அதில் பதிவாகியிருந்த கைரேகையை ஆய்வு செய்தோம். அடுத்து இந்த வழக்கில் முக்கியமான தடயமாகக் கொலை நடந்த இடத்தில் சூயிங்கம் ஒன்று கிடந்தது. அதுதொடர்பாக விசாரித்தபோதுதான் தமிழ்ச்செல்வியின் மருமகனான 10-ம் வகுப்பு மாணவனின் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
அவனிடம் விசாரித்தபோது எந்தத் தகவலையும் சொல்லவில்லை. இந்தச் சமயத்தில் தமிழ்ச்செல்வியின் பிரேத பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறி இறந்திருக்கும் தகவல் தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில் அந்த வீட்டுக்குள் மாணவன் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
அதுகுறித்து மாணவனிடம் விசாரித்தபோது `சுத்தியல் வாங்கச் சென்றேன். ஆனால், சுத்தியல் இல்லை என்று அத்தை கூறிவிட்டார். இதனால் திரும்ப வந்துவிட்டேன்’ என்று எங்களிடம் தெரிவித்தான்.
இதையடுத்து, மாணவனை விட்டுவிட்டோம். இந்த வழக்கு தொடர்பாக, தமிழ்ச்செல்வியின் உறவினர்களிடம் விசாரித்த சமயத்தில் இந்த மாணவன், சூயிங்கம் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். நாங்கள் அவனிடம் சென்று சூயிங்கம் கேட்டோம். அவனும் கொடுத்தான். அதுவும் தமிழ்ச்செல்வியின் உடல் அருகே கைப்பற்றப்பட்ட சூயிங்கமும் ஒன்று என்பது தெரிந்தது. தமிழ்ச்செல்வி கொலை வழக்கும் முடிவுக்கு வந்தது. மாணவனும் எங்களிடம் உண்மையை ஒத்துக்கொண்டான்” என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக