சனி, 28 ஆகஸ்ட், 2021

ஜால்றா போடுவோர்க்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை : தலைவர்கள் புகழ் பாடாதீர்கள்.. நடவடிக்கை எடுப்பேன்!

'' Keep anything limited ... I will take action against DMK MLA '' - Chief Minister indignant in the assembly!

நக்கீரன் செய்திப்பிரிவு  : தமிழக  சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி பொது பட்ஜெட்டும் அதற்கடுத்த நாளான 14ஆம் தேதி வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
  நேற்று (27/8/2021) சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தொடக்க நாளிலேயே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதேபோல் அமைச்சர்களுக்கும் எனது கண்டிப்பான வேண்டுகோள். நீங்கள் பதிலளிக்கும் நேரத்தில் உங்களது உரைகளில் உங்களை ஆளாக்கிய, உங்களை உருவாக்கிய நம்முடைய முன்னோடிகளின் பெயர்களை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தி பேசுவது முறை.  பதில் அளித்து பேசுவதற்கு கூட சில வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கேள்வி நேரத்திற்கும் பயன்படுத்தக்கூடாது. 

அதேபோல் சட்டமுன்வரைவை அறிமுகப்படுத்தும் போதும் பயன்படுத்த கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். இப்பொழுது சட்டத்துறை அமைச்சர் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதற்கு நேரடியாக சட்டமுன்வடிவு தொடர்பான பேச்சுக்கு வரவேண்டும். எனவே இதை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இதுதான் என் கட்டளை. இதுதான் இங்குள்ள அமைச்சர்களுக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் என்னுடைய கட்டளை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியிருந்தார்.
 
 இந்நிலையில் இன்று (28/8/2021) திமுக எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ''மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் என்னை புகழ்ந்து பேசினால் திமுக எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்னை புகழ்ந்து பேச வேண்டாம்'' எனக்கூறிய மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏ ஐயப்பன் புகழ்ந்து பேசியதால் எச்சரிக்கை விடுத்துள்ளார். ''கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் மீது நடவடிக்கை எடுப்பேன்'' எனவும் பேசி முடித்தார்.
 
 
அதேபோல் ''எதையும் லிமிட்டாக வைத்துக் கொள்ளுங்கள். நேரத்தின் அருமை கருதி மானிய கோரிக்கை விவாதத்தில் என்னைப் பற்றிப் பேசுவதை தவிர்க்க வேண்டும். நேற்றே இதுதொடர்பாக கட்டளையிட்டேன்'' என இன்றும் எச்சரித்துள்ளார்.

மின்னம்பலம் : சட்டப்பேரவையில் தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ ஐயப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) எச்சரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் உரைகளின் போதும், பதில் அளிக்கும் போதும் தங்களை உருவாக்கிய ஆளாக்கிய முன்னோடிகளைக் குறிப்பிட்டு வணக்கம் செலுத்திப் பேசுவது முறையாக இருக்கும்.
ஆனால் கேள்வி நேரத்துக்கும், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அமைச்சர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் இன்றும் மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐயப்பன் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் சாதனைகள் ஆகியவை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று நேற்றே சொல்லியிருந்தேன். சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்துப் பேச வேண்டும். எதையும் அளவுடன் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.  -பிரியா

 

 மின்னம்பலம் : சட்டப்பேரவையில் தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ ஐயப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) எச்சரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் உரைகளின் போதும், பதில் அளிக்கும் போதும் தங்களை உருவாக்கிய ஆளாக்கிய முன்னோடிகளைக் குறிப்பிட்டு வணக்கம் செலுத்திப் பேசுவது முறையாக இருக்கும்.
ஆனால் கேள்வி நேரத்துக்கும், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அமைச்சர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் இன்றும் மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐயப்பன் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் சாதனைகள் ஆகியவை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று நேற்றே சொல்லியிருந்தேன். சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்துப் பேச வேண்டும். எதையும் அளவுடன் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: