வெள்ளி, 22 டிசம்பர், 2017

அம்ருதா வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

ஜெயலலிதா,அம்ருதாதினமலர் : சென்னை : ஜெயலலிதாவின் மகள் என்று தம்மை உரிமை கொண்டாடி வரும் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் வாரிசு என்பதை உறுதி செய்வதற்காக தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். ஆனால், அவரது மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அத்துடன் ஐகோர்ட்டில் முறையிடவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், ஜெ., உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி அம்ருதா சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது

கருத்துகள் இல்லை: