சனி, 19 பிப்ரவரி, 2011

வல்வை மீனவர்கள் ஆறுபேரை காணவில்லை! இந்திய மீனவர்களினால் கடத்தப்பட்டார்களா என்ற சந்தேகம்

கடற்தொழிலுக்கு சென்ற வல்வை மீனவர்கள் ஆறுபேரை காணவில்லை!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்தொழிலுக்கு புறப்பட்டு சென்ற ஆறுபேர் கரை திரும்பாததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேறறு காலை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்தொழிலுக்கு என புறப்பட்டவர்களில் குறிப்பிட்ட மூன்று படகுகளில் சென்ற ஆறுபேரும் கரை திரும்பாதமையினால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் முதல் இவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்திய கடற்தொழிலாளர்கள் 136பேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை மாதகல் பகுதிகளில் வைத்து யாழ் கடற்தொழிலாளர்களினால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரோலியாக இவர்கள் இந்திய கடற்தொழிலாளர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது தாக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: