புதன், 11 ஜூன், 2014

விஜயகாந்த் கட்சியை பாஜகவுக்கு விற்க தயக்கம் ? ஏன் ? பேரம் படியல்லையா ?

தேர்தல் தோல்விக்கு பின் பா.ஜ.,வுடன் தே.மு.தி.க.,வை இணைப்பதற்கு ஆர்வம் காட்டிய விஜயகாந்த், திடீர் என தயக்கம் காட்டுவதாக தகவல் பரவி இருக்கிறது. இதனால், கட்சிக்காரர்கள் சோர்வடைந்துஇருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த, 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட தே.மு.தி.க., வரும் செப்., மாதத்தில், 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கஉள்ளது.<மக்கள் பிரதிநிதி இல்லை கடந்த, 2006 சட்டசபை தேர்தல் முதல், பல தேர்தல்களை தனித்து சந்தித்து, தனக்கு 10 சதவீத ஓட்டு பலம் இருப்ப தாக நிரூபித்தது அந்த கட்சி. இருந்தும், அந்த கட்சியால், குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு, மக்கள் பிரதிநிதிகளை பெற முடியில்லை.இதனால், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்,அ.தி.மு.க.,வுடன் கூட்டணிஅமைத்து, 43 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 தொகுதி களில் வெற்றியும் பெற்றது. இந்த வெற்றி மூலம், தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, சட்டசபையில் எதிர்க்கட்சிஅஸ்தஸ்தையும் பெற்றது.  இப்போ இருக்கற விலை இன்னும் குறைந்து தான் போகும், உடனே விற்றுவிட்டால் துட்டு பார்க்கலாம்? அப்புறம் காசு கொடுத்தாலும் யாரும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்?i
ஆனால், ஆளும்கட்சியோடு கடுமையான மோதல் ஏற்பட்டுவிட, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகினார்விஜயகாந்த்.இதனால், வெறுப்படைந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களில் பலர், ஆளும்கட்சி ஆதரவு நிலை எடுத்து, செயல்பட ஆரம்பித்தனர். கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திர னும் கட்சியை விட்டு விலகி, அ.தி.மு.க,வில் இணைந்தார்.இந்த சூழ்நிலையில், லோக்சபா தேர்தல் வர, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் கட்சி படு தோல்வி அடைந்தது. ஓட்டு வங்கியிலும் பெரும் சரிவு ஏற்பட்டது.

இதனால்,கட்சிக்கு எதிர்காலம் இல்லை என முடிவெடுத்து, கட்சி நிர்வாகிகள், லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆகியோர், மாற்று முகாம் தேடி செல்வதற்கு ஆயத்தமாவதாக தகவல் பரவியது. அதனால், கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்து விடலாம் என்கிற யோசனை, விஜயகாந்துக்கு சொல்லப்பட, அது குறித்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.ஆனால், விஜயகாந்த இந்த முயற்சிக்கு திடீர் என, முட்டுக்கட்டை போட்டு விட்டதாக, கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது.

விஜயகாந்தின் திடீர் மனமாற்றம் குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்களில் கூறியதாவது:
ஏற்கனவே எம்.ஜி.ஆர்., பெயரில் தனிக்கட்சி நடத்தி வந்த முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர், கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்தார். ஆனால், இரண்டு ஆண்டுகள் கூட அங்கே அவரால், முக்கியத்துவத்துடன் செயல்பட முடியவில்லை. இதனால், அவர் அங்கிருந்து வெளியேறி காங்கிரசில் இணைந்தார். எல்லோரையும் எளிதில் அனுசரித்துப் போகக்கூடிய அவராலேயேபா.ஜ.,வுக்குள் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்போது, விஜயகாந்த் போன்ற முன் கோபியால், நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்க முடியாது.

பட வேலை முடிந்ததும்...
இந்த விஷயத்தை பலரும் விஜயகாந்திடம் எடுத்துச் சொன்னார்கள். அதன்பின் தான், அவர் பா.ஜ.,வில் கட்சியை இணைக்கும் எண்ணத்தை, மொத்தமாக மாற்றிக் கொண்டு விட்டார். கட்சியை மறுசீரமைக்கும் எண்ணத்தில் இருக்கிறார். மகன் நடிக்கும், 'சகாப்தம்' பட வேலைகள் முடிந்ததும், கட்சியை சீரமைக்கும் பணியில் இறங்குவார். இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-நமது சிறப்பு நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை: