செவ்வாய், 17 அக்டோபர், 2023

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் - திருநாவுக்கரசர்

 மாலை மலர் :  புதுக்கோட்டை  திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநா வுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் புதுக்கோ ட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுரியில் நடைபெற்றது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டியளி த்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-தலைவர் மாற்றப்படலாம்தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடு கிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு,மகளிர் உரிமை மாநாடு பெரியார் அண்ணா கால த்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எடுக்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய் வும் இந்த மாநாடு நடை பெறுகிறது.


கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை, அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றபடாலாம்,

மீண்டும் போட்டியிட விருப்பம்

அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்க படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல் வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.நான் மீண்டும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டி யிட விரும்புகிறேன். அத ற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்ப கிறேன்.நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோ னதை தடுத்து இருப்பேன்,பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறு பான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.5 மாநில தேர்தல் நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன் னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநில ங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன் னாள் எம்எல்ஏ சுப்பு ராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்தி ரசேகரன், சூர்யா பழனி யப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

கருத்துகள் இல்லை: