வெள்ளி, 22 ஏப்ரல், 2016

பெரம்பலூர் ..நரபலி... 6 குழந்தைகளை கொன்று காளிக்கு பலி கொடுத்த கும்பல்

பெரம்பலூர், ஏப். 21 மூலிகைச் செடிகளை வளர்க்கும் இடத்தில் குழந்தையை நரபலி கொடுத்துள்ளனர். ஆறு மனித மூளைகள் ஒரு பையில் கட்டி வைக்கப் பட்டு காளிக்கு பலி கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தி பெரம்ப லூர் முழுவதும் பரவத் தொடங்கியதும் மாவட் டம் முழுவதிலுமே பர பரப்பு பற்றிக் கொண்டது. இது தொடர்பாக இது வரை ஆறு  நபர்களை கைது செய்துள்ளது காவல்துறை.பெரம்பலூர் மாவட் டம், பாடாலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் மூலிகைச் செடிகளை வளர்க்கும் பண்ணை ஒன்று உள் ளது. இந்த மூலிகைச் செடிப் பண்ணையை பெரம்பலூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடத்திவருகிறார்.இது மலைகள் நிறைந்த பகுதி. மலைகளின் அடிவாரத்தில் பத்து ஏக்கர் பரப்பில் மூலி கைச் செடிகளை வளர்த்து வருகிறார். கடந்த சில கால மாகவே இவரது போக்கில் மாற்றம் தெரிந்தது.;“பில்லி, சூனியம், யார் கையையும்  கட்டிப் போட வேண்டும் என்றால் என்னை வந்து பாருங்கள். ஆண்ட வனையே கட் டிப் போடும் திறமை என்னிடம் உள்ளது. வாருங்கள் உங்களுக்கும் கற்றுத் தருகிறேன்’’ என்று இப்பகுதி இளைஞர் களிடம் கார்த்திகேயன், கூறி வந்ததாகச் சொல் கிறார்கள்.


இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் கூறியதாவது:  ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு அந்த ஆள் மீது சந்தேகம்தான். பலமுறை எங்க பசங்க கிட்ட பில்லி, சூனியம் பத்தி பேசியிருக்கான். இதை எங்க மக்கள் பெருசா எடுத் துக்கல. ரெண்டு மாசமா வெளிமாநிலத்திலிருந்து விலை உயர்ந்த கார்கள் எங்க  கிராமத்துக்கு அடிக் கடி வர ஆரம்பிச்சது. இதுல ஏதோ இருக்குன்னு சந்தேகப்பட்டு, ஊர் மொத்தமா ஒண்ணு கூடி அந்த இடத்துக்குப் போய் பார்த்தோம். அங்க பார்த்த விஷயத்தை எப்படி சொல்றது...?

படுபாவிப்பய..சின்ன குழந்தைகளோட கை, கால்களை வெட்டி ஒரு கிண்ணத்துல அடைச்சு வெச்சிருந்தான். அதோட ஆறு மனுச மூளைகளும் அங்க இருந்துச்சு. அதைப் பார்த்து வெலவெலத்துப் போய், காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம் என் றார் பீதி விலகாத குரலில்.

இது தொடர்பாக, கார்த்திகேயன், சித்திக், குலாம்ராசு, ராம் குமார், சலீம், சாதிக் உட் பட அறுவரைக் கைது செய்துள்ளது காவல்துறை. அங்கு நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை, இந்த பகுதியைச் சேர்ந்ததா, இல்லை வேறு பகுதியைச் சேர்ந்ததா என இன்னும்  கண்டறியப்படவில்லை.

இது தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: நடந்த சம்பவம் தொடர்பாக இது வரை அறுவரைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது’’ என முடித்துக் கொண்டனர்.  விடுதலை.com

கருத்துகள் இல்லை: