மின்னம்பலம் -Selvam : ஆதிதிராவிடர், பழங்குடியின மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழக அரசு இன்று (பிப்ரவரி 3) உத்தரவிட்டுள்ளது. tamilnadu government education loan
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972 – 1973 முதல் 2002 – 2003 வரையிலான காலங்களில் மருத்துவம் அல்லது மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்பட்டது. அதேபோல, 2003 – 2004 முதல் 2009 – 2010 வரையிலான காலங்களிலும் கல்விக்கடன் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48.95- கோடியை சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக