சனி, 3 பிப்ரவரி, 2024

போலி இந்திய (குஜராத்) மருந்து இறக்குமதி - இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது !

தேசம் நெட் ;இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்த மருந்து ஊழல் குற்றச்சாட்டில் இலங்கை  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது !
ுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளையடுத்து வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி அவர் அங்கு சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: