வியாழன், 12 ஜூன், 2014

அஜீத் தனது 12 பணியாளர் களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.

நடிகர் அஜீத்குமார் தன்னிடம் வேலை செய்யும் 12 பணியாளர் களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.
நடிகர் அஜீத் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் தன்னிடம் பணிபுரியும் வீட்டுக் காவலாளி, சமையல்காரர்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கி அவரவர்களின் பெயரில் சொந்தமாக வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாக நடந்து வந்த இந்த புதிய வீடுகள் கட்டுமானப்பணி தற்போது முழு வேலைகளும் முடிந்து கிரகப் பிரவேசத்திற்கு தயாராய் உள்ளது.
அஜீத் வீட்டில் பணிபுரியும் 12 பணியாளர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் விரைவில் குடியேறவுள்ளனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை: