ஞாயிறு, 8 ஜூன், 2014

ஸ்டாலின்: தேர்தல் கமிஷனுடன் தான் அதிமுக கூட்டணி வைத்தது ! கண்டுபிடிச்சான் பாரு கொலம்பஸ் ?

 நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமைத்து சந்தித்தது. ஆனால் அ.தி.மு.க. எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை. தேர்தல் கமிஷனுடன் தான் கூட்டணி வைத்தது.
தி.மு.க. தலைவர் கலைஞரின் 91–வது பிறந்தநாளையொட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் 2,091 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நேற்றிரவு நடைபெற்றது.
ஒரு பிறந்தநாளில் மனிதனை மனிதனே இழுக்கும் கொடுமையான கை ரிக்ஷாக்களை அழித்து சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினார். இன்னொரு பிறந்தநாளில் ஊனமுற்றோரை மாற்றுத்திற னாளிகள் என்று பெயர் மாற்றி அவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
1949–ல் தொடங்கிய தி.மு.க. 1957–ம் ஆண்டு தேர்தல் களத்தில் நின்று 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962–ம் ஆண்டு தேர்தலில் 52 இடங்களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. 1967–ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. அண்ணா மறைவுக்கு பிறகு 1971–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதுவரை எந்த இயக்கமும் வெற்றிபெறாத வகையில் 184 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1976–ல் நெருக்கடி நிலையால் ஆட்சி கலைக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகு, 1989–ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. 1991–ல் ராஜீவ்காந்தி படுகொலை மூலம் வீண் பழி சுமத்தி தி.மு.க.வை தோற்கடித்தனர்.

1996–ல் ஆட்சி, 2001–ல் தோல்வி, 2006–ல் வெற்றி, 2011–ல் தோல்வி. 2016 வரவிருக்கிறது. அதில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனெனில், தோல்வியை கண்டு துவண்டு போய், மூலையில் முடங்கி போய் கிடக்கும் இயக்கம் அல்ல தி.மு.க.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமைத்து சந்தித்தது. ஆனால் அ.தி.மு.க. எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை. தேர்தல் கமிஷனுடன் தான் கூட்டணி வைத்தது. ஓட்டுக்கு பணம் வாங்கினாலோ, கொடுத்தாலோ குற்றம் என்று அறிக்கை விட்ட தேர்தல் ஆணையர் பிரவீன்குமார், தேர்தலுக்கு பிறகு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை தடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்’’என்று தெரிவித்தார் nakkheeran.in/

கருத்துகள் இல்லை: