வெள்ளி, 22 டிசம்பர், 2017

உபியில் பிச்சை எடுத்த நெல்லை கோடீஸ்வரர் ... உறவினர்களிடம்

உ.பி.யில் பிச்சை எடுத்த நெல்லை கோடீஸ்வரரை கண்டுபிடிக்க உதவிய ஆதார்தினத்தந்தி :"உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த நெல்லை கோடீஸ்வரர் ஆதார் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். லக்னோ:< உத்தரபிரதேச மாநிலத்தில் ரேபரேலி மாவட்டத்தில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டு திரிந்துள்ளார். அவருக்கு சிலர் பரிதாபப்பட்டு உணவு அளித்தனர். கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் தங்கி பொழுதை கழித்தார். அவருக்கு அடிக்கடி நினைவு தப்பும் வியாதியும் இருந்ததால் அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது< இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் ஆசிரமம் நடத்தி வரும் சுவாமி பாஸ்கர் ஸ்வருப் மகராஜ் அவருக்கு ஆதரவளித்து, தன் ஆசிரமத்தில் தங்க வைத்துள்ளார். அவரது உடைமைகளை ஆராய்ந்தபோது அவருடைய ஆதார் அட்டை இருந்துள்ளது. மேலும் வங்கியில் அவரது கணக்கில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக தொகை இருந்ததற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த சாமியார், அந்த முதியவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கோடீஸ்வரர் என்பதை உறுதி செய்தார்.


பின்னர் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தொடர்பு கொண்டு அந்த முதியவர் குறித்த செய்தியை தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அந்த முதியவரின் குடும்பத்தினர் அவரை அழைத்து செல்ல உத்தரப்பிரதேசம் விரைந்தனர்

இதுகுறித்து முதியவரின் மகள் கீதா கூறுகையில், 'அவர் எனது தந்தை முத்தையா. நாங்கள் ரெயில் பயணம் மேற்கொண்டபோது எங்கள் தந்தை தொலைந்துவிட்டார். கடந்த ஆறு மாதங்களாக அவரைத் தேடி வந்தோம். வயது முதிர்வு காரணமாக அவருக்கு  அடிக்கடி நினைவு தப்பிவிடுகிறது'' என்றார். மேலும், தந்தையை மீட்டுக் கொடுத்ததற்காகப் அந்த சாமியாருக்கும் கீதா நன்றி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: