செவ்வாய், 3 டிசம்பர், 2013

இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு

வங்க கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி சென்னையில் கனமழை பெய்தது. காலையில் கனமழை பெய்தததை அடுத்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

கருத்துகள் இல்லை: