செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்! கொவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் ஒரு நேர்மையான பெரும் தலைவர் மங்கள சமரவீரா அவர்கள்! எந்த விதமான பாகுபாடும் இல்லாத ஒரு அபூர்வ அரசியல் தலைவர். எல்லாப்பக்கமும் இனவாதிகளும் மதவெறியர்களும் ஊழல்வாதிகளும் தாராளமாகவே மலிந்திருக்கும், காலத்தில் ஒரு லட்சிய அரசியலை முன்னெடுத்தவர் மங்கள சமரவீர அவர்கள்! அமரர் திரு மங்கள சமரவீராவுக்கு வீர வணக்கம்!
Former minister Mangala Samaraweera passes away

திரு .மங்கள சமரவீரவுக்கு கடந்த 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.
பின்னர் அவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
newsfirst.lk : Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) காலமானார்.
COVID தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிதி அமைச்சராக மங்கள சமரவீர பதவி வகித்திருந்தார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையும், 2015 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரையும் அவர் வௌிவிவகார அமைச்சராக செயற்பட்டார்.
இதனைத் தவிர, மேலும் பல அமைச்சுப் பதவிகளை ஏற்று மங்கள சமரவீர ஆற்றிய சேவை காரணமாக மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

கருத்துகள் இல்லை: