செவ்வாய், 9 ஜூன், 2020

ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம் தொடர் ..84 - 85

  NAPA : ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம்  தொடர் 84 *
அதிகார வர்க்கத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர் அவர்களுக்குள் ஒரு இணைப்பை ஆர்எஸ்எஸ் உருவாக்கி வைத்துள்ளது
அதோடு ஐபி ரா போன்ற புலனாய்வு துறைகளிலும் ஆர்எஸ்எஸ் தனிப்பட்ட நபர்களோடு இரகசியத் தொடர்பை வைத்துள்ளது
இந்த உளவு நிறுவனங்களும் எதிரிகளின் முகாம்களில் ஊடுறுவதற்கு ஆர்எஸ்எஸ்காரர்களின் உதவியை பயன்படுத்திக்கொள்கிறது
நூற்றுக்கணக்கான காஷ்மீர் மாநில ஆர்எஸ்எஸ் பார்ப்பன இளைஞர்கள் (பண்டிட்டுகள்) தனிநாடு கேட்கும் முஸ்லிம்கள் அமைப்பில் ஐடி மற்றும் ரா நிறுவனங்களின் சார்பில் உளவாளிகளாக ஊடுருவியுள்ளனர்
இந்த இளைஞர்களுக்கு எல்லாம் இஸ்லாம் முறைப்படி பேசுவது தொழுகை நடத்துவது போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் இந்த உளவு நிறுவனங்கள் தருகின்றன
இவர்களில் சிலரை முஸ்லிம் போராளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டனை அளித்துள்ளனர்
நான் நமோஸ் செய்வேன் குர்ஆன் ஓதுவேன் ஆனாலும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்து தண்டனை அளித்து சித்திரவதை செய்தார்கள் என்று வித்யார்த்தி பர்சித் அமைப்பை சார்ந்த ஒரு மாணவர் அவுட்லுக் பத்திரிக்கையாளரிடம் ஒப்பு கொண்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் வெளிநாட்டு தொடர்புக்காக ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது இதன் பொறுப்பாளராக இருப்பவர் சமன்லால் என்பவர்.
இந்த அமைப்பின் மூலம்
ஆர்எஸ்எஸ் இளைஞர்களை
கேட்டுப் பெற்று அவர்களுக்கு
ரா உளவு அமைப்பின் மூலம்
முஸ்லிம் மத பயிற்சிகளை அளித்து பிறகு பாகிஸ்தான் நாட்டுக்குள் உளவாளியாக செயல்பட
அனுப்பி வைக்கிறார்கள்
இவை தவிர விவசாயிகளை இந்துத்துவா ஆதரவாளராக மாற்ற பாரதிய கிசான் சங் என்ற அமைப்பு
விஞ்ஞானிகளை இந்துத்துவா ஆதரவாளராக மாற்ற
விஞ்ஞானபாரதி என்ற அமைப்பு
வழக்கறிஞர்களை
இந்துத்துவா ஆதரவாளராக மாற்ற
அகில பாரதிய அதிபர் ஷேக்
என்ற அமைப்பு
மலைவாழ் மக்களை
இந்துத்துவா ஆதரவாளராக மாற்ற
வனவாசி கல்யாண் ஆஷ்ரம் என்ற அமைப்பை துவங்கி
இந்துத்துவா என்ற விசவிதையை நாடுமுழுவதும் தூவ
அமைப்பாக நடத்துகிறார்கள் .
இனி பெண்களைப்பற்றி ஆர்எஸ்எஸின் நிலைப்பாடு என்ன??? பார்ப்போமா

Napa : ஆர்எஸ்எஸ்_ஓர்_அபாயம்_தொடர் 85
ஒரு பெண் நல்ல மனைவியாகவும் மகளாகவும் தாயாகவும்
குடும்பத்துக்குள் மட்டுமே
செயல்பட வேண்டுமே தவிர
வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது ஆர்எஸ்எஸ் கொள்கை.

எனவே ராஷ்டிரா சேவிகா சமதி என்ற ஆர்எஸ்எஸ் பெண்கள் அமைப்பு
குடும்ப ரீதியாக செயல்பட்டு வந்தது. ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சென்று குடும்ப உறுப்பினர்களுடன் பழகி இந்தக் கொள்கைகளை பிரச்சாரம் செய்தனர். (ஆர்எஸ்எஸ் விதிகள் படி
அந்த அமைப்பில் பெண்கள் உறுப்பினராக இருக்க முடியாது)
அயோத்தி பிரச்சனையின் போது தான் பெண்களை இந்து தீவிரவாதிகளாக்கி அவர்களை களத்தில் இறங்கிவிடும்
முயற்சியை ஆர்எஸ்எஸ் செய்தது.
இந்துப் பெண்களே வீரத்தையும் நல்லொழுக்கத்தையும் விதைக்க
போர்க் குரல் எழுப்புங்கள் என்ற முழக்கத்தோடு பாபர் மசூதி இடிப்பு பிரச்சனையின் போது
பெண்களை களத்தில் இறங்கினர் ஆர்எஸ்எஸ் .
அயோத்தி பிரச்சினையின் போது 5000 ஷாகாக்கள் பெண்களுக்காக நடத்தப்பட்டு அதில் அவர்களுக்கு உடல் பயிற்சிகளும் தரப்பட்டன அயோத்தியில் கரசேவை செய்ய வந்தவர்களுக்கு சாப்பாடு தயாரிக்க ஆயிரக்கணக்கான பெண்களை குடும்பத்தோடு இந்த மதவெறி அமைப்புகள் ஈடுபடுத்தியது .

 இங்கிலாந்து
ஹாலந்து
அமெரிக்கா
கனடா
கென்யா
தென்ஆப்பிரிக்கா
மியான்மர்
மலேசியா
போன்ற நாடுகளிலும்
இந்த அமைப்புகள்
துவங்கப்பட்டு இருக்கின்றன
பெண்களுக்கான தனி அமைப்பு துவங்கப்படுவதை எதிர்த்த
இந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள்
பாபர் மசூதி இடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தங்கள் முடிவை மாற்றி பெண்களை முன்னிறுத்தி
இந்த காரியம் செய்வதற்கு சம்மதித்தனர்.
நாட்டில் மதவெறியையும் கலவரத்தையும் ஏற்படுத்துவதற்கு
எந்த எல்லைக்கும் செல்வார்கள்
ஆர்எஸ்எஸ் என்பதற்கு
இதைவிட சான்று தேவையில்லை.
ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்பு வெளிநாட்டு தொடர்புகளையும் ஏற்படுத்தி அங்கேயும்
இந்த மத வெறி விஷவிதைகளை தூவியுள்ளது.
வெளிநாட்டு தொடர்புகளிலும்
ஆர் எஸ் எஸ் உள்ளதா??
ஏசியன் ஏஜ் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல்களை பார்ப்போமா!!
____தோழர்களே காத்திருங்கள்

கருத்துகள் இல்லை: