ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

யாழ்ப்பாணத்தில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது !

 தேசம் நெட் : 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகிலிருந்து 23 பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் 62 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அவற்றின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: