செவ்வாய், 19 டிசம்பர், 2017

சு.சாமி :ஆர் கே நகரில் தினகரனுக்கு வாக்கு கேட்கிறார் ....

tamiloneindia Lakshmi Priya : சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கே வாக்களியுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரசாரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தங்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கை அறிந்து கொள்ள அதிமுகவும், ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று திமுகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தினகரனை தோற்கடிக்க அதிமுகவும், மதுசூதனனை தோற்கடிக்க தினகரன் அணியும் கடுமையாக போராடி வருகின்றனர். பணப்பட்டுவாடா என்று பாஜகவும், திமுகவும் புகார் அளித்து வருகின்றன. ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து அங்குள்ள பாஜக நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அங்கு திமுகவுக்கும், தினகரனுக்கும் போட்டி நிலவுகிறதாம். எனவே தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று கருத்தை பதிவு செய்து பாஜகவின் தலையில் குண்டை போட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

கருத்துகள் இல்லை: