சனி, 18 நவம்பர், 2023

நடிகை ஜெயந்திக்கும் செல்வநாயகத்திற்கும் என்ன தொடர்பு?


 Annesley Ratnasingham
: துன்பம் மலையகத்தை தேடி செல்கிறதா ?? அல்லது துன்பத்தை மலையகம் விலைக்கு வாங்குகிறதா ??..
ஜெயந்தி" என்ற சொல்லே சிக்கல் ....மலையக மக்களையும் கடவுளும் காப்பாற்ற முடியாது ..
ச.செ .ச .இளங்கோவன் என்ற SJV செல்வநாயகத்தின் பேரனின் அரசியல் பிரவேசத்துக்கு பாவிக்கப்படும் நிகழ்வு ...பேரனை போலவே மலையக மக்களை பகடை காயாக வைத்து ஆரம்பம் நடக்கிறது ...
Rathnakumar Se : மலையக மக்கள் வீண் வம்பை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
Annesley Ratnasingham  : Rathnakumar Se ...அநியாயமாக போக போகிறார்கள் .
Letchuman Shanmuganathan :  மலையகத்தானுக்கு அரசியல் என்று ஒன்று இல்லை. அரசியல் செய்வதற்காக எதையும் செய்வார்கள். புதிய கற்ற சமூகமும் அரசியல் செய்வதற்கு இவர்கள் பின்னால் செல்வது வருத்தமாகவே இருக்கிறது.
Annesley Ratnasingham : Letchuman Shanmuganathan ....மிகவும் மிகவும் கவலைக்குரிய விடயம்....I think Money talks...

Letchuman Shanmuganathan : Annesley Ratnasingham yes, செல்வநாயகம் பவுண்டேசன் மலையகத்தில் ஏன் மூக்கை விடுகிறது என்று யோசிக்க வேண்டும்.
Annesley Ratnasingham
Letchuman Shanmuganathan ...இது திட்டமிட்ட ஒரு சதி ...இதை பற்றி சரியாக ஆராய்ந்து நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் ...
Vinoth Balachandran : ஆபத்தின் அறிகுறி.
Annesley Ratnasingham : Vinoth Balachandran ...இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் ....Saumiyamoorthy Thondaman அவர்களின் பெயருக்கு கேடு ..
Letchuman Shanmuganathan :  இப்போ எதற்கு செல்வநாயகம்.. மலையகத்தில் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.
ஏற்கனவே இ.தொ.கா 2000ம் ஆண்டு மலையகம் எங்கும் பிரபாகரன் படத்தையே மேடை எங்கும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அந்த மேடையில் ரணிலும் உரையாற்றினார்.
அடுத்து பல இயக்கங்களும் புளட் இயக்கமும் மறைவாக மலையக மக்கள் முன்னணி சந்திரசேகரனை அரசியல் களத்துக்கு கொண்டு வந்தது.
அந்த தேர்தலில் சந்திரசேகரன் தோல்வி அடைந்ததோடு புலிகளுடனான தொடர்ப்பு ஏற்பட்டது.
அடுத்து புலிகளின் குண்டு வெடிப்புகளை அடுத்து சந்திரசேகரன் உட்பட சகாக்கள் சிறை சென்றனர்.

ஏதோ செய்த புண்ணியத்தில் செல்லசாமியின் உதவியில் தொண்டமானுக்கு முரண்பட்டு கொண்ட ஜனாதிபதியாக இருந்த டீ.பி விஜயதுங்க விடுதலை வழங்கினார்.
இல்லையேல் சிறையிலேயே களியை தின்று காலத்தை கழிக்க வேண்டி வந்திருக்கும்.

Annesley Ratnasingham  : Letchuman Shanmuganathan . இது கடுமையான சிக்கலை கொண்டு வரும் மக்கள் விழிப்படைய வேண்டும்..
Charles J Forman : மலையக மக்கள் எந்த இழவுக்குப் போனால் எங்களுக்கென்ன?

Sithambaram Drmogan :  நான் யாழ்ப்பாணத்திலிருந்து கலாநிதி .சிதம்பரம் மோகன் கூறுகிறேன்
திரு .s.j.v.செல்வநாயகம் மலையக தமிழ் உறவுகளுக்கு ஒன்றும் பெரிதாகவே சிறிதாகவோ செய்யவில்லை

மலையக மக்களின் குடியுரிமை பறிபுக்கு ஆதரவு.அழித்துவிட்டு
அவருக்கான தேவையின் போது g.g.பொன்னம்பலம் வாக்குரிமை பறிப்பு க்கு ஆதரவளித்தபோது வெளியில் வந்து தமிழரசு கட்சியினை ஆரம்பித்தார்.
அதுவும் தமிழில் தமிழரசுக் கட்சி.ஆங்கிலத்தில் ஃபெடரல் பார்ட்டி
சிங்கள.மக்களை சமாளித்து யாழ்ப்பாண மக்களை ஏமாற்றியது மட்டுமல்ல.
மலையகமக்களுக்காக கட்சி ஆரம்பித்தது போல் காட்டிவிட்டார்
.வன்னியசிங்கமும் ஊர்காவற்துறை.வி.நவரத்தினமும் எதிர்த்தார்கள்.
வி . நவரத்தினம் மட்டுமே எதிர்த்து வாக்களித்தார்.
உறவுகளே மலையகம் சீரழிந்தது.போதும்
இவர்களால் யாழ்ப்பாணத்துக்கு எந்த நன்மையும் இல்லை
மலையகத்துக்கு சிக்கலை உருவாக்கும் .
உறவுகளே புவியியல் அரசியலில் இந்திய மக்கள் காந்தியை இனம் கண்டார்கள்.
ஆபிரிக்கமக்கள் நெல்சன் மண்டேலாவை இனம் கண்டார்கள்.
இந்த அழைப்பிதழில் உள்ள ஒருவராவது மக்கள் இனம் கண்ட தலைவராக.உள்ளாரா.

பணத்தினால் வென்ற பாராளுமன்றவாதிகள்.
மற்றவர்கள் பாவம்.n.g.o பணத்துக்காக வருவார்கள்.
மலையக மக்களே நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். நன்றி.

Annesley Ratnasingham :  Sithambaram Drmogan ...இது சரியாக திட்டமிட்டு செய்யப்படும் ஒரு பெரிய வலைப்பின்னல் ....இந்த மக்களை வேறு ஒரு திசைக்கு கொண்டுசெல்ல போகிறது ...

Pragash Y Rajarathnam  :  அண்ணா, இந்த விடயத்தை துணிந்து பதிவிட்டதற்கு எனது நன்றிகள்
மற்றும் வாழ்த்துக்கள் ...
மலையகம் 200 என்ற போர்வையில் மன்னாரில் இருந்து செய்த மடத்தனத்தை தந்தை செல்வா அறக்கட்டளை என்று money laundering செய்யும் கூட்டம்
அங்கு பல விடயம் செய்தும் தமக்கு மார்க்கெட்டிங் கிடைக்காததால் இங்கு ரெண்டு டொய்லெட்டைய கட்டி பெற்றுக்கொள்ளலாம் என்று உள்ள வந்துவிட்டார்கள் ...

அதற்கு இங்கு பாவாடைகளை நம்பி காலத்தை ஓட்டுபவர்களும்  அரசியலில் முகவரி இல்லாத கூட்டமும் ஒத்துழைப்பு வழங்க அவர்கள் பாடு அவர்கள் எதிர்பார்த்ததை விட வெகு சிறப்பாக ஆகியுள்ளது ....

மடத்தனமாக ராதாவும் திகாவும் இதில் சிக்கியும் உள்ளார்கள் ....
சிறப்பு ... செந்தில் அண்ணாவுக்கும் ஜீவனுக்கும் சிறந்த எதிர்காலத்துக்கு இவர்கள் வித்திடுவார்கள் ..... வடக்கில் மலையக மக்களை அவர்கள் தோ கா ... என்றோ கள்ளத்தோணி என்றோ கூறுவதில் தப்பே இல்லை!

Annesley Ratnasingham  :  Pragash Y Rajarathnam ....இது Saumiyamoorthy Thondaman ஐ குறிவைத்து செய்யும் தாக்குதல் திரு சௌமியமூர்த்தி தொண்டைமான் ஐ பற்றி DanTV இல் எடுத்து எறிந்து பேசும்போதே நான் எழுதி இருந்தேன்...
இலங்கையில் உள்ள அனைத்து விடயங்களும் தமக்கு கீழே என்றும் அனைவரையும் தமக்கு கீழே கொண்டுவரும் நடவடிக்கை ...

இது ஜீவனை கடுமையாக பாதிக்கும் ...இப்படி வருவார்கள் பின்பு அப்படி வருவார்கள் ...தெல்லிப்பளையில் சிரடையில் தண்ணி கொடுத்த குடும்பம் ..

Pragash Y Rajarathnam :  Annesley Ratnasingham They can't do anything with Jeevan, you know the big hands are behind their politics... They may give some political handshake to addressless buggers ... Selva also one of the reasons for the current situation of hilll country society.

Annesley Ratnasingham :  Pragash Y Rajarathnam ...ஆனாலும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் அரசியலில் யாரும் எந்த பக்கமும் விளையாடுவார்கள் ..யாரையும் நம்ப முடியாது ..ஒரு 100 வருடத்தின் பின் தான் தாம் செய்த பிழைகளை உணர்வார்கள் ..மலையக மக்கள் சரியான சரித்திரத்தை அறிந்து காய் நகர்த்தவேண்டும்.

 Annesley Ratnasingham :  Pragash Y Rajarathnam ...செல்வநாயகத்தின் பேரன் இந்தியாவில் பயிற்றப்பட்டு வந்திருக்கிறார் என்பதை மறக்கூடாது ..

Annesley Ratnasingham : Pragash Y Rajarathnam ...நாங்கள் நடக்கபோதும் பிழைகளை மக்களுக்கு சொல்லலாம் ...அதிகாரத்தில் இருப்பவர்கள் இன்று தமக்கு தேவையானவற்றை தான் செய்வார்கள் ...50 வருடத்தின் பின் நடக்கும் பாதிப்புகளை பற்றி கவலைப்படமாட்டார்கள் ...

Pragash Y Rajarathnam :  Annesley Ratnasingham that's true and agree with you anna.

Letchuman Shanmuganathan : இவர்கள் மலையகம் தமிழர்கள் 200 நடை பயணம் பின்னணியில் இருந்தவர்கள். பின்பு மலையக தமிழர் இன அடையாளம் ஏன்றவர்கள்.

Annesley Ratnasingham : Letchuman Shanmuganathan ....இதை தடுத்து நிறுத்த வேண்டும் .,,கிறிஸ்தவ அமைப்புகளை வைத்து செய்கிறார்கள் ..

Premraj Thangavel : இதனை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்று பார்த்தால் புரியும் ஏன் இதனை செய்து இருக்கிறார்கள் என்று
மலையக மக்கள் முன்னணி கட்சியை ஆரம்பித்தவர் நண்பர் சந்திரசேகரன்
இன்று அவரது குடும்பத்தினரை கட்சி அலுவலகத்தில் நுழைய விடுவதில்லை

Letchuman Shanmuganathan : Premraj Thangavel எல்லாம் மலையகத்தில் அரசியல் வியாபாரம் ஆகிவிட்டது. எதையும் உருப்படியாக செய்வதில்லை.. எல்லாம் வெரும் சவுண்ட் விட மட்டுமே தெரியும்..

Annesley Ratnasingham : Premraj Thangavel ...மலையக மக்கள் தமக்கு தாமே குழி பறிக்கிறார்கள் ...நீண்டகாலத்தின் பின் ஜீவன் ஒரு நல்ல இளம் தலைவன் ..சரி பிழை ஆயிரம் இருக்கலாம் ....மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும் ..

Premraj Thangavel : Annesley Ratnasinghamசரியாக சொன்னீர்கள்

Rubasangary Veerasingam Gnanasangary : இங்க மலையகத்து அரசியல் பேசுபவர்கள் 100% சுத்த சங்கிகள். பகுத்தறிவோ சமூக நீதி மற்றும் மனித நேயத்துக்கு எதிரானவர்கள்.
எந்தவித சமூக கண்ணோட்டமும் அற்ற வெறும் வெறுப்பையும் பழி கூறுவதையுமே (blaming others) வழக்கமாக கொண்டவர்கள்.
இதுகள் எல்லாம் படுமோசமான முட்டாளான டிமோவின் அபிமானிகள்.
குறிப்பாக பிஜேபி மற்றும் RSS இன் மதவாத கொள்கைகளுக்கு சார்பாக பேசுபவர்கள்.
செல்வநாயகம் ஒரு கிறிஸ்த்தவர் என்பதால் நிச்சயமாக கொடுக்கை கட்டிக்கிட்டு வருவார்கள். செல்வநாயகத்தை நானே மதித்ததில்லை.
காரணம் அவரது அன்றைய அரசியல் செயற்பாட்டை இன்று நாம் மீட்டுப் பார்க்கும்போது இன்றைய இன முரண்பாட்டின் ஒரு காரகர்த்தா என்று புரிகிறது.
நினைவு கூறும் அளவுக்கு செல்வநாயகம் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது.
ஆனால், பிறந்த நாளை ஜெயந்தி என்று மாற்றுகிறார்கள் பாருங்க!
சுத்த சங்கிகள். சனாதன அடிமைகள்.

Raju Baskaran Baskaran : Rubasangary Veerasingam Gnanasangary ஐயா உங்கள் முட்டாள் கதைகளில் பிஜேபி மற்றும் RSS ஏன் ஐயா கொண்டுவாரிங்க.
எங்கள் ஜெயத்தி என்கின்ற ஜெயமான சொல்லை இந்த பைத்தியங்கள் பயன்படுத்துவற்காக ஏன் ஐயா சானதனத்தை குறை சொல்லுகின்றீர்கள்.
உங்களுக்கு மண்டை சரி இல்லையா?
நீங்கள் என்ன சனாதனத்தை எதிர்கும் மட அடிமையா?

Annesley Ratnasingham : Rubasangary Veerasingam Gnanasangary ....நண்பரே இதில் மத சண்டையை உருவாக்க கூடாது ...
இந்த மலையகம் 200 ஏற்றத்திற்கு பின்னால் பல பாவாடைகளும் உண்டு ....
ஆரம்ப கர்த்தாக்கள் இந்த கிறிஸ்தவ பாவாடைகள் தான் ...

Annesley Ratnasingham : Raju Baskaran Baskaran ... மத விடயங்களை தவிர்த்து இதை சரியான பாதைக்கு எடுக்கவேண்டும் ...மதங்களை இவர்கள் இந்த மலையகம் 200 இல் புகுத்தி வைத்திருப்பதே ஒரு பெரிய திட்டத்துடன் தான் ...அவர்கள் சரியாக திட்டமிட்டு செய்கிறார்கள் ..

Sivananthan Muthulingam :  செல்வநாயகம் மலையகம் என்ற வார்த்தையைப் பாவித்து பொன்னம்பலத்தை வீழ்த்தியதுதான் வரலாறு.
செல்வநாயகம் மலையாக மக்களுக்கு என்ன செய்தார் என்று யாராவது சொல்றீங்களா?
பண்டா-செல்வா ஒப்பந்தம் செய்த போது மலையாக மக்களை அம்போ என்று கை விட்ட பரட்டைதான் செல்வநாயகம்.
மலையக மக்கள் பற்றி செல்வநாயகம் பாராளுமன்றத்தில் செய்த வேலை என்ன?
ஒண்ணுமே கிடையாது.
எனவே மலையாக மக்கள் செல்வநாயகம் கும்பலை புறக்கணிப்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுக்கும்.

Annesley Ratnasingham : Sivananthan Muthulingam ....அண்ணர் தமது சரித்திரத்தையே சரியாக தெரியாமல் யாரோ கோடிக்கணக்கான செலவு செய்கிறான் என்பதற்காக பின்னால் ஓடுகிறார்கள் ..

Tharmalingam Ganesh : Sivananthan Muthulingam தகவலுக்கு நன்றிகள்

கருத்துகள் இல்லை: