வியாழன், 21 ஜூலை, 2011

அரசியல் விபச்சாரம் நடத்தும் கூத்தமைப்பு எமது சாபக்கேடுகளில் ஒன்றாகும்.

மாவையின் கூச்சலை கேளுங்கள்,
தேர்தல் விதிமுறைகளை ஜனாதிபதியே அப்பட்டமாக மீறியுள்ளார். ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆட்திரட்டல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் ஆணையாளரோ நலத்திட்டங்கள், வேலைத்திட்டங்கள், வேலைவாய்ப்புக்கள் நிதிஒதுக்கீடுகள் என்பவை தேர்தல் விதிமுறைகளை மீறுபவை என அறிவித்துள்ளார். ஆனால் அவை அனைத்தையும் ஜனாதிபதியே மீறியுள்ளார் என  சேனாதி குற்றம் சாட்டியுள்ளார்.

புலிகளின் தேர்தல்கள் மூலம் பல்லாண்டுகாலம் பதவி சுகத்தை அனுபவித்த இந்த மாவையும் இவரது குழுவினரும் எந்தக்காலத்திலும் புலிகளின் ஜனநாயக மேம்பாடுகளை பற்றி கேள்வி எழுப்பாமல் கை நடுங்கி கால் வெடவெடத்து ஏதாவது போட்டுத்தாருங்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை காலை தொடர்ந்து நக்குவோம். தப்பிதவறியும் எமது தலையில் போடாவிட்டால் போதும் என்று நாயிலும் கீழான அரசியல் நாடாத்திவிட்டு இன்று எத்தனையோ கூப்பாடுகள் கூச்சல்கள் போடுகிறார்கள். இந்த சுதந்திரம் யாரால் வந்தது?

மக்களுக்கு தெரியும் ஆனால்  சிலருக்கு என்றுமே எதுவும் புரியாது உதைப்பவனின் கால்களை முத்தமிடும் அடிமைத்தனம் ஆழமாக வேருன்றி இருக்கும். அப்படிப்பட்ட  பேதைகளை  வைத்து அரசியல் விபச்சாரம் நடத்தும் கூத்தமைப்பு எமது சாபக்கேடுகளில் ஒன்றாகும்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா தனது பிள்ளைகளின் புலமைப்பரிசில் குறித்து அரசாங்கத்தின் பின் கதவு தட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களிடம் சலுகை பெற்றுக் கொண்டதாக அண்மையில் உண்மையான தகவல் ஒன்று வெளி வந்தது. அது ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இது போலவே சப்ரா சரவணபவனும் தனது வாரிசு ஒன்றை அரசாங்கத்தின் பின் கதவு தட்டி ஐக்கிய அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: