செவ்வாய், 23 மார்ச், 2010

கல்யாணவீட்டு ல் நடந்த சண்டையோ மிகவும் எம்மவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படியொரு சண்டைக் காட்சியை சுவிஸ் பொலிஸ்காரர்களே

நம்மட நாட்டில சண்டை இப்பொழுது ஓய்ந்துவிட்டது.      ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே நடக்கின்ற சண்டைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.    
குடும்ப சண்டையிலிருந்து,  பிரதேசம்,       குழு,  ஊர், வட்டாரம், சாதி, என ஒருவருக்கொருவர் பகைமை காட்டி, பழைய கோபதாபங்கள்,  நானா?, நீயா? பெரியவர், சின்னவர் என பழைய பஞ்சாங்க கதைகள்பேசி, கங்கணம் கட்டிக்கொண்டு  புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும்போது வெட்கப்படவேண்டிய விடயம். ஆனால் இந்த சண்டைகள் இந்த சந்ததிவரை தொடரும்..
நேற்று (21.03.10) சுவிஸ் நாட்டில் 'அறோ' கன்ரோன் என்ற இடத்தில் புங்குடுதீவு மக்களின் கல்யாணவீட்டு   நிகழ்சியொன்றில்  நடந்த சண்டையோ மிகவும் எம்மவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படியொரு சண்டைக் காட்சியை சுவிஸ் பொலிஸ்காரர்களே சரித்திரத்தில் சந்தித்திருக்கமாட்டார்கள்.  கிட்டதட்ட 60மேற்பட்ட பொலிசாரும்,   3அம்புலன்சு வண்டிகளும்,   சுவிஸ் பத்திரிகை நிருபர்களும்  அங்கு நடந்த சண்டையில் பிரசன்னமாகியிருந்தார்கள் என்றால் நீங்களோ கற்பணை பண்ணி பாருங்கள் இந்த சண்டையானது எப்படி நடந்திருக்கும் என்று...
புங்குடுதீவை சேர்ந்த,    அதுவும் ஒரேசொந்தக்காரக் குடும்பத்தை சேர்ந்த இரு வீட்டாரின் கல்யாணவீட்டு நிகழ்சியில்தான் இந்த கைகலப்பு நடந்திருக்கிறது.

முன்பு 83, 85களில் புங்குடுதீவார், யாழ்பாணத்தார் என்று சண்டை பிடித்தார்கள். பின்பு படிப்படியாக கல்யாணம் கட்டி பிள்ளை, குட்டி என்று வந்தவுடன் எல்லோரும் ஒதுங்கிகொண்டார்கள். அது மட்டும் காரணமல்ல அன்றைய நேரத்தில் சுவிஸ் பொலிசாரின் கட்டுப்பாடுகள் மிகவும் சாந்தமாக இருந்தது ஆனால் இன்றோ    அயல் நாட்டவரின் மீது சுவிஸ் பொலிசாரின் சட்டதிட்டங்கள் கடுமையாகப்பட்டுள்ளதால் நம்மவர்கள் இப்பொழுது அடக்கி வாசிக்கிறார்கள்.
இப்ப நமது நாட்டில சண்டை முடிந்துபோனதால அதன் தொடர்ச்சியாக இங்கே தொடங்கிவிட்டார்கள் போல்தான் தென்படுகிறது. நேற்றைய தினம் நடந்த சண்டையானது சிங்களவனுக்கோ தமிழனுக்கோ அல்லது யூகோகாரர்களிற்கும் இடையில் நடந்த சண்டையல்ல. ஒரே ஊர்காரர்களிற்கிடையில் (புங்குடுதீவு) ஒரே வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அதுவும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சொந்தகாரர்களின் கல்யாண வீட்டில் கலந்துகொள்ள வந்தவர்களிற்கிடையில் நடந்த சண்டையாகும்.
நோர்மலாக கல்யாண வீடு, சாமத்திய வீடு, பிறந்தநாள் வீடு போன்ற நிகழ்சிகளில் ஆம்பிளைகள் நல்லா குடித்து போட்டு அவர்களின் வீரத்தை காட்டுவார்கள் அது வழமையானதுதான். இப்பொழுதெல்லாம் கல்யாணவீடு போன்ற நிகழ்சிகளிற்கு குடிப்பதற்கு யூஸ் போத்தில், தண்ணி போத்தில்  வாங்குவதைவிட விஸ்கி போத்தில்கள்தான் கூடுதலாக வாங்குகிறார்கள். பியர் இருக்கு குடிக்கிறீங்களா என்று கேட்டால் என்ன பகிடியா விடுகிறீங்க என்று கேட்கிற காலம் வந்துவிட்டது ஒன்லி விஸ்கிதான் இப்ப எல்லாரும் குடிப்பாங்களாம்.  தொடக்க காலங்களில்  5 போத்தில் அல்லது 10போத்தில் வாங்கினவர்கள். இப்ப சொல்லுறாங்கள் அண்ணை 50 போத்தில் காலியாகிவிட்டது என்று. அதுவும் பிறந்த நாள் விழா என்றால் சொல்ல தேவையில்லை.
நேற்று நடைபெற்ற சண்டையோ "மது" போதையால் வந்த சண்டையல்ல மாறாக "மாதுக்களால்" வந்த சண்டையாகும்.
இந்த சண்டையோ மிகவும் சுவாரிசமான சண்டையாகும். ஏன்எனில் அங்கு நின்ற ஆம்பிளைகளும் ஆம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம்,   பொம்பிளைகளும் பொம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம். இதில் என்ன விசேசமான விடயம் என்றால் நீங்கள் நினைப்பதுபோல் பொம்பிளைகளும் பொம்பிளைகளுக்கும் இடையில் நடந்த சண்டை வெறும் வாய் சண்டையல்ல.
பொம்பிளைகள் முதலில் கடும் சுத்தமான (தூசணம்) நல்ல தமிழில் வாய் சண்டையை தொடங்கினாளவையாம் தீடீரென கைகலப்புக்கு மாறி, கட்டியிருந்த சாறிகளையும் ஆளுக்கு ஆள் பிடித்து இழுத்து நின்று அடிபட்டவளவையாம். அங்கு நின்றிருந்த அமைதியான பெண்கள் (நூற்றுக்கு மேற்பட்ட), இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளும் மிகவும் பயந்து போய் யாபேரும் ஒன்றாக  ஐயோ, ஐயோ எனக் குளறிக் கூக்கிரலிட்டு ஓரே நேரத்தில் பொலிசுக்கு ரெலிபோன் செய்தார்களாம்.
கல்யாணவீட்டு மண்டபத்துக்கு பக்கத்திலிருந்த சிறிய பொலிஸ் நிலையத்தார் ஓரேநேரத்தில் இவ்வளவுபேர் அழுதுகுளறி ரெலிபோன் செய்ததால் அவர்களும் சரியாக பயந்துபோய் அந்த மாநிலம் முழுவதும் தகவல் அனுப்பி கிட்டதட்ட 10-20 கார்களில் கல்யாண மண்டபம் நோக்கி விரைந்து வந்துதானாம் கலவரத்தை அடக்கியவர்கள்.
பொம்பிளைகள் போட்ட சண்டையை (அந்த கண்கொள்ளா காட்சியை) கலகம் அடக்க வந்த பொலிஸ்காரர்களோ கண்டு அதிசயத்து போனாங்களாம். பொலிசார் வந்த பிறகும் பெண்டுகள் சண்டையை நிறுத்தவில்லையாம். நாலைந்து பொம்பிளையளை பொலிஸ்காரர் அவர்களின் கைகளை பின்னால் பிடித்து கைவிலங்குபோட்டு ஒரு மூலையில் கொண்டுபோய் கடுமையாக எச்சரிகை செய்து இருத்திய பிறகுதானாம் பொம்பிளைகளின் சண்டை அடங்கியது. சுவிஸில் முதல்முறையாக தமிழ் பெண்களுக்கு பொலிசார் கைவிலங்கு போட்டதை இந்த நிகழ்ச்சியில்தானாம் பார்தவர்களாம் என அங்கு போனவர்கள் சொல்லுகிறார்கள். அதோடல்லாது நிறைய ஆம்பிளைகளையும் கைவிலங்கு போட்டு பொலிசார் கொண்டுபோனவங்களாம்.
மாப்பிளையும், பொம்பிளையும் போட்டிருந்த மாலைகளையும் கழட்டி எறிந்துவிட்டு தாங்கள் தப்பினால் காணும் என்ற ரீதியில் காரில் ஏறி 'எஸ்கேப்' ஆகிவிட்டாங்களாம். நல்ல காலம் இந்த சண்டை கல்யாணவீட்டு நிகழச்சி இடையில் நடக்கும்போது தொடங்கியிருக்கிறது. அல்லாவிட்டால் மொய் கொடுக்கிற கட்டத்தில் நடந்திருந்தால் யாராவது மொய்பெட்டியை அடித்துகொண்டு போயிருப்பாங்கள். இந்த சண்டையில் சில பெண்கள் தாங்கள் போட்டிருந்த தாலிக்கொடியிலிருந்து பல நகைகளையும் இழந்து தவித்ததாக அங்கு போனவர்கள் சொல்லுகிறார்கள்.
அந்த நிகழ்சியில் கலந்துகொண்ட சில ஊர்க்காரர்களை நாம் விசாரித்தபோது தெரிந்துகொண்டவைகள்....
புங்குடுதீவு மக்கள் சுவிஸில் நிறையபேர் வாழ்கிறார்கள். 30வருடத்தில் எத்தனையோ ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை எங்கள் ஊர்காரர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்பொழுதும்,  ஒவ்வொரு சனி, ஞாயிற்று கிழமைகளிலும் தவறாமல் புங்குடுதீவு மக்கள் எதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்றுதான் முதல்முதலாக இப்படியொரு சண்டையை பார்தோம் என்கிறார்கள். ஆண்கள் யாராவது சண்டை பிடித்திருந்தால் அவர்களை நாங்கள் மண்டபத்துக்கு வெளியில் கொண்டுபோய் விட்டிருப்போம். இந்த நாகரிக வளர்ச்சியடையாத, படிப்பறிவில்லாத சிலபெண்கள் சண்டை பிடித்ததால்தான் இவ்வளவுதூரம் பிரச்சனை வந்தது.
சண்டையில் கலந்துகொண்ட இந்த வட்டாரத்து பெண்களும் சரி, ஆண்களும் சரி ஊரிலேயே இப்படிதான் ரவுடிகளாக இருப்பார்கள் எனவும்,(அவர்கள் குறித்த வட்டார இலக்கத்தை தவிர்த்துள்ளோம்) இங்கு வெளிநாட்டுக்கு வந்தபிறகும் இவங்கள் திருந்தவில்லை என அங்கு நின்ற மற்றைய வட்டாரத்தினர்கள் ஆதங்கப்பட்டு சொன்னார்கள். இப்படியான பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டும் என்றால் ஊருக்குள்ளும், சொந்தங்களுக்குள்ளும் கல்யாணம் பண்ணகூடாது.
பாருங்கள்! எவ்வளவோ காசுசெலவழித்து, அழைப்பிதல் அடித்து, ஊருக்கு எல்லாம் 'காட்' கொடுத்து, எவ்வளவோ ஒழுங்குகள் செய்து கல்யாணம் செய்வது என்பது வாழ்வில் ஒருமுறைதான்.  இந்த சுவிஸ் நாட்டில் இருந்து இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இதை எங்களால் நம்பவே முடியவில்லை. இந்த சம்பவத்தால் முழு புங்குடுதீவு மக்களுக்கும் அவமானம் என அங்கு நின்ற  பலர் பேசிகொண்டிருந்தார்கள்.
தகவல் தந்தவர்
கி.சத்தியா-சுவிஸ்

கருத்துகள் இல்லை: