செவ்வாய், 12 செப்டம்பர், 2023

கேரளா முதலமைச்சர் திரு பினராயி விஜயன் செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏற்று இலங்கை வருகிறார்

May be an image of 2 people and wedding

  thinakaran.lk -    Rizwan Segu Mohideen :  கேரளா முதலமைச்சர் திரு பினராயி விஜயன் செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏஏற்றார்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனை சந்தித்தார்.
கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (11) திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் 1970ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மலையக மக்களில் 1480 குடும்பத் கேரளாவில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் R.P.L. (Rehabilitation Plantation limited) நிறுவனத்திலும், கேரளா வன அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திலும் தொழில்புரிகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிர்சசினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் பணிகளுக்கு கேரள முதல்வர் பிணறாயி விஜயன் வாழ்த்துக் கூறியதுடன், ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கு வருகை தருமாறு விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதாகவும் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை: