வெள்ளி, 31 டிசம்பர், 2021

672 ஆதார் கார்டுகளை வைத்து 672 தடவைகள் கடன் .. திருவண்ணாமலையில் ரத்தன் லால் (ராஜஸ்தானி) கைவரிசை

 Raja Rajendran Tamilnadu   : பஞ்சம் பொழைக்க வந்த ஒரு ராஜஸ்தானி ரத்தன்லால், எளியோர்களின் 672 ஆதார்கார்டுகளைப் பெற்று, ஒவ்வோர் ஆதார் அட்டைக்கும் ஐந்து சவரனுக்கு கொஞ்சம் குறைவா நகைகளை வைத்து கடன் பெற்றிருக்கிறானாம் !
இது திருவண்ணாமலையில் நடந்த ஒரு சாம்பிள்.
கூட்டுறவு சங்க வங்கிகளில் ஐந்து சவரனுக்கு குறைவான நகைகளை அடமானம் வைத்தோருக்கு கடன் தள்ளுபடி என்கிற அறிவிப்பை முன்கூட்டியே அறிந்து, இதைச் செய்திருக்கிறான் அந்த மார்வாடி !
இதை இந்த மார்வாடி மட்டும் செய்யாமல் ஏகப்பட்ட ஒட்டுண்ணிகள் செய்திருக்கின்றன, வாடிக்கையாக செய்தவண்ணமுமுள்ளன !
இதை துல்லியமாக ஆடிட் செய்து இவர்களைப் போன்றோருக்கு தள்ளுபடி இல்லை என்றதும், அதையே தள்ளுபடி ரத்து என்று மடைமாற்றுகிறார்கள் சங்கிகள் & ர ரக்கள் !
ரத்தன்லால் ஊழலை பகிரங்கமாக சபையில் சொன்னது அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்கள் !

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும், நான்காயிரம் வரையில் பழைய நோட்டுக்களுக்கு புது தாள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்த போது, தலைக்கு இவ்வளவு கூலி என நிர்ணயித்து அவரவர் ஆதார் எண்களின் மூலம் பல கோடிகளை இதே மாஃபியா கருப்பு பணத்தை வெள்ளையாக்கி, அதை கமிஷனுக்கு கை மாற்றியது !
ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் பல்லாயிரம் ரூபாய்க்கு விற்றதும் இதே மாஃபியா கும்பல்தான் !
இந்த ஊழல் குப்பைகள் ஒன்றாச் சேருமிடம் இன்று எந்தக் கட்சி தெரியுமா ?
ஆம்.  அத்தனை மொள்ளமாரி, முடிச்சவிக்கிகளும் பாரதிராஜா கட்சியில்தான் இருக்கிறார்கள்.  அதுவும் அவர்களைக் கவசவண்டியாய் உள்ளே வைத்துக் காப்பாற்றுகிறது !
நம்ம மாநிலத்திலேயே இவ்வளவு துணிவாகச் செய்பவன்கள், வடக்கு, கிழக்கு, மேற்கு மாநிலங்களில்  என்னவெல்லாம் சுரண்டி இருப்பான்கள் ?
ஜார்க்கண்ட் அரசு இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் 25 ரூபாய் தள்ளுபடியில் பெட்ரோல் என அறிவித்திருக்கிறது.  இதை இந்த மாஃபியாக்கள் நம் கற்பனைகளையும் விஞ்சி பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லவா ?
இப்படி திருடி கொள்ளையடிக்கும் பணத்தில் இவர்கள் எதிர்கட்சிகளின் எம் எல் ஏக்கள், எம் பிக்களை வாங்குகிறார்கள் !
கடந்த நான்கு வருடங்களில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்த குளம் போல, இந்த படர்தாமரைகள் தமிழக தேகம் முழுக்க பரவியுள்ளன !
தமிழ்நாட்டில் இந்த வந்தேறி மாஃபியாக்களை பூண்டோடு வேரறுக்காவிடில், எளியோர்களின் ஆதார் கார்டுகளைக் கொண்டு நாளை, நம் மண்ணை என்னவும் செய்யமுடியும் என்பது கசக்கும் உண்மை
கோவை மண்டலமெங்கும் சங்கி கட்சிகளின் முக்கியப் பொறுப்புகளில் அவன்கள் இருப்பதுதான் பெரிய சான்று !

கருத்துகள் இல்லை: