வியாழன், 21 ஜூலை, 2011

மாணவர் சண்டையில் மாணவனொருவன் மரணம்,மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவிற்கு உட்பட்ட காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அடங்கும் கல்லடி பிரதேசத்தில் விளையாட்டு மைதானத்தில் வைத்து மாணவனொருவனை சக மாணவவன் தாக்கிய போது கீழே விழுந்து ஒன்பதாம் ஆண்டு மாணவனொருவன் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரித்தனர்.

இச்சம்பவத்தின் போது பாடசாலை மாணவனான ஆர்.டலீமா என்ற மாணவனே மரணமானவராவார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சகமாணவன் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மரணமானவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களிடேயே வன்முறை கலாசாரம் மிக ஆழமாக வேருன்றி இருப்பதை இச்சம்பவம் நன்கு எடுத்துகாட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் தமிழர் குடியேறிய நாடுகளிலும் காணக்கூடியதாக உள்ளது.
பிரான்சில் பல ஆண்டுகளாக வசிக்கும் ஒரு தமிழ் பெண்மணி தனது மகளை தமிழர்கள் அதிகம் கடை வைத்திருக்கும்   லா சப்பல் என்ற பகுதிக்கு கூட்டிக்கொண்டு செல்லவே முடியாது தமிழ் கிழக்காலிகளின் இது அடாவடித்தனம் தாங்க முடியாதுள்ளது என்றார்.
புலன்பெயர் நாடுகள் எல்லாம் நம் வங்குரோத்து  வாலிபர்களின் சண்டித்தனம் பேர்பெற்றது. இந்த வாலிபர்களை கொம்பு சீவி தமது பயமுறுத்தல் காசு பறித்தல் போன்ற இழிசெயல்களுக்கு பயன்படுத்திய புலிகளின் மற்று மொரு பயங்கர வாத படைப்புக்கள்தான் இது போன்ற வன்முறை மாணவர்கள்.

கருத்துகள் இல்லை: