புதன், 24 மார்ச், 2010

கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குற்றமல்ல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி


கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குற்றமல்ல, இணைந்து வாழ்வதும் குற்றமல்ல என்று நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்த கருத்துக்களை கிட்டத்தட்ட 5 மணி நேரம் முன்வரிசையில் உட்கார்ந்து மகிழ்ச்சி பொங்க கேட்டாராம் நடிகை குஷ்பு.

தன் மீது தமிழக கோர்ட்களில் தொடரப்பட்ட 22 கிரிமினல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி குஷ்பு தொடர்ந்த சிறப்பு விடுப்பு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டது.

இந்த விசாரணையையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு கோர்ட்டுக்கு வந்து இருந்தார். சல்வார் கமீஸ், துப்பட்டா அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

கோர்ட்டில் முன் இருக்கையில் உட்காருவதற்கு அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக இங்கு மனுதாரர்கள் அமர வைக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பு காரணமாக இங்கு யாரையும் அமர வைக்க மாட்டார்கள். ஆனால் குஷ்புவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டிருந்தது.

அங்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் உட்கார்ந்து விவாதத்தை கேட்டார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கருத்து தெரிவித்தபோது அவரது முகத்தில் மகிழ்ச்சி பூத்ததாம்.

நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாராம் குஷ்பு.

கருத்துகள் இல்லை: