
ஒப்பந்தப்படி பிரேசில் அல்ஸ்டாம் ரெயில் பெட்டி தொழிற்சாலையிலிருந்து கடைசியாக கடந்த 8–ந்தேதி கொண்டுவரப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட 2 ரெயில்கள் சுங்கசோதனைக்கு பின்னர் துறைமுகத்திலிருந்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில்வே பணிமனைக்கு நேற்று அதிகாலை ராட்சத லாரிகளில் கொண்டுவரப்பட்டன.
இந்த ரெயில்கள் 800 மீட்டர் சோதனை ஓட்டப்பாதையில் இறக்கப்பட்டு, மெட்ரோ ரெயில்வே நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பார்வையிட்டனர். பின்னர் 2 ரெயில்களும் முதல் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ரெயில்களின் எண்ணிக்கை உயர்வு
இந்த 2 ரெயில்கள் வருகையால் கோயம்பேடு ரெயில்வே பணிமனையில் ரெயில்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கோயம்பேடு பணிமனை ஒரு பரபரப்பான ரெயில்வே பணிமனையாக மாறி உள்ளது. விரைவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் இருந்து மேலும் 2 ரெயில்கள் கோயம்பேடு பணிமனைக்கு வரஉள்ளன.
மேற்கண்ட தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர். maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக