய்யலாம்..
நான் பேச போவது பெரியார் பேசிய திராவிடம் மட்டுமே,..நிறைய பேர் திராவிடம் பேசி இருக்கிறார்கள் . அது தனி. பெரியார் பேசியது மாற்று பண்பாட்டு வாழ்வியல்..

பார்ப்பனப் பண்பாட்டு வாழ்வியலை எதிர்த்து, திருமணத்திலிருந்து, இறப்பு வரை ஒரு மாற்று பண்பாட்டு வாழ்வியலை வடிவமைத்தார், அப்படி அந்த மாற்று பண்பாட்டு வாழ்வியலைக் கொண்டவர்களை திராவிடர் என குறிப்பிட்டார் பெரியார்..பெரியாரின் திராவிட டெபனஷன்ல எந்த இடத்திலும் நிலமோ, இனமோ, மொழியோ கிடையாது,
வெறும் கடவுள் மறுப்பு என்ற எல்லைகுள் அவரை அடைப்பதே தவறு....ஒரு வாழ்வியல் தத்துவத்தை சொன்னவர் பெரியார் .
அது என்ன மாற்று பண்பாட்டு வாழ்வியல்..? .தமிழர்க்கு என்று எந்த பண்பாட்டு வாழ்வியலும் அறுதியிட்டு சொல்ல முடியாம ஆரிய பண்பாட்டை நம் வாழ்வியலா கொண்டு வாழ்கிறோம்.
உதாரணமா....உற்பத்திசாரா வாழ்வியல் ஆரிய பண்பாடு .யாகம் வளர்ப்பது, அம்பு எய்வது, வாதம் செய்வது, பிச்சை எடுத்து உண்பது ...என்று அவர்கள் வாழ்வியல் எந்த உற்பத்தி அற்றது ..
உழைத்து வாழ்தல் தான் மானத்தோட வாழ்தல்னு , விவசாயி அரிசிய உற்பத்தி செய்கிறான், ஆசாரி மர பொருளை, வண்ணார் துணி துவைப்பது, வியாபாரி பொருளை விற்று வியாபாரம் செய்வது இவை உற்பத்தி சார் வாழ்வியல்..

இயற்கையை மறுதலித்து விட்டு உருவாக்க கடவுளை வணங்குவது ஆரிய , பார்ப்பன பண்பாட்டு வாழ்வியல்...பிரம்மாவை படைப்பு தெய்வமாக்கி, விஷ்ணுவை காக்கும் கடவுளாக்கி , சிவனை அழிக்கும் கடவுளாக்கி கதைகள் கூறி அந்த கதைகளை வணங்கும் தெய்வ மாக்கியது ஆரிய பண்பாடு..
சூரியனை ,பூமியை, நாகங்க்ளை, விலங்குகளை இயற்கயை வழிபடுவது ஆரியதிற்கு எதிரான வாழ்வியல்..

இப்படி நம்பிக்கை சார் புனைவுகளின் அடிப்படை வாழ்வியலில் இருந்து முற்றிலும் எதிர்புறமா அறிவியலை அடிப்படையாக கொண்ட மாற்று பண்பாட்டு வாழ்வியலை திராவிடம் என்ற கருத்தியலா பெரியார் முன் மொழிகிறார் ..

சரி பெரியார் மட்டும் தான் ஆரிய பண்பாட்டை எதிர்த்தாரா ..? .
சித்தர்கள் எதிர்த்தார்கள் .புத்தர் எதிர்த்தார் . அம்பேத்கர் எதிர்த்தார் ..

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்ததுமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிகிறீர்
பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல் சொல்லமே?
..என்று சித்தர்கள் ஆரிய பண்பாட்டை எதிர்த்தனர் .சித்தர் முழுக்க காட்ல
ஏன் வாழ்ந்தான் ..இவனுகளுக்கு பயந்து காட்டுகுல்ல ஓடிட்டாங்க ..இல்லன்னா வள்ளலாரை, நந்தனாரை கொளுத்தின மாதிரி கொளுத்திடுவாங்கன்ன்னு ஓடிட்டாங்க ..

பறச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ...சாதியை சாடின சிவ வாக்கியரும் தெருல நின்னு பார்ப்பான எதிர்க்க முடியாம ஒதுங்கிட்டாரு.

எல்லாரும் நமக்காக படிப்போம் ,அம்பேத்கர் மக்களுகாக படித்தவர், அவர் படிக்காத புத்தகமே இல்லை லண்டன் லைப்ரரிலன்னு சொல்ல படும், அத்தனையும் நமக்காக, நமக்கு அறிவு தர படிச்சவர் அவர் மட்டும் தான்..

அவரை இந்துத்துவா அம்பேத்கர் ஆக்குறாங்க ..ஆரியம் எதிர்க்கும் அல்லது அணைத்து கழுத்தை நசுக்கி அழிச்சுடும்...அம்பேத்கரை அணைப்பது அவரை அவர் கருத்தை இந்து மயமாக்க தான்.

நமக்கு தெரியும், நாகார்ஜுனா என்ற பார்ப்பனர் பெளத்ததிற்குள் புகுந்து ஹீனயானம், மகாயானம்னு பெளத்தையே பிச்சு பிச்சு போட்டு விட்டார்கள்.. பெளத்தம் ஏற்றவன் கொலை செய்றான்.,இந்து மதத்தின் செரித்து கொள்ளும் தன்மைன்னு சொல்வார் பெரியார்.. எதுலாம் தனக்கு எதிரியோ அதை தன் கிட்டவே வச்சு சின்னதாக்கி அழிச்சு முழுங்கி ஏப்பம் விட்றும் ஆரியம்..
பெரியார் மட்டும் தான் நடுத்தெருல நின்னு கத்தினார் , மக்கள்கிட்ட பேசினார், ஆரிய பண்பாட்டுக்கு எதிரா போர் நடத்தினார் ..அதனால தான் பெரியார் பேர சொன்னா பார்ப்பான் அளறுகின்றான்....
நாளை தொடரும்.

கருத்துகள் இல்லை: