சனி, 28 ஆகஸ்ட், 2021

விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ், திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம்- சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்பு

 மாலைமலர் : திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ், திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம்- சட்டசபையில்
சென்னை:  தமிழ்நாடு சட்டமன்றத்தில்  இன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான  தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இதற்கு காங்கிரஸ், பா.ம.க, வி.சி.க, ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்த நிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க எதிர்ப்புதெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.  இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: