

விகடன் .com கரூரில்
அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதனின் வீடு மற்றும் குடோனில் பிடிபட்ட நோட்டுக்
கட்டுகளால் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது. பணம் பறிமுதல்
செய்யப்பட்டதைவிடவும், அதை மறைப்பதற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் சிலர்
செய்யும் தில்லுமுல்லுகளால் அதிர்ந்து போய்

இருக்கிறார்கள் அரவக்குறிச்சி
மக்கள். ரெய்டு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை
அழித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.
யார் இந்த அன்புநாதன்?t;அ.தி.மு.க.வின்
ஐவரணி அமைச்சர்களில் சிலரோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்தான் இந்த
அன்புநாதன். அவர்களின் பணத்தை இவர்தான் பதுக்கி வைத்திருந்தாராம்.
திருச்சியில் இருந்து மதுரை செல்வதாக இருந்தால் கூட விமானத்தில்தான்
பறப்பார்.
சமீபத்தில் ஜெயலலிதா கட்சியின் சீனியர்கள் சிலர் மீது கடுமையான
நடவடிக்கை எடுத்தபோது, அன்புநாதன் சம்பந்தப்பட்ட வீடு, தோப்புகளில் ரெய்டு
நடந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்,10 சட்டமன்ற மன்ற தொகுதிகளுக்கான
தேர்தல் செலவு செய்யும் பொறுப்பு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தப் பணத்தைத்தான் அன்புநாதன் பதுக்கி வைத்திருந்தாக சொல்லப்படுகிறது.
கரூர்,
அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்பருக்குச் சொந்தமான குடோனில் இருந்து
சுற்றுவட்டார ஊர்களுக்கு பணம் கடத்தப்பட்டு அங்கங்கே பதுக்கி வைப்பதுதான்
திட்டம். அதற்காக, அன்புநாதன் குடோன் உள்ள ஏரியாக்களில் தினமும் சில
மணிநேரம் கரண்ட் கட் ஆகியிருக்கிறது.
அந்த
நேரத்தில், ’இது மத்திய அரசுக்கு சொந்தமானது’ என்கிற ஸ்டிக்கருடன்
ஆம்புலன்ஸ் வேன்கள் அங்குமிங்கும் சென்றிருக்கின்றன. இதை திகைப்புடன் அந்த
ஏரியா மக்கள் கவனித்திருக்கிறார்கள். இந்த நூதனமான முறையில் பணம் எடுத்துச்
கடத்தப்படும் தகவல் வருவாய்த் துறை அதிகாரிகளுக்குக் கிடைக்கவே, நேற்று
முன்தினம் மாலையில் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையிலான
அதிகாரிகள் ரெய்டுக்குக் கிளம்பினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக தீவிர
ரெய்டு நடந்து வருகிறது. தேர்தல் செலவு கணக்குப் பார்வையாளர் ஆசிஷ், வருமான
வரித்துறை அதிகாரி மணிகண்டன், டி.ஆர்.ஓ அருணா ஆகியோரும் விசாரணையில்
இறங்கியுள்ளனர்.
>சோதனையில்,
12 பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தைக் கட்டும் ரப்பர் பேண்டுகள், சரக்கு
அடைக்கப்படும் காலி பெட்டிகள், நான்கு கார்கள், ஒரு ட்ராக்டர், ஒரு
ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், பிடிபட்டது வெறும்
10.3 லட்ச ரூபாய்தான் என தேர்தல் அதிகாரிகள் சொல்கின்றனர். "பத்து லட்ச
ரூபாய்க்காக மூன்று நாட்கள் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?" எனவும் கேள்வி
எழுப்புகிறார்கள் அரவக்குறிச்சி மக்கள். அங்கிருந்து பணம் இடமாற்றம்
செய்யப்பட்ட நிலையில்தான், ரெய்டு நடந்திருக்கிறது. பணம் எங்கே
கொண்டுசெல்லப்பட்டது என்பதை விசாரிக்கவேண்டும் என்கிற கோரிக்கை
எழுந்துள்ளது. இன்னொரு சாரர், 'அங்கே 100 கோடி ரூபாய் வரை
பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் கணக்கில் காட்டாமல், குறைந்த
அளவு பணத்தை மட்டும் கணக்கில் காட்டினார்கள்' என்று சொல்கிறார்கள்.
>அரவக்குறிச்சி
தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையத்தில் அன்புநாதனின் தோப்பு இருக்கும்
தெருவுக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குடோனுக்குள்
நடக்கும் விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. குடோனின் இரும்புக் கதவில்
இருந்த இரண்டு ஓட்டைகள் வழியாக படம் எடுத்த போட்டோகிராபர்களும்
விரட்டப்பட்டனர். இப்போது அந்த இரண்டு ஓட்டைகளையும் அடைத்துவிட்டனர்.
அன்புநாதனின் வக்கீல்கள் தொடர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, 'தேர்தல்
கமிஷன் உத்தரவின்பேரில்தான் சோதனை நடத்துகிறோம்' என அதிகாரிகள்
தெரிவித்தனர். தற்போது வருமான வரித்துறையினரும் ரகசிய விசாரணையில்
இறங்கியுள்ளனர்.
இதுபற்றி
நம்மிடம் பேசிய கரூர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், " அன்புநாதனின்
குடோன் அமைந்துள்ள தோப்பில் அண்டர்கிரவுண்ட் அறை ஒன்று உள்ளது. பல
இடங்களில் கிணறுகள் உள்ளன. அதற்குள் கட்டுக்கட்டாகப் பணக் குவியலை
பாலித்தீன் கவர்களில் போட்டு மூழ்க வைத்துள்ளதாக கேள்விப்படுகிறோம்.
அதையெல்லாம் அதிகாரிகள் கைப்பற்றவில்லை. இந்த வகையில், 100 கோடி ரூபாய்
வரையில் அடையாளம் காணப்பட்டும், வெறும் பத்து லட்ச ரூபாய் பிடிபட்டதாக
அதிகாரிகள் ஏன் பொய் சொல்ல வேண்டும்? பத்து லட்சத்தை எண்ணுவதற்கு மூன்று
நாட்கள் தேவைப்படுமா? அத்தனையும் பொய்யான தகவல்கள். அன்புநாதனின் அப்பா
கரூரில் பாலிடெக்னிக் கல்லூரியை நடத்த வந்தவர். அன்புவின் தங்கை கணவர்
மூலம்தான் அ.தி.மு.கவின் நெருங்கிய வட்டத்திற்குள் வந்தவர்.
இந்த
ஆட்சியில் அன்புவின் திடீர் வளர்ச்சி அனைவரையும் அசர வைத்தது.
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் உறவினர்தான்
அன்புநாதன். ஆனால், பிற அமைச்சர்களின் தொடர்பு கிடைத்தபிறகு,
செந்தில்பாலாஜியை அன்புநாதன் ஓரங்கட்ட ஆரம்பித்தார். எனவே, அரசியல்ரீதியாக
தற்போது இருவருக்கும் ஏழாம் பொருத்தம். செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி
பறிபோனதற்கே அன்புநாதன்தான் காரணம் என்று உள்ளூரில் பேச்சு உண்டு. கடந்த 15
நாட்களாகவே குடோனுக்குள் ஆம்புலன்ஸ் வந்து போய்க் கொண்டிருந்தது. யாரோ
ஒருவர் சீரியஸாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு, ஆம்புலன்ஸ் சைரனை
ஒலிக்கவிட்டு பணத்தைக் கடத்தியுள்ளனர். குடோனில் ரெய்டு நடந்த அன்றே, கரூர்
பைபாஸ் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த
ஆம்புலன்ஸ் பற்றி எந்தத் தகவலையும் அதிகாரிகள் வெளியில் சொல்லவில்லை.
கடந்த
தேர்தலின்போதும் ஆம்புலன்ஸில் மூலம்தான் பணத்தைப் பட்டுவாடா செய்தனர்.
இந்தத் தேர்தலிலும் இதேமுறையைக் கையாள்கின்றனர். இதுவரையில், குடோனில்
இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 100 கோடியைத் தாண்டும்.
இதுதவிர, ஏராளமான சொத்துப் பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலேயே அதிகப் பணம் புழங்கும் இடமாக அரவக்குறிச்சி உள்ளது.
செந்தில்பாலாஜி இங்குதான் போட்டியிடுகிறார். ஆம்புலன்ஸ் மூலமே தொகுதியின்
முக்கிய இடங்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்து வந்தனர். இதைப் பற்றி
நன்றாகத் தகவல் தெரிந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்தான் தேர்தல் ஆணையத்தின்
கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்.
>ரெய்டு
நடந்த அன்று கலெக்டர் ராஜேஷ் சென்னையில் இருந்தார். மிகத் தாமதமாகத்தான்
ரெய்டு குறித்த தகவலே அவருக்குத் தெரிய வந்துள்ளது. அதற்குள் முக்கிய
அமைச்சர் ஒருவர், கார்டன் பெயரைச் சொல்லிக் கொண்டு சத்தம்
போட்டிருக்கிறார். மூத்த அதிகாரிகள் சிலர் ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு
சில குறிப்புகளைத் தந்துள்ளனர். ’சில அமைச்சர்களின் பினாமியான அன்புநாதனை
தப்பிக்கவிட்டால்தான் தேர்தல் செலவு செய்யமுடியும்’ என்று ரகசிய உத்தரவுகள்
பறந்தது. அதன்பிறகே, கரூர் ரெய்டு பின்னணியில் திருத்தங்கள் நடந்தது"
என்றார் விரிவாக.
அய்யப்பாளையத்தில் என்ன நடக்கிறது? என்ற ரகசியத்தை அவிழ்க்க ஆணையம்
தயாராக இல்லை. அன்புநாதனை கையில் வைத்துக் கொண்டே அமைச்சர்கள் சிலரை
நெருக்கும் முயற்சியில் கார்டன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 100
சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், 100 சதவீத உண்மையை
அரவக்குறிச்சி மக்களுக்கு விளக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக