ஞாயிறு, 6 ஜனவரி, 2013

மீண்டும் மீண்டும் டெல்லியில் !!! காணாமல் போன பெண் கொலை


டெல்லி நொய்டா சோத்பூரை சேர்ந்த கால் சென்டரில் வேலைபார்க்கும் ஒரு பெண் தனது வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். இரவு 9 மணிக்கு தனது தோழிகளுடன் அலுவலகத்தை விட்டு அவர் காலனிவரை வந்திருக்கிறார். பிறகு தோழிகள் பிரிந்து சென்று இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பீதியடைந்த பெற்றோர்கள் தேட ஆரம்பித்தனர். போலீசாரையும் அவர்கள் அணுகியிருக்கிறார்கள். இந்நிலை யில் இன்று காலை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள புஸ்தா நகரில் உடல் முழுவதும் காயங்களுடன் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆடைகள் கலைந்த நிலையில் கிடந்த அவரை பிரதேச பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.&கொலை செய்வதற்கு முன்னர் அவர் கற்பழிக் கப்பட்டி ருக்கலாம். நாங்கள் போலீசாரை அணுகியபோது எங்கள் குற்றச்சாட்டை பதிவு செய்து, தேடியிருந்தால் எங்கள் மகளை இழந்து இருக்க மாட்டோம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: